Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, May 27, 2014

The Vellore District Collector Visited to Peedam on 25.05.2014 Sunday

25.05.2014 ஞாயிறு அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. இரா.நந்தகோபால் அவர்கள் பீடத்திற்கு வருகைதந்த போது பீடத்தின் வருகையாளர் பதிவேட்டில் எழுதிய குறிப்பு :

மனதிற்கு இனிமை தரும், உள்ளத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும் அற்புதமான ஸ்தலம் இது. இங்கு உள்ள அனைத்து விக்கிரகங்கள் மற்றும் தன்வந்திரி சுவாமிகளின் அருள்பாலிக்கும் புன்னகை வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒரு பெருஞ்சிறப்பு. பிரார்த்தனை வைத்து அது நிறைவேறும்போது அதற்கு காரணகர்த்தாவை வணங்க வரும் கூட்டம் இங்கே அதிகம். எம்மதமும் சம்மதம் என்ற உயரிய கோட்பாட்டினை அனைவருக்கும் உணர்த்தி, ஒரு அற்புதமான இறைப்பணியை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் ஆற்றிவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பணி பாராட்டிற்கும் வியப்பிற்கும் உரியது. இந்த பீடம் ஆல்போல் தழைத்து வளரவும், இறையருளை உலகெங்கும் பரப்பவும் எனது மனப்பர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீ தன்வந்திரி கணபதி ஸ்வாமிக்கு எண்ணெய்
அபிஷேகம் செய்கிறார். உடன் கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
Doing the Oil Abishegam to
Lord Sri Danvantri Ganapathy



ஸ்ரீ ப்ரத்தியங்கரா தேவி யாககுண்டத்தில் 
மிளகாய் மற்றும் மூலிகை பொருட்களை இடுகிறார்.
Put Red Chilies and Herbals in Lord Sri Pratiyangara
Yaga Kundam


நோய் தீர்க்கும் கடவுளான
ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் வேண்டுதல்.
Prayer to Lord Sri Danvantri Bagavaan


அவதார் பாபா சன்னதியில் தரிசனம்.
In Avatar Baba sannadi…
























Thanks to Dinamani Tamil Daily

25.05.2014 ஞாயிறு அன்று பீடத்தில் நடைபெற்ற 10 யாகங்கள் பற்றி தினமணி நாளிதழில் 27.05.2014 அன்று வந்த செய்தி.


Sunday, May 25, 2014

10 சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பக்தர்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளும் கோரிக்கைகளும் நிறைவேற வேண்டி ஒவ்வொரு ஸ்வாமிக்கும் தனித்தனி ஹோமங்கள், யாகங்கள் செய்து பலன¬டைந்து வருகின்றனர்.
இப்படி தனித்தனியாக பங்கேற்க முடியாத பக்தர்களின் கோரிக்கைகளுக்காக, பத்துவிதமான சிறப்பு ஹோமங்கள் மே 25 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த யாகப்பெருவிழாவில், எந்தவொரு காரியத்திலும் அனைத்துவிதமான தெய்வங்களின் ஆசியையும் பெற்றுத்தரும், ஸ்ரீ தன்வந்திரி விநாயகரை வேண்டி ஸ்ரீ கணபதி யாகமும், தொழில் வளர்ச்சித் தடைகளை அகற்றி, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற அஷ்டமங்கள பைரவர் மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகியோரை வேண்டி காலபைரவர் யாகமும், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதி கடாட்சம் அருளும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை வேண்டி லஷ்மி ஹயக்ரீவர் யாகமும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணத்தடைகள் நீங்கி உரிய பருவத்தில் மணமேடை காண ஸ்வயம்வர காலாபார்வதி யாகமும், அதேபோல் ஆண்களுக்கான திருமணத்தடைகள் நீங்க கந்தர்வராஜ யாகமும், புற்று நோய், சர்க்கரைநோய், இதய நோய் போன்ற பலவித கொடுமையான நோய்களின் தீவிர பிடியிலிருப்பவர்கள் நிவாரணம் பெற ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகமும், பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளை விரைந்து அழிக்கவும், நல்லதே நடக்கவும் ஸ்ரீ சுதர்சன யாகமும், செல்வம் சேரவும், சேர்ந்த செல்வம் நிலைத்து நிற்கவும், மகாலஷ்மியின் அருள்வேண்டி ஸ்ரீ மகாலஷ்மி யாகமும், ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ ஆயுள் பலம் வேண்டி ஆயுஷ்ய ஹோமமும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெற ஸ்ரீ சந்தானகோபால யாகமும் ஆகிய பத்து யாகங்கள் நடைபெற்றன.108 விதமான மூலிகைகள், வஸ்திரங்கள், பட்சணங்கள், பழங்கள், ஆகியவை யாகத்திலிடப்பட்டன.  பூர்ணாஹூதி, கலசாபிஷேகத்துடன் யாகம் முடிவடைந்தது. யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விசேஷ யாகப்பிரசாதமும், ரக்ஷையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் வழங்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.








Saturday, May 24, 2014

10 Homams in 1 Homa kundam in one day


on 25.05.2014 Sunday

All are Invited


1.        Maha Ganapathy Homam : Vinayagar removes obstacles.
2.        Kalabiravar Yagam : You will attain the sheer power to control the time and the incidents that take place in your life with the blessings of Kala Bhairavar. He blesses you with the divine power of predicting things that are to happen and to avoid mishaps by controlling time.
3.        Lakshmi Hayagreevar Homam : To improvement in memory, concentration, success in knowledge ventures, studies, education and careers related to education, removal of ignorance, tamas, laziness, inertia we should pray Lord Hayagreevar. This homam is particularly recommended for students, teachers, researchers and spiritual seekers who wish to gain the grace of Lord Hayagreevar.
4.         Swayamvara Kala Parvathy Yagam : Removes obstacles of marriage of Girls and help to get a suitable spouse.
5.        Kandarva Raja Yagam : This homam will Removes obstacles which prevent marriage of a Male and help to get a suitable spouse.
6.        Maha Danvatri Yagam : Lord Danvantri Heals and Removes internal and external diseases.
7.        Sri Sudarsana Yagam : Sudarsana Azhwar relieves one of the tantric effects of black magic and ill will from others, traditionally referred to as billi, soonyam and so on.
8.        Sri Mahalakshmi Homam : to gain grace of Lord Mahalakshmi, who the power to give money and wealthy life, this homam will be performed.
9.        Ayushya Homam : This homam can cure serious health ailments and mental disorders. It gives tremendous effects on your health and mind. Also gives longevity and well being.
10.    Sri Santhana Gopala yagam : Those who seek to be blessed with a child will participate in the yagam.

நன்றி பாலஜோதிடம்.


Wednesday, May 21, 2014

Thanks to Deccan Chronicle.


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு வாழ்த்து



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
முதலமைச்சரின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து



Thursday, May 15, 2014

18ஆம் ஆண்டு குரு பூஜை, 468 சித்தர்கள் மூலிகை வேள்வி மற்றும் புத்த பூர்ணிமா சிறப்பு பூஜை.























ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18ஆம் ஆண்டு குரு பூஜைடன், மகேஸ்வர பூஜையும், 468 சித்தர்களுக்கு மூலிகை வேள்வியும், புத்தர் பிறந்த நாளையொட்டி புத்த பூர்ணிமா விசேஷ பூஜையும் நடைபெற்றது.
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நம் முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளை செய்யும் நாளாக கடைபிடிக்கப்படும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று மே 14ம் தேதி, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் குருவாக போற்றி வழிபடுகின்ற அவரது பெற்றோர்களின் 18ஆம் ஆண்டு குரு பூஜையையொட்டி, பெற்றோர்களுக்காக அமைத்துள்ள ஸ்ரீபாத அஸ்தி மண்டபத்தில் ஸ்ரீ மகேஸ்வர பூஜையும், குரு பூஜையும் நடைபெற்றது.
சித்ராபௌர்ணமியை முன்னிட்டு, சிவலிங்க ரூபத்தில் சூட்சுமமுறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 468 சித்தர்களுக்கான மூலிகை வேள்வியில், உலக நலன், விவசாய நலன் மற்றும் மழை வேண்டியும் 468 குண்டங்களில் சாதுக்கள், மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் 468 பேர் கலந்து கொண்டனர். ஹோமத்தின் நிறைவில், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட 468 கலச நீர் கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இமயமலை, காசி, ரிஷிகேஷ், அயோத்தி, நேபாள் போன்ற நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமான மகான்கள், சாதுக்கள் மூலிகை வேள்வியில் கலந்து கொண்டனர். குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குடும்பத்தில் பாசம் இல்லாமை, தம்பதியர் ஒற்றுமை, உரிய வேலை வாய்ப்பு, குடும்பத்தில் அமைதி, வழக்கு விவகாரங்கள் தீர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளும் அகல, நிவேதனப் பொருட்கள், பழங்கள், மூலிகைகள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், உணவளித்தல் உட்பட பல வகையான அர்ப்பணிப்புகளை பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே நிறைவேற்றி சாதுக்கள், மகான்கள், சித்தர்களின் பரிபூரண ஆசிகளைப் பெற்றனர். மழைவேண்டியும், நதி நீர் இணைக்கப்பட்டு நாட்டின் பஞ்சம் அகலவும், மக்கள் சுபிட்சமாக வாழவும் வேண்டி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்புடன் மகான்கள், சாதுக்களுடன் கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.









நன்றி மக்கள் குரல்.



காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு ஆசிரமத்தில் திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுடன் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்






காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு ஆசிரமத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

நன்றி தினமலா்.


நன்றி தினகரன்.



நன்றி தினத்தந்தி


Tuesday, May 13, 2014

நரசிம்ம ஜெயந்திவிழா

 மே 13ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தனது பக்தன் குழந்தை பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி தூணிலிருந்து வெளிப்பட்டு, பக்தர்களை துன்புறுத்தி வந்த அரக்கன் இரண்ய கசிபுவை அழித்தருளிய அவதாரத் திருநாளே பக்தர்களால் அவரது ஜெயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள, உலகில் வேறெங்கும் காண இயலாத வகையில், இரண்டு வண்ணங்கள் கொண்ட இருவகை கற்களால் உருவாக்கப்பட்ட, கூர்மாவதார பீடத்தின் மேல் ஸ்ரீலஷ்மி தாயாருடன் வீற்றிருக்கும் ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் ஸ்வாமிக்கு காலை 10 மணியளவில் நரசிம்ம ஹோமமும், திரவியங்கள் மற்றும் முலிகைகள் அபிஷேகமும் நடைபெற்றது. பொருளாதாரப் பிரச்சனைகள், கடன் தொல்லைகள், வழக்கு வியாஜ்யம், மனதில் அச்சம், குடும்பத்தில் அமைதியின்மை போன்றவற்றிலிருந்து நிவர்த்தி தருபவர் என்பதால், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பானகம், பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.