Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, August 31, 2022

vinayagar chathurthi special 48 mega Ganapathi Homams on Danvantri Peedam At 31.8.2022

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு

 48 ஹோம குண்டங்களில் ,48 மஹா கணபதி ஹோமங்கள்

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டும், உலக மக்கள் நலன் கருதி  இன்று  ஆவணி 15ம்தேதி , 31.8.2022ம்தேதி,  புதன்கிழமை காலை 10 மணிக்கு   27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும் ,9 நவக்கிரகங்களுக்கும் என மொத்தம்  

48 ஹோம குண்டங்கள் அமைத்து, 48 விநாயகர் சிலைகள்  வைத்து   தன்வந்திரி குடும்பத்தினர், சேவார்த்திகள்,  பக்தர்கள், பொதுமக்கள் என மொத்தம் 48 பேர் அமர்ந்து  நடத்திய  மாபெரும் 48 மஹா கணபதி ஹோமங்கள் நடைபெற்றது. 

 முன்னதாக ஸ்ரீ விநாயகர்  தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கும்  நவ கலச திருமஞ்சனம் நடைபெற்று ,சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு,  108  தேங்காய்கள் சிதலைக்காய்களாக விடப்பட்டது.

 48  ஹோம குண்டங்கள் வைத்து நடைபெற்ற மஹா கணபதி  ஹோமத்தில், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான  அருகம்புல்,  கரும்பு ,வேர்க்கடலை, மக்காளச்சோளம் , அப்பம், அவல் பொறி,சுண்டல்  மற்றும் விளாம்ப-ழம்  ஆகியவை  வைத்து நிவேதனம் செய்து  சமர்பிக்கப்பட்டது.

   பலன்கள்

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு நடைபெற்ற இந்த 48 கணபதி ஹோமங்களில்  உலக மக்கள் நலன் கருதியும்,  நட்சத்திர, நவக்கிரக தோஷங்கள் மற்றும்  12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் ஏற்படவும்,  கெட்ட சக்திகள் அழித்து நன்மை பெறவும்,  குழந்தைப்பேறு  கிடைக்கவும் ,  அனைத்து விதமான தடைகள்  நீங்கி விரைவில் திருமணம், தொழில், வியாபாரம், விவசாயம் , உத்தியோகம்  போன்றவைகள்  நல்ல முறையில் அமைந்து குடும்ப சுபிட்சத்துடனும்,  மன மகிழ்ச்சியுடனும்  வாழ ப்ரார்த்தனை செய்யப்பட்டது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளாலேயே ஹோமம் செய்து வழிபட்டு சென்றனர். 

48 மஹா கணபதி  ஹோமத்தில் பங்கேற்றதின் மூலம்  மஹா கணபதியின்  பரிபூரண அருளால் கர்ம வினைகள்  நீங்கி   நல்லபுத்தி, ஞானம் கிடைக்கும்,  புண்ணியம் உண்டாகும், வீட்டில் தானியம் பெருகும், நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும்,  பொன்,பொருள் சேர்க்கையும், செயல்களில் வெற்றியும் ஏற்படும்,  நோய்கள் குணமாகும் என்பது  பங்கு பெற்ற பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

காலச்சக்கர பூஜை 




இதனை தொடர்ந்து 27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள், 12 ராசிகளுக்கு உரிய  விருட்சங்களுக்கு கலச பூஜையும், சிறப்பு  ப்ரார்த்தனையும்  நடைபெற்றது.

மகா கணபதி ஹோமம் மற்றும்  பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள், பக்தர்களுக்கு  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன், பிரசாதமும் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tuesday, August 30, 2022

vinayagar chathurthi special mega 48 Ganapathi Homams on Danvantri Peedam At 31.8.2022



 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி

27நட்சத்திர,  9 நவக்கிரக,12 ராசிகளுக்கும், 48  ஹோமகுண்டங்கள் அமைத்து
48 ஹோம குண்டங்களில் மாபெரும் கணபதி  ஹோமங்களுடன்
காலச்சக்கர பூஜை

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  விநாயகர் சதுர்த்தியை  ஒட்டி  நாளை ஆவணி 16ம்தேதி , 31.8.2022ம்தேதி,  புதன்கிழமை காலை 10 மணிக்கு , விநாயகர் சதுர்த்தியை ஒட்டி  27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும் ,9 நவக்கிரகங்களுக்கும் என மொத்தம்  48 ஹோம குண்டங்கள் அமைத்து, 48 கணபதிக வைத்து  48 பேர் அமர்ந்து  நடைபெற  உள்ள    மாபெரும்  மஹா கணபதி ஹோமங்களுடன்  நடைபெறும் காலச்சக்கர பூஜையும்  மிகவும் சிறப்பு வாய்ந்தது என்கின்றனர்  தன்வந்திரி குடும்பத்தினர்.

48  ஹோம குண்டங்கள் வைத்து நடைபெறும்
மஹா கணபதி  ஹோம பலன்கள்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் இந்த 48 கணபதி ஹோமங்கள்  மூலம்  நட்சத்திர, நவக்கிரக தோஷங்கள் மற்றும்  12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் ஏற்படும் மேலும்  கெட்ட சக்திகளை அழித்து நன்மை தரும்,  குழந்தைப்பேறு  கிடைக்கும்,  அனைத்து விதமான தடைகள்  நீங்கி விரைவில் திருமணம், தொழில், வியாபாரம், விவசாயம் , உத்தியோகம்  போன்றவைகள்  நல்ல முறையில் அமைந்து குடும்ப சுபிட்சத்துடனும்,  மன மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.

 ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  மஹா கணபதியின்  பரிபூரண அருளால் கர்ம வினைகள்  நீங்கி   நல்லபுத்தி, ஞானம் கிடைக்கும்,  புண்ணியம் உண்டாகும், வீட்டில் தானியம் பெருகும், நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும்,  பொன்,பொருள் சேர்க்கையும், செயல்களில் வெற்றியும் ஏற்படும்,  நோய்கள் குணமாகும்.எனவே   பொதுமக்கள், பக்தர்கள் இந்த ஹோமங்களில்  பங்கு பெற்று , விநாயகர் ஆசியுடன் , ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியும் ஒரு சேர பெற்று  நலம்  பல பெறலாம்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கும், 27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள், 12 ராசிகளுக்கு உரிய  விருட்சங்களுக்கு கலச பூஜையும், சிறப்பு  ப்ரார்த்தனையும்  நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 

Saturday, August 27, 2022

KURUTHI POOJA, BAGAVATHI SEVA AND RED CHILLY YAGAM ON AAVANI AMAVASAI 26.08.2022

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஆவணி அமாவாசையை முன்னிட்டு குருதி பூஜை, 

பகவதி சேவா, மிளகாய் யாகம்,

ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி ,  ஆவணி அமாவாசையை முன்னிட்டு  கேரள முறை  குருதி பூஜை, பகவதி சேவா, மகிஷாசுரமர்த்தினிக்கு மகா  அபிஷேகம் மற்றும்  ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம் ஆகியவை நடைபெற்றது .

அமாவாசை யாகம்

அமாவாசை  பூஜைகள் மற்றும் ஹோமம்  சந்ததியினர் தோஷமில்லாமல்  நலமுடன்  வாழ வழி செய்து, பித்ருக்களை நினைவு கூர்ந்து  நாம் செய்யும் வழிபாடுகள்  தர்ம காரியங்கள் ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சி அளித்து முன்னோர்களின் பரிபூரணி ஆசி கிடைக்கவும்  , துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள்  ஆத்மா சாந்தி அடைந்து முக்தி கிடைக்கவும், செய்வினை கோளாறுகள் , ஒரே வீட்டில்  இருவருக்கு ராகு திசை அல்லது கேது திசை  நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள்  தீரவும், நாகதோஷம், சர்ப்பதோஷம், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம்  கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக்கூடிய தடைகள் அகலவும், பணப்பிரச்சனை , கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் , ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 24 மணி நேர அணையா யாக குண்டத்தில்  அமாவாசை யாகம் நடை பெற்றது. 

முன்னதாக நட்சத்திர சாந்தி பரிகார ஹோமமும்  நடைபெற்றது.

ஹோமம் மற்றும் பூஜைகளில்  சுற்றுப்புறத்தில் உள்ள  நகர,கிராம பொதுமக்கள்  மற்றும் வெளி மாநில பக்தர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற சாமி தரிசனம் செய்தனர்.

 பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின்  ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஆசி வழங்கினார்.




 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Friday, August 26, 2022

vinayagar chaturthi shodasa ganapathi Homam on 31.8.2022 at Sri Danvanthri Arokya peedam

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 

வாலாஜாபேட்டை  ஸ்ரீ  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

சோடஷ கணபதி ஹோமம் 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை  ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில்  விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டும் , உலக நலன் கருதியும்   வருகிற  31.08.2022  (புதன்கிழமை) ‘‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’  டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி ,16 கலசங்கள் கொண்டு ஷோடச கணபதி யாகத்துடன் ஸ்ரீ  விநாயகர் தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.

இந்த யாகத்தில்   பொரி,  வடை,  சுண்டல்,  மோதகம், வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு. தயிர்சாதம்  போன்ற நிவேதனங்கள்.

கரும்புதுண்டு, அவல், சத்துமாவு, நெல்பொரி,  நாட்டு சர்க்கரை,  எள்,  அப்பம்,  வாழைப்பழம் போன்ற அஷ்ட திரவியங்கள், அரசாங்க நன்மைதரும் அரசங்குச்சி,     ஏவல்கள் பில்லி சூன்யங்கள் விலக்கும் கருங்காலிக்கட்டை,  கிரக கோளாறுகள் நீக்கும் வன்னிக்குச்சி, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி தரும் புரசங்குச்சி, செல்வம் தரும் வாய்ப்பு உண்டாக வில்வக்குச்சி, புகழைச் சேர வைக்கும் ஆலங்குச்சி , காரியத்தடை விலகி வழக்குகளில் வெல்லச் செய்யும் நொச்சி , மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும் நாயுருவி, எதிரிகள் இல்லாத நிலை உருவாகும் எருக்கன் குச்சி- போன்ற அஷ்ட சமித்துகள் நினைத்த காரியம் கைகூட யாகத்தில் சமர்ப்பிக்கப்படும்.

தொடர்ந்து பால், தயிர் ,இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம்,விபூதி, கரும்புச்சாறு, போன்ற 8 விதமான அபிஷேக பொருட்களைக் கொண்டு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. தும்பைப்பூ, அருகம்புல், எருக்கம்பூ, தாமரைப்பூ, முல்லை, மல்லிகைபூ, தவனம், மரிக்கொழுந்து போன்ற விஷேச அஷ்ட மலர்களை கொண்டு சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது. 

ஹோமத்தின் போது எப்போதும் பாதுகாப்பு, செல்வம் வளர, கடன் தொல்லை நீங்க, தேவியின் அருள்கிட்ட, உலகம் வயப்பட, அதிர்ஷ்ட லாபம், செல்வம் கிட்ட,  மகிழ்ச்சி ஏற்பட, எல்லாக் காரியமும் நிறைவேற, சீக்கிரம் பயன்தர,  நோய் நீங்க,  பிள்ளைப் பேறு உண்டாக,  மன சாந்தி   ஏற்பட,  நவக்கிரக சாந்தி முக்காலமும் உணர,  விசாலபுத்தி,  தைரியம் வர, தொல்லை யாவும் நீங்க, ராஜயோகம். கலை வளர எல்லாக்காரியங்களும் வெற்றி கல்விப்பேறு முழுப்பலனும் கிட்ட, குருவருள் உண்டாக, தாப நீக்கம், நினைத்ததை அடைய,  ஸர்வாபீஷ்ட ஸித்திம் ஆபத் நிவர்த்தி, மனோவச்யம், மேதாபிவ்ருத்தி, விஷ்ணு பக்தி ,போன்ற காரணங்களுக்காக வச்யஸித்தி கிடைக்க கூட்டு பிரார்த்தனையும், நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.


Thursday, August 25, 2022

Nakshtra Shanthi special Homam & Karthaveeryajunar Special Abishekam on 25.08.2022 at Sri Danvantri Arogya Peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பூச நட்சத்திர சாந்தி பரிகார ஹோமம் /கார்த்தவீர்யார்ஜூனர் சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது.


ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , திருவாதிரை நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலான 16 நாட்கள்  ஹோமம்  தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை  நடைபெற்று வருகிறது. 

மூன்றாவது நாளான  இன்று 25.8.2022  ம்தேதி வியாழக்கிழமை  மகா தன்வந்திரி ஹோமம், பூசம்  நட்சத்திர  சாந்தி பரிகார ஹோமம், கார்த்தவீர்யார்ஜூனர்  சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.  

ஹோமம் மற்றும் பூஜைகளில்  ஆரணி தொழிலதிபர். அசோக் லோகநாதன் குடும்பத்தினர்கள்  மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள  நகர,கிராம பொதுமக்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

பூஜை மற்றும் ஹோமங்களில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து நாளை  அமாவாசை யாகம்  மற்றும் ஆயில்யம் நட்சத்திர பரிகார ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுகிறது.

 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.




AVANI AMAVASAI HOMAM & POOJA at DANVANTRI PEEDAM on 26.8.2022, 27.8.2022

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு குருதி பூஜை, பகவதி சேவா, மிளகாய் யாகம், ஔஷதம் வழங்குதல்,மகிஷாசுரமர்த்தினிக்கு மகா அபிஷேகம் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது . இருப்பினும் சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை திதி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது அந்த வகையில், ஹோமமே ஷேமம்,யாகமே யோகம் என்ற தாரக மந்திரத்துடன் பல்லாயிரக்கணக்கான யாகங்கள் நடைபெற்றுள்ள ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், ஆவணி அமாவாசை திதியை முன்னிட்டு நாளை 26.8.2022 வெள்ளிக்கிழமை குருதி பூஜை, பகவதி சேவா, மிளகாய் யாகம், ஔஷதம் வழங்குதல்,மகிஷாசுரமர்த்தினிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. அமாவாசை யாகத்தின் சிறப்பு அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் கலந்து கொள்வது சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவு கூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள் தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல் ஆகும். இதனால் முன்னோர்களின் பரிபூரண ஆசி நமக்கு கிடைக்கும், துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைந்து முக்தி கிடைக்க பெறுவார்கள்.மேலும் செய்வினை கோளாறுகள் , ஒரே வீட்டில் இருவருக்கு ராகு திசை அல்லது கேது திசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாகதோஷம், சர்ப்பதோஷம், பில்லி, சூனியம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக்கூடிய தடைகள் அகலவும், பணப்பிரச்சனை , கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் , ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 24 மணி நேர அணையா யாக குண்டத்தில் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மகிஷாசுரமர்த்தினி, ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், ஔஷதம் மற்றும் அன்னப்பிரசாதம் ஸ்வாமிகளின் திருக்கரங்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் 27.8.2022 சனிக்கிழமையும் அமாவாசை திதி உள்ளதால் அன்று காலை சரப சூலினி மகா ப்ரத்தியங்கிரா தேவி யாகம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Wednesday, August 24, 2022

Natchatra shanthi , Ragu kethu special Homam on Prathosam 24.8.2022 at Danvantri arokya peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

நட்சத்திர சாந்தி பரிகார ஹோமம்,பிரதோஷம் மற்றும்  ராகு கேது  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாபேட்டை  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , திருவாதிரை நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலான 16 நாட்கள்  ஹோமம்  தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை  நடைபெற்று வருகிறது. 

இரண்டாவது நாளான  இன்று 24.8.2022  ம்தேதி  புதன்கிழமை  மகா தன்வந்திரி ஹோமத்துடன், புனர்பூச  நட்சத்திர  சாந்தி பரிகார ஹோமம் நடைபெற்று,  நட்சத்திர விருட்சங்கள் உள்ள  காலசக்கரத்திற்கு சிறப்பு பூஜைகளும், பௌமவார  பிரதோஷத்தை  முன்னிட்டும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத 

ஸ்ரீ மரகதேஸ்வருக்கும் , சிவலிங்க வடிவில் உள்ள  468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

ஹோமம் மற்றும் பூஜைகளில்  சிங்கப்பூரை சேர்ந்த வைத்தியநாதன் குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பித்தனர். 

இதில் தமிழகம் மட்டுமின்றி  கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த  ஏரளமான பக்தர்களும்  பங்கேற்று தடைபட்டுள்ள  அனைத்து  சுப நிகழ்ச்சிகளும் விரைவில் நடைபெற வேண்டியும், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம் அகலவும்  ப்ரார்த்தனை செய்து, ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று  சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

பூஜை மற்றும் ஹோமங்களில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக ராகு கேதுவிற்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. 

இதை தொடர்ந்து நாளை ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் நலன் கருதி, ஆயில்ய நட்சத்திர பரிகார ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுகிறது.

 





Tuesday, August 23, 2022

Thiruvathirai to Thiruvonam 16 days special Homams at Sri Danvantri Arogya Peedam




ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில் திருவாதிரை  முதல் திருவோணம் வரை 16 நாள் சிறப்பு ஹோமங்கள்  தொடங்கியது 

தினசரி யாகங்கள்  நடைபெற்று வரும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

பீடாதிபதி   யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  

ஆக்ஞைப்படி,   திருவாதிரை முதல் திருவோணம் வரை  தினமும்  காலை 10 மணி முதல் 11.30 மணி வரை ஆயுள்,ஆரோக்கியம்,குடும்ப ஷேமம், தொழில்,வியாபாரம் வேண்டியும், திருமணம்,குழந்தை பாக்கியம்,தம்பதிகள் ஒற்றுமை,பொன் பொருள் சேர்க்கை வேண்டியும், திருஷ்டி தோஷங்கள், நீங்கவும்,மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெறவும், கல்வி தரம் உயரவும். விபத்துகள் தடுக்கவும்,புதிய வீடு அமையவும் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமங்களுடன் கார்ய சித்தி ஹோமங்கள் பதினாறு செல்வங்கள் கிடைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ தொடர்ந்து 16 நாட்கள்  யாகங்கள் நடைபெற உள்ளது.

இன்று  தன்வந்திரி ஹோமத்துடன் நட்சத்திர சாந்தி ஹோமம்  ஆவணி மாதம் 7ந் தேதி செவ்வாய் கிழமை (23.08.2022) ஏகாதசியுடன்  கூடிய துவாதசி திதியில் கோ பூஜையுடன் தொடங்கியது .

திரு. வேதாகம சிவாச்சாரியார்  பாலாஜி சிவம் அவர்கள் இந்த யாகத்தை  தொடங்கி நடத்தி வைத்தார். 

இந்த யாகத்தில் திருவாதிரை  உள்பட  27 நட்சத்திர காரக்களின் நலன் கருதியும், ஆரோக்கியம்  கருதியும் மேற்கண்ட காரணங்களுக்காகவும்   மகா தன்வவந்திரி ஹோமத்துடன்  நட்சத்திர பரிகார ஹோமம் நடைபெற்றது. இதில்  உரிக்கொடி, கருடகிழங்கு, ஆடா தொடா, விஷ்ணு கிராந்தி, துளசி, பற்படாகம் , கோரைக்கிழங்கு, வெண்கடுகு, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், சீந்தல்கொடி , பசுநெய் போன்ற  100க்கும் மேற்பட்ட  மூலிகை திரவியங்களும், நவதானியங்களும்  யாகத்தில்  சேர்த்து  மகா பூர்ணாஹூதி  நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கும் , மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கும்  சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

 இந்த ஹோமத்தில்  இன்று  வாலாஜா  முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி அவர்கள் குடும்பத்தினருடன்  கலந்து கொண்டு  சிறப்பித்தார். மேலும்  குடியாத்தம்  வாஸ்து.ராஜேந்திரன் குடும்பத்தினர், சென்னையை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஹோமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்ன பிரசாதம்  வழங்கப்பட்டது .

இந்த ஹோமங்கள்  வருகிற  ஆவணி 23 ம்தேதி   வியாழக்கிழமை

( 08.09.2022 )வரை தினமும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 


Monday, August 22, 2022

Vaasthu day & Kamika yegathasi Homam at sri danvantri arokya peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வாஸ்து நாள் மற்றும் 

ஆவணி மாத தேய்பிறை ‘ காமிகா ’ ஏகாதசியை

முன்னிட்டு சிறப்பு ஹோமம் & அபிஷேகம்  

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில்,  ஸ்தாபகர்  ‘யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு ’ டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , உலக மக்கள் நலன் கருதி   ஆவணி மாத 6ம்தேதி ( திங்கள்கிழமை) 22.8.2022 தேதி வாஸ்து நாளை முன்னிட்டு  காலை 7.30 மணி  முதல் 9 மணிக்குள்ளாக  

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரத்யேகமாக பஞ்சபூதங்கள் ,அஷ்டதிக் பாலகர்களுடன்   தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு , வாஸ்து ஹோமமும்  அஷ்ட திரவிய அபிஷேகமும் , சிறப்பு  பிரார்த்தனையும் நடைபெற்றது.

 பூஜைகளை தொடர்ந்து  ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து  பூஜிக்கப்பட்ட  வாஸ்து செங்கல் , வாஸ்து யந்திரம் ,மச்ச யந்திரம் , வில்வகாய் , திருஷ்டி தேங்காய் , திருஷ்டி பொம்மை  ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள்   விரைவில் புதிய  வீடு  அமையவும், மனை தோஷங்கள் அகலவும்  வாஸ்து பகவானை வேண்டி , வாஸ்து தோஷ  நிவர்த்தி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

மேலும்  மிக சிறப்பு வாய்ந்த ஆவணி மாத தேய்பிறை  ‘ காமிகா’ ஏகாதசியை  முன்னிட்டு  காலை 10.30 மணிக்கு  மேல்   ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு  சிறப்பு  மகா   ஹோமத்துடன் , நெல்லிப்பொடி திருமஞ்சனமும் நடைபெற்றது.ஆன்ம பலம் பெருகவும், மனபயம், மரண பயம்,  துன்பங்கள் நீங்கி  நிம்மதி அடையவும், உடல் மற்றும் மன நோய்களிலிருந்து விடுபட்டு நிவாரணம்  பெறவும் , ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறுவதற்கான தடைகள் நீங்கி





,சகல சம்பத்துடன் வாழ  நடைபெற்ற  ஹோமம் மற்றும்  சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


Sunday, August 21, 2022

Sarabeswarar Special Homam and Abishegam at Danvantri Arokya Peedam

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ராகுகாலத்தில் 

சரபேஸ்வரர் சிறப்பு அபிஷேகம்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்   பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி இன்று   21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை  4.30&6.00  ராகுகாலத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. 

இந்த யாகத்தில்  நெய், தேன், நவசமித்துகள், விசேஷ மூலிகைகள், மஞ்சள், பூசனிக்காய், பழங்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள் மற்றும் ஏராளமான விசேஷ திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்று, பால், தயிர் , சந்தனம் , பன்னீர், மஞ்சள், விபூதி  போன்ற பொருள்களுடன்   நவ கலசாபிஷேகம் நடைபெற்றது. 

சரபேஸ்வரர் வழிபாட்டின் சிறப்பு 

நரசிம்மர் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமானதோ  அதே போல்  சரபேஸ்வரர் வழிபாடும் மிகவும் சிறப்பானது என  பக்தர்கள்  வழிபட்டு வருகின்றனர்.  சரபேஸ்வரர் வழிபாட்டின் மூலம் எதிர்ப்புகள்  நீங்கும் ,  இன்னல்கள் போக்கும், கஷ்டங்கள் விலகும்,  கழுத்தை நெறிக்கும்  

கடன் பிரச்சனைகள் தீரும்,  செய்வினை கோளாறுகள்  , தீராத நோய்கள் , ஜாதகத்தில் ஏற்படும் கர்ம வினைகள் , நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், குடும்ப பிரச்சனைகள் , தொழில் வருமான தடைகள்  போன்றவைகள் எல்லாம் நீங்கி  நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில், தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ,4 அடி அகலத்தில்  விசேஷமான முறையில்  அமைக்கப்பட்டுள்ள    ஸ்ரீ சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை  ராகு காலத்தில்  நடைபெற்ற சரபேஸ்வரர் பூஜையில்  பக்தர்கள் கலந்து கொண்டு    சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

மேற்கண்ட  சிறப்பு பூஜைகள் ஸ்தாபகர்,  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆசியுடன்  நடைபெற்றது. 

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 22ம்தேதி( திங்கள்கிழமை) ஆவணி மாத தேய்பிறை ‘காமிகா’ ஏகாதசி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம் & அபிஷேகம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 22ம்தேதி ( திங்கள்கிழமை) ஆவணி மாத தேய்பிறை ‘காமிகா’ ஏகாதசி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு ஹோமம் & அபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் ‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ’ டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , உலக மக்கள் நலன் கருதி வருகிற ஆவணி மாத 6ம்தேதி
( திங்கள்கிழமை) 22.8.2022 தேதி மிக சிறப்பு வாய்ந்த ‘ காமிகா’ ஏகாதசியை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு மகா ஹோமத்துடன் , நெல்லிப்பொடி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
‘காமிகா ’ என அழைக்கப்படும் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு ஆன்ம பலம் பெருகவும், மனபயம், மரண பயம், துன்பங்கள் நீங்கி நிம்மதி அடையவும், உடல் மற்றும் மன நோய்களிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறவும் , ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறுவதற்கான தடைகள் நீங்கி ,சகல சம்பத்துடன் வாழ நடைபெறும் ஹோமத்துடன் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறுகிறது. மேற்கண்ட ஹோமத்தில் பங்கு பெற்று பலன் பெற பிரார்த்திக்கின்றோம்.
மேலும் வாஸ்து நாளை முன்னிட்டு காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரத்யேகமாக பஞ்சபூதங்கள் ,அஷ்டதிக் பாலகர்களுடன் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு , வாஸ்து ஹோமமும் அஷ்ட திரவிய அபிஷேகமும் , சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறகிறது. பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து செங்கல் , வாஸ்து யந்திரம் ,மச்ச யந்திரம் , வில்வகாய் , திருஷ்டி தேங்காய் , திருஷ்டி பொம்மை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் விரைவில் புதிய வீடு அமையவும், மனை தோஷங்கள் அகலவும் வாஸ்து பகவானை வேண்டி , வாஸ்து தோஷ நிவர்த்தி பிரசாதத்தை பெற்று செல்லலாம் .
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Saturday, August 20, 2022

KRISHNA JEYANTHI CELEBRATION IN SRI DANVANTRI AROKYA PEEDAM

 தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா ,

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை

 உலகம் முழுவதிலும்  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம்
 ஸ்ரீ ஜெயந்தி , கோகுலாஷ்டமி  என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனக்காக இல்லாமல்  பிறருக்காக வாழ்ந்தவர் .
 கோகுலாஷ்டமி  தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கே வந்து
 அருள்பாலித்து அருள்வார் என்ற ஐதீகமே முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

 தன்வந்திரி பீடத்தில் நவநீத கிருஷ்ணர்

ராணிப்பேட்டை மாவட்டம்,  வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ,
பீடத்தின்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘‘ யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ’’ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  பெரு முயற்சியுடன்  நோய் தீர்க்கும்  கடவுளான தன்வந்திரி பகவானுக்கும்  இதர 89 பரிவார தெய்வங்களுக்கும்  திருச்சன்னதிகள் அமைத்து  உலக மக்கள் நலன் கருதி அவ்வப்போது  சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  கோகுலாஷ்டமியை  முன்னிட்டும்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீன முறையில் கல் ஊஞ்சலில் ,ஒரு அடி உயர  தவழ்ந்த கோலத்தில்  உள்ள  நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் , மஹா அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ண ஹோமம்
 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு   தம்பதியர் குழந்தை பாக்யம் பெற வேண்டியும், குடும்ப ஒற்றுமை, அகந்தை அகன்றிட, தர்மசீலராக  வாழ, அரசியல்  ஞானம் உண்டாக,  நிர்வாக திறன் அதிகரிக்க , திருமணத்தடை அகல,  செல்வம் பெருக, வயல்களில் விளைச்சல் அதிகரிக்க, அமைதி நிலவ, ஆற்றல்  பெருக, வறுமை இல்லா வாழ்வு அமைய  வேண்டி  ஸ்ரீ கிருஷ்ணயாகம், கூட்டு பிரார்த்தனையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி  விழாவாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த  வெண்ணெய் , சீடை, முறுக்கு , தட்டை, அப்பம்,  லட்டு போன்ற  பல்வேறு பலகாரங்கள் , பழங்கள் வைத்து  நிவேதனம்  செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’ டாக்டர் ஸ்ரீ  முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதி   இன்று (19.8.2022)  தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு   கால பைரவருக்கு சிறப்பு பூஜையும்,  அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.

இந்த பூஜையில் வீடு , மனை வாஸ்து தோஷங்கள்  நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்க, தாம்பத்ய  உறவில் விரிசல் அகல, நல்ல வேலை கிடைக்க , திருஷ்டிகள் நீங்க, நாக, சர்ப்ப தோஷங்கள் நீங்க, செய்வினை கோளாறுகள்,  பில்லி, சூன்யம்  போன்றவை அகன்றிட, திருமணம் கைகூட, சந்தான பிராப்தம்  கிடைக்க , தொழில்களில் தடைகள் அகல, பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை  அகல,  மரண பயம் நீங்க, மாங்கல்ய தோஷம் அகல, நல்ல தொழிலாளர்கள் கிடைத்து  தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும் பிரார்த்தனை நடைபெற்றது.
 பூஜையில் பங்கேற்ற  பக்தர்களுக்கு  ஹோம பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளைஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 


Monday, August 8, 2022

GARUDA JAYANTHI (02.08.2022) SPECIAL MAHA ABISHEKAM TO 16.8 FEET VISWAROOPA ASHTANAGA KAL GARUDAR



ஆடி 17ம் நாள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை ஆடி பஞ்சமி மற்றும் கருட பஞ்சமியை முன்னிட்டு இயற்கை வளம் பெறவும் விவசாயம் செழிக்கவும் அனைத்து விதமான நன்மைகளையும் பெற வேண்டியும் கருட ஜெயந்தியை முன்னிட்டு 16.8 அடி உயரமுள்ள ஸ்ரீ விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு கருட ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விஷேச அபிஷேகமும் நடைபெற்றது. 
















 

AADI PANCHAMI SPECIAL HOMAM AND ABISHEKAM TO GODDESS PANCHAMUGA VARAHI




ஆடி 17ம் நாள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை ஆடி பஞ்சமியை முன்னிட்டு இயற்கை வளம் பெறவும் விவசாயம் செழிக்கவும் அனைத்து விதமான நன்மைகளையும் பெற வேண்டி ஸ்ரீ பஞ்சமுகி வராகி அம்மனுக்கு பலநூற்றுக் கணக்கான மூலிகைகளைக் கொண்டு வராகி ஹோமமும் குங்கும அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.