Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, May 20, 2013

ஸ்ரீரங்கம் ஜீயர் மறைவிற்கு சிறப்பு பிரார்த்தனை


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சிறப்பு பிரார்த்தனை.
ஸ்ரீ தன்வந்திரி பகவான்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அகோபில மடத்தின் 45வது ஜீயராக இருந்து வந்தவர் நாராயண யதீந்த்ர மகாதேசிகன் ஆவார். இவர் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பல அரிய பெரிய கருத்துக்களைக் கூறி ஆன்மிகத்தை பரப்பி, சிஷ்யர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படச் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இப்படிப்பட்ட பெருமைக்குரிய ஜீயர் அவர்கள் 18.05.2013 சனிக்கிழமை அன்று ஆசார்யன் திருவடியடைந்தார்.

அவருடைய இந்த மறைவிற்கு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடம் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் அனைவரும், அவருடைய பக்தர்களின் மனம் அமைதியடைய ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். மேலும் இந்த பிரார்த்தனையில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார். 

No comments:

Post a Comment