Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, May 3, 2013


ஸ்ரீ தன்வந்திரி யோகா மையத்தில் 5.5.2013 மாலை 4.00 மணிக்கு

இலவச யோகா பயிற்சி துவக்க விழா

வாலாஜாபேட்டை, மே 03, 2013.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஓர் அங்கமாக செயல்படும் தன்வந்திரி யோகா மையத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபெறும் வகையிலும், விடுமுறைக் காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் மாணவ, மாணவியர்களின் அறித்திறன் கூடவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், உடலில் ஏற்படும்
சோர்வுகளைப் போக்கவும், ஆரோக்யமாக வாழவும், பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், மற்றவர்களிடமும் நல்லிணக்கம் ஏற்படவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க உடற்பயிற்சியுடன் கூடிய யோகாப் பயிற்சியை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், உடுமலைப்பேட்டை தாலுகா, திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் ஜெகத்குரு மகாமகரிஷி பரஞ்ஜோதியார் அவர்களின் ஆசிப்பெற்ற சீடரான திரு.வெங்கட்ராமன் அவர்கள் யோகாப் பயிற்சியை நடத்த உள்ளார். இப்பயிற்சியில் குருஜியின் ஆசிப்பெற்ற மற்றொரு சீடரான திரு.கிரி அவர்கள் முன்னிலையிலும் அனந்தலை ஊராட்சி மன்றத் தலைவர் தி.ரு.M.வெங்கடேசன் அவர்கள் தலைமையிலும் 5.5.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் இலவச யோகா பயிற்சி துவக்க விழா துவங்க உள்ளது. மேற்கண்ட பயிற்சி 15.5.2013 புதன்கிழமை மாலை நிறைவுப் பெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தன்வந்திரி யோகா மைய ஒருங்கிணைப்பாளர் திரு. வெங்கட்ராமன் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி யோகா மையம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033

No comments:

Post a Comment