Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 30, 2022

ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை 03.05.2022

                             வாலாஜா தன்வந்திரி பீடத்தில் அட்சய திருதியில் 

                                   ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை



இராணிப்பேட்டைடை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 3.5.2022, செவ்வாய்கிழமை ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி, அன்னபூரணி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சோளிங்கர் சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமம், அன்னபூரணி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், சாம்ராஜ்ய லஷ்மி ஹோமம், மஹா லஷ்மி ஹோமத்துடன் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறுகிறது

அன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப அலங்காரம், கும்ப பூஜை நடைபெற்று மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்கள் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் 11 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 12.00 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

ஸ்ரீ லட்சுமி குபேரர் திருக்கோவில்

அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேர கோவில் இது ஒரு ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாகும். செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை - திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும். இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில், முன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆனந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும். இந்த ஹோமத்தில் பங்கேற்று, குபேர யந்திரம், குபேர காசு, குபேர ரக்ஷை, குபேர குங்குமம்,அட்சதை பிரசாதங்கள் நேரிலோ அல்லது கூரியர் மூலம் பெறலாம். தொடர்புக்கு 94433 30203.


Monday, April 25, 2022

Thanks to Right Time Right News

இங்கு சென்றால்
உடல் நோய்,
மன நோய்
குணமாகும்


இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு  மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும். உடல் ஆரோக்கியம் பெறவும்,  மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான்.

தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோவில் வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, கீழ்புதுப்பேட்டையில், உள்ளது. கோவிலின் பெயர் ஸ்ரீதன்வந்திரி 
ஆரோக்கிய பீடம். இதை அமைத்தவர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள். இங்கு அழகிய திருக்கோலத்தில் தன்வந்திரி பகவன் காட்சி அளிக்கின்றார்.  75 க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகள், 468 சித்தர்கள் சன்னதி  உள்ளது.

மூலவர்– தன்வந்திரி பகவான்
தாயார்– ஆரோக்கிய லட்சுமி
உற்சவர்– ஸ்ரீவைத்ய லட்சுமி ஸமேத வைத்தியராஜன்
ஸ்தல விருட்சம்– புன்னை மரம்
தீர்த்தம்–வேகவதி நதி
பிரசாதம்– சுக்கு, வெல்லம், தைலம்

நேர்த்திக்கடன்– சுக்கு, வெல்லம், நல்லெண்ணை, பச்சரிசி, வெண்ணெய், மூலிகை, தேன், நெய் போன்ற பொருட்களினால் தன்வந்திரி பகவானுக்கு அபிேஷகம், யாகம் செய்யலாம்

தல புராணம்– தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை  கடைந்த போது, வந்த ஜோதியில் பிறந்தவர் தான் தன்வந்திரி பகவான். கையில்  சங்கு, சக்கரம், அட்டைச்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றுடன் தெய்வீக மருத்துவராக காட்சி தந்தவர்.  மனிதர்களுக்கு அவரவர் கர்ம வினைப்படிதான் நோய்கள் வந்து தீரும். இதில் இருந்து நம்மை காக்கும் ஒரே கடவுள் தன்வந்திரி பகவான் தான். இவரை தரிசித்தால் நோய் நொடிகள் விலகி ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் கிடைக்கும்.

பீடத்தில் உள்ள கோவில்கள்: குபேர லட்சுமி, கணபதி,  பால முருகன்,  சூரியன், சந்திரன், ரமணர், புத்தர், குருநானக், மகாவீர், சீரடி பாபா என 75 க்கும் மேற்பட்ட சன்னதிகள்
உள்ளது.

தரிசிக்கும் முறை– ஆண்கள் சட்டை, பனியன், லுங்கி, தொப்பி, தலைப்பாகை அணியாமல் வர வேண்டும்.

விருது–  சுற்றுச் சூழலுக்காக ஐஎஸ்ஓ 14001– 2004 ம் ஆண்டும், நோய்கள் குணப்படுத்துவதற்காக ஐஎஸ்ஓ 9001– 2008 ம் ஆண்டும் வழங்கப்பட்டது.

சாதனை– 500 க்கும் மேற்பட்ட சண்டி யாகம், சூலினி துர்கா யாகம், 1, 32, 000 மோதகங்களுடன் வாஞ்சா கல் பலதா கணபதி யாகம், 74 குண்டங்களில் 74 பைரவர் ேஹாமம், 6, 000 கிலோ சிகப்பு மிளகாய் வற்றலுடன் மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம், 10 ஆயிரம் மாதுளை பழங்களுடன் மஹா காளி யாகம், 365 நாட்களும் 365 ேஹாமங்கள், 15 ஆயிரம் வாழப்பழங்களுடன் மஹா ஆஞ்சநோய ேஹாமம் என நுாற்றுக்கானக்காக ேஹாமம், யாகம் நடந்துள்ளது.

சிறப்பு நிகழ்ச்சி–  நவ 28 மகாமந்திர ப்ரதிஷ்டா தினம், நவ 28 முதல் டிச 13 வரை மூலவர் தன்வந்திரிக்கு தைலாபிேஷகம், டிச 14 சுமங்கலி பூஜை, டிச 15 வருஷாபிேஷகம், மே 1 உலக தொழலாளர் நல வேள்வி, ஆக 15 பாரத மாதா பூஜை,
சித்ரா பெளர்ணமியில் 468 சித்தர்களுக்கும் 468 குண்டங்களில் சித்தர்கள் ேஹாமம், ஜன 26 உலக ஜோதிடர் குடும்ப நல வேள்வி

மாதாந்திர நிவாரண பூஜைகள்– அன்னபூரணிக்கு படையல், சாந்தி ேஹாமம், சந்தான கோபால யாகம், கர்தர்வராஜ ேஹாமம், சுயம் வர கலா பார்வதி ேஹாமம், வாஸ்து யாகம்,
வாராந்திர நிவாரண பூஜைகள்

பீடத்தின் பிரசாதம்– அமிர்த கலச தீர்த்தம்,  மூலிகை ரக்சை, தன்வந்திரி யந்திரம், மூலிகை பஸ்பம், ேஹாம காசு, மந்திர ரக்சை, மாங்கல்ய சரடு, தேன், நெய், தைலம்,  தன்வந்திரி ஜப தீர்த்தம், சுக்கு, வெல்லம்

அருள்– பல்வேறு பிரச்சனைகள் தீர, நோய்கள் விலக தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு வந்து ேஹாமம், யாங்களில் பங்கேற்று பலன் பெறலாம்.

எப்படி செல்வது– சாலை வழியாக சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 110 வது கி.மீ.,  வாலாஜாபேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் வரலாம்.
திருவண்ணாமலையில் இருந்து 100, வேலுாரில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ரயில் வழியாக, சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் ஏறி,  வாலாஜா சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து கார், ஆட்டோவில் வரலாம்.

திறந்திருக்கும் நேரம்– தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 வரை.

ஆரத்தி நேரம்– தினமும் காலை 10 மணி, மாலை 6 மணிக்கு கூட்டு பிராத்தனை மற்றும் மங்கள ஆரத்தி. ஞயிறு, வியாழன், சனிக்கிழமை மற்றும் ஓலைச்சுவடி படி 7 நாட்களும் தன்வந்திரி பகவானை தரிசிக்க உகந்த நாட்களாகும்.



தொடர்புக்கு–     ஸ்ரீமுரளிதர சுவாமிகள், 
                                ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம், 
                                அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, 
                                வாலாஜாபேட்டை– 632513, வேலுார் மாவட்டம்
                                தொலைபேசி– 04172  230033, 230274        
                                மொபைல்:  94433 30203

Comments

MAHA ABISHEKAM TO MAHISHASURA MARDHINI BEGINS 24.04.2022 TILL 26.05.2022

                           மங்கள வாழ்வு தரும் ஸ்ரீமகிஷாசுரமர்த்தினிக்கு

                41 நாட்கள் தொடர் மஹா அபிஷேகம் இன்று துவங்கியது.


 

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 23.4.2022 சனிக்கிழமை அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், திருமணம் பாக்கியம் கைகூடவும், சந்தானம் பாக்கியம் பெறவும், தொழில் வியாபாரம் சிறக்கவும், தன ஆகர்ஷண மற்றும் ஜன ஆகர்ஷண பெருகவும், சகலவிதமான பயங்கள், தோஷங்கள் விலகி வாழ்க்கையில் வெற்றிகளை பெறவும், சர்வ மங்களம் பெற்று  மங்கள வாழ்வு பெறவும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகம் இன்று முதல் 41 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்தனர். இந்த அபிஷேகம் 3.6.2022 வெள்ளிக்கிழமை வரை 41 நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை ஹோம பூஜைகளுடன் தொடர் அபிஷேகம் நடைபெறும். மேலும் நாளை முதல் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் (24.4.2022 முதல் 26.5.2022 வரை) தொடர் திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இங்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


GODDESS ASHTAPUJA MARAGATHA RAJA MATHANGI KARIKOLAM BEGINS AT SRI DANVANTRI AROGYA PEEDAM

              தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி & கர்நாடகம் மாநிலங்களுக்கு 

                அஷ்ட புஜ மரகத ஸ்ரீ ராஜ மாதங்கி சிலை கரிக்கோல பவனி 


                                  
                          

                         



  

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 24.4.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் உள்ள அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜமாதங்கி சிலை கரிக்கோல பவனி துவக்க விழா நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பங்கேற்று சிறப்பித்தனர். இச்சிலை மேற்கண்ட இடங்களுக்கு 25.4.2022 முதல் 12.5.2022 வரை கரிக்கோல பவனி வரவுள்ளது. இப்பவனியில் தன்வந்திரி குடும்பத்தினர், உபயதாரர்கள், முக்கியஸ்திரர்கள் இடங்களுக்கு செல்ல உள்ளது. ஆங்காங்கே பக்தர்கள் திருக்கரங்களால் பூஜைகள் நடைபெற்று பின்னர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 3.6.2022 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Saturday, April 23, 2022

SPECIAL THIRUMANJANAM TO SRI DANVANTRI BAGHAVAN BEGINS ON 24.04.2022 TILL 26.05.2022 @ SRI DANVANTRI AROGYA PEEDAM

 அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் தொடர் திருமஞ்சன திருவிழா நாள் 24.4.2022 முதல் 26.05.2022 வரை நடைபெறுகிறது

https://tamil.oneindia.com/astrology/agni-nachatram-special-tirumanjanam-festival-to-lord-sri-dhanvanthri-455506.html


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 26.05.2022 வியாழக்கிழமை வரை 33 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு லக்ஷார்ச்சனையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 26.05.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும், அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் தெரிவித்து இறை பிரசாதம் பெறலாம். 

தொடர்புக்கு 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, 
வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். 
தொலைபேசி : 04172 - 294022, செல் – 94433 30203

26 TH GURU POOJA ON CHITRA POURNAMI AT SRI DANVANTRI AROGYA PEEDAM

         16.04.2022 சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய             பீடத்தில் 26-ஆம் ஆண்டு குரு பூஜையுடன் மஹேஸ்வர பூஜையும் 468                                                         சித்தர்கள் யாகமும் நடைபெற்றது.

https://righttimerightnews.blogspot.com/2022/04/blog-post_517.html



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன் இன்று 16.4.2022, சனிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 468 சித்தர்கள் யாகம், ஸ்ரீ சத்யநாராயண ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், மஹா தன்வந்திரி ஹோமம், சனி சாந்தி ஹோமம் மற்றும் 26 ஆம் ஆண்டு மகேஸ்வர பூஜை குரு பூஜையும் ஸ்வாமிகள் ஆசிளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறவும் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி, குழந்தை பாக்யம், போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கவும் நடைபெற்றது. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் 468 சித்தர்களுக்கு கலசங்கள் கொண்டு பக்தர்களின் திருக்கரங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மகா அபிஷேகமும் சப்தரிஷி பூஜையும் மற்றும் இராகு-கேது அன்னாபிஷேகம் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் எண்ணற்ற சாதுக்கள், சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 

                                    

                       






THEERTHAKULAM VELLOTTAM AT SRI DANVANTRI AROGYA PEEDAM ON 11.04.2022

                                             


                                     ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புதிய                                                            தீர்த்தகுளம்  வெள்ளோட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 11.04.2022 திங்கட்கிழமை மங்கள சண்டி யாகம், வருண ஜப யாகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்டு வருகின்ற  ஸ்ரீ தன்வந்திரி தீர்த்த குளத்திற்கு தண்ணீர் நிரப்புதல் பூஜை நடைபெற்றது.

    







விரைவில் தன்வந்திரி பீடத்தில் சஞ்சீவினி தீர்த்த குளம் திறப்பு.

50 அடி நீளம், 50 அடி அகலம் 13 அடி ஆழத்தில் குளம் அமைக்கப்பட்டு வருகிறது, நடுவில் 6 x13 என்ற அளவில் நீராழி மண்டபம் அமைத்து தண்ணீர் நிரப்புதல் பூஜை செய்யப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திரு.தெ. பாஸ்கர பாண்டியன் குடும்பத்துடன் கலந்து கொண்டு கங்கா பூஜை செய்தனர். முதலில் ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் பூஜை,  ஸ்ரீ துர்கா பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமிகள் ஆசிபெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Monday, April 11, 2022

THANKS TO DINAMANI SRI RAMA NAVAMI @ SRI DANVANTRI AROGYA PEEDAM

                   ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 

                           சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் 

                           ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்றது   

       


                               





இராணிப்பேடை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஸ்ரீ ராமநவமி முன்னிட்டு இன்று 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதில் பானகம், நீர் மோர், வட பருப்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

THANKS TO DINAMANI

SPECIAL HOMAM AND ABISHEKAM TO SRI PATTABISHEKA RAMAR ON THE OCCASION OF SRI RAMA NAVAMI ON 10.04.2022

                     ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு 

                                        சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்         


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நாளை 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஹோமம், அபிஷேகம், பாராயணம், அர்ச்சனை, மஹாதீபாராதனை போன்றவைகள் இழந்த பதவி கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான். ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனமும் இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனையும் மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது

இந்நாளில் ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறலாம் என்பது ஐதீகம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

--

Wednesday, April 6, 2022

ANNAPPADAIYAL VAIBHAVAM TO SRI ANNAPOORANI DEVI @ SRI DANVANTRI AROGYA PEEDAM

                 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அன்னபூரணி தேவிக்கு                                                                 அன்னப்படையல் வைபவம்



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 அடி உயரமுள்ள தங்க அன்னபூரணி தேவிக்கு பிரதி மாதம் பௌர்ணமி, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அன்னப்பூரணி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி வருகிற 5.4.2022, செவ்வாய்கிழமை காலை 11.00 மணி அளவில் அன்னபூரணி ஹோமமும், அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் செய்து சாதம், பருப்பு, நெய், பாயாசம், வடை, அப்பளம் போன்ற 60 வகையான உணவுப்பொருட்களை கொண்டு அன்னபூரணி தேவிக்கு அன்னப்படையல் வைபவமாக அன்னபூரணி சன்னதியில் நடைபெற உள்ளது.

மேற்படி பூஜைகள் குடும்பத்தில் பசி, பட்டினி, நோய், வறுமை மற்றும் தரித்திரம் நீங்கவும், விவசாயம் வளர்ச்சி பெறவும், விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள் ஆரோக்யமாக வாழவும், பொருளாதார நிலை மேம்படவும், அன்னதோஷம் விலகவும் உணவு தோஷத்தினால் ஏற்படும் நோய்கள் விலகவும், துன்பங்கள் நீங்கவும். உண்ணும் உணவிற்கு தேவியாக இருக்கும் அன்னபூரணியை வேண்டி உணவிற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும், ஆண், பெண் திருமணம் தடைகள் நீங்கவும் அன்னப்படையல் வைபவம் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

16 PILLARS MANDAPAM INAUGURATION IN SRI VASAVI KANNIKA PARAMESWARI TEMPLE @ DANVANTRI AROGYA PEEDAM

                                           16 கால் மண்டம் திறப்பு விழா

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் 16 கால் மண்டம் திறப்பு விழா நேற்று 3.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24.06.2010 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவிக்கு ஆலயம் அமைத்து விக்கிரகம் பிரதிஷ்டை ஏராளமான ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்கள் வேண்டுகோள் ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 10.07.2015-ம் ஆண்டு தமிழக முன்னாள் ஆளுநர் K.ரோசய்யா அவர்களின் திருக்கரங்களால் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எனும் அடிக்கல் நாட்டு விழா முக்கியஸ்தர்கள் ஆர்ய வைஸ்ய சமூகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேற்கண்ட திருப்பணி 16 கால் கொண்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று 3.4.2022, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் திரு P.சேஷாத்திரி, GENERAL SECRETARY, INTERNATIONAL VAISH FEDERATION, TAMIL NADU & SOUTHERN INDIA VYSYA ASSOCIATION, திரு. நாராயண குப்தா, முன்னாள் தலைவர், ஆர்ய வைஸ்ய மஹா சபா, சென்னை, திரு. சந்திரசேகர். விவேக் & கோ உரிமையாளர், சென்னை, திரு. காடி P.சீனிவாஸ், பெங்களூர், திரு சங்கமேஸ்வரன், பெங்களூர், திரு கணேஷ், திருச்சி, திரு புருஷோத்தமன், கரூர், திரு, முருகானந்தம், கரூர், திரு ராஜசேகர், ஊட்டி போன்ற 30க்கு மேற்பட்ட தொழிலதிபர்களும் ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்களும் தன்வந்திரி பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுடன் புது கணக்கு துவங்க ஸ்ரீ லக்ஷ்மி குபேர சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும்  தன்வந்திரி பிரசாதத்துடன் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.