Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, September 30, 2016

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நன்மை தரும் நான்கு ஹோமங்கள்



வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இது வரையில் 75 விதமான சன்னதிகளில் சைவம், வைணவம், சாக்தம், செளரம், கெளமாரம் மற்றும் காணாபத்யம் போன்ற 6 மதங்களுக்கு அதற்குரிய தெய்வங்கள் ப்ரதிஷ்டை செய்துள்ளர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில் உலக மக்களின் நலன் கருதியும் பால ஜோதிட வாசகர்களின் நலன் கருதியும் கீழ் கண்ட தேதிகளில் “நன்மை தரும் நான்கு ஹோமங்களை” ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார், பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம்.
1.      
 சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடஹர கணபதி ஹோமம்.

வருகிற 19.10.2016 புதன் கிழமை  சதுர்த்தியை முன்னிட்டு மாலை 5.00 மணியளவில், சங்கடஹர கணபதி ஹோமம்  நடைபெறஉள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்து கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றி பெறலாம். மேலும், இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு  நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்களுக்குசனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

2. கால சர்ப தோஷ பரிஹார ஹோமம்

24.10.2016 அன்று திங்கட் கிழமை 10.00 மணியளவில் ஆயில்ய ட்சத்திரத்தன்று சிறப்பு கால சர்ப தோஷ பரிஹார ஹோமம் நடைபெறும். இராகு கேது தோஷம் அகலவும், நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால் ஏற்படும் தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள் பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில் மந்தமில்லாமல் சீராக நடைபெற, வீடு அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு நீங்கி சுமுக உறவு நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற மற்றும் எந்த காரியமும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற இந்த கால சர்ப தோஷ பரிஹார ஹோமம் செய்வதால் பலன் கிடைக்கும்.

3. வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமம்

27.10.2016, வியாழக் கிழமை அன்று காலை 7.45 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமம், ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு ஆலயம் அமைத்து பிரதி மாதம் வளர் பிறை பஞ்சமி மற்றும் வாஸ்து நாட்களில் விசேஷமான முறையில் யாக குண்டங்கள் அமைத்து ஹோமம் செய்து, கலச நீரை வாஸ்து தேவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும்கட்டுமானப் பணிகளில் மற்றும் நாம் வசிக்கும் இடங்களில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக வாஸ்து சாந்தி ஹோமம் செய்வது பலன் தரும்.

4. தீபாவளித் திருநாளை  முன்னிட்டு ஸ்ரீ துர்கா ஹோமம்

29.10.2016, சனிக் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஸ்ரீ துர்கா ஹோமம் நடைபெறும்.
இந்த ஹோமம் நவ சக்தி அருளால் கீர்த்தி புகழுடன் வாழவும், நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை நிவர்த்தி செய்வதற்காகவும், தீய மோகத்திலிருந்து விடுபடவும், உலக அமைதிக்காகவும் செய்யப்படுகிறது. தீபத் திருநாளான, தீபாவளித் திருநாளில் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த புனித ஹோமங்களில் எண்ணற்ற சிகப்பு நிற பழங்கள், சிகப்பு மிளகாய் வத்தல், பல வகையான சிகப்பு புஷ்பங்கள், பூசனிக் காய்கள் பலவகையான மூலிகைகள், பழங்கள், திரவியங்கள், பால், தயிர், பூக்கள், பட்டு வஸ்த்திரங்கள் அகிய அனைத்து பொருட்களும் உபயோகப்படுத்தப்படும். இந்த ஹோமத்தில் பங்கு பெற்று தோஷ நிவர்த்தி செய்து வாழ்வில் வளம் பெற வேண்டுகிறோம். பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
மேற்காணும் ஹோமங்களில் பங்கு பெற விழைவோர் ஒரு ஹோமத்திற்கு ரூ.1,000/- வீதம் தங்கள் பங்களிப்பை தெரிவித்து, பங்கு பெறும் ஹோமத்தின் பெயர், தங்கள் பெயர், கோத்ரம், நட்சத்திரம்,மற்றும் முகவரியுடன், ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் பெயருக்கு M.O  அல்லது D.D  அனுப்பி பகவத் கைங்கர்யத்தில் பங்கு கொள்ள பிரார்திக்கிறோம்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம், கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை 632513.

 Ph : 04172-230033/9488209877/9488213701

              danvantripeedam@gmail.com

வங்கி விவரங்கள்:

Sri Muralidhara Swamigal
State Bank of India Walajapet - 632513
A/C No. 10917462439

IFSC Code: SBIN0000775     

தன்வந்திரி பீடத்திற்கு திரு. Dr. R. நந்த கோபால், IAS அவர்கள் வருகை

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு இன்று கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறையின், இணை செயலர், திரு. Dr. R. நந்த கோபால்   IAS அவர்கள் வருகை செய்து, பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கல்யாண சீனிவாச பெருமாளையும் இதர 73 தெய்வங்களையும்  தரிசனம் செய்தார். அவருக்கு பீடத்தின் சார்பில் செய்யப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Wednesday, September 28, 2016

வினாயகபுரம் திரு. வேலு முதலியார் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தரிசனம்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு பொன்னை, ஒட்டனேரி வினாயகபுரத்தில் நவக்ரஹ கோட்டை மற்றும் நவசக்தி விநாயகர் ஆலயத்தின் ஸ்தாபகர் திரு.வேலு முதலியார் அவர்கள் நேற்று 27.09.2016 மதியம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்க்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர பரிவார மூர்த்திகளையும், 468 சித்தர்களையும் தரிசனம் செய்தார். அவருக்கு தன்வந்திரி பீடத்தின் சார்பாக பூர்ணகும்பம் மரியாதை வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




தன்வந்திரி பீடத்தில் அமாவாசை அன்று சூலினி துர்கா ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 30.10.2016 ஞாயிற்றுக் கிழமை  அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சூலினி துர்கா ஹோமம்  நடைபெற உள்ளது.

ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே அமாவாசைகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது. 

இந்த ஹோமத்தில் பங்கு கொள்பவர்களுடைய, சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ, அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் திருஷ்டிஎனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த ஹோமம் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று  ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



தன்வந்திரி பீடத்தில் கால சர்ப தோஷ பரிஹார ஹோமம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டைகீழ்புதுப்பேட்டையில்அ மைந்துள்ளஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24.10.2016 அன்று திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு கால சர்ப தோஷ பரிஹார ஹோமம், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெறும்.இந்த ஹோமத்தில் பீடாதிபதி  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று ஆசீர்வதிக்க உள்ளார். 


இராகு கேது தோஷம் அகலவும், நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால் ஏற்படும் தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள் பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில் மந்தமில்லாமல் சீராக நடைபெற, வீடு அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு நீங்கி சுமுக உறவு நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற மற்றும் எந்த காரியமும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற இந்த கால சர்ப தோஷ பரிஹார ஹோமம் செய்வதால் பலன் கிடைக்கும்.

இந்த ஹோமத்தில், பலவகையான மூலிகைகள், பழங்கள், திரவியங்கள், பால், தயிர், பூக்கள், பட்டு வஸ்த்திரங்கள் அகிய அனைத்து பொருட்களும் உபயோகப்படுத்தப்படும். இந்த ஹோமத்தில் பங்கு பெற்று தோஷ நிவர்த்தி செய்து வாழ்வில் வளம் பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



Tuesday, September 27, 2016

தன்வந்திரி பீடத்தில் RDO திரு S. அஜய் ஸ்ரீநிவாசன் அவர்கள் தரிசனம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் (RDO) திரு.S.அஜய் ஸ்ரீநிவாசன் அவர்கள் வருகை புரிந்து தன்வந்திரி பீடத்தில் உள்ள அனைத்துசன்னதிகளையும் தரிசித்து வேப்ப மரத்திலான 11 அடி உயர ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசரை  தரிசித்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு தன்வந்திரி குடும்பத்தின் சார்பாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்தெரிவித்தனர்.




Saturday, September 24, 2016

Thanks to Malaimalar 24.09.2016


Thanks to Malaimalar 24.09.2016


தன்வந்திரி பீடத்தில் முத்தான மூன்று ஹோமங்கள்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதியும் ஸ்தாபகருமான கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதியும் மாணவ மாணவியரின் நலம் வேண்டியும் முத்தான மூன்று ஹோமங்களை கீழ்கண்ட தேதிகளில் நிகழ்த்த உள்ளார். பக்தர்களும் பால ஜோதிட வாசகர் குடும்பங்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
01.10.2016 சனிக் கிழமையை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு சனி தோஷம் நீங்க சனிசாந்தி ஹோமம்,
இந்த ஹோமத்தில் சனி பகவானுக்குரிய எள்,நல்லைண்ணைய், பச்சை அரிசி, வன்னி சமித்து, போன்ற திரவியத்துடன் கருப்பு மற்றும் நீல நிற வஸ்திரங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளன.சனி சாந்தி பரிஹார ஹோமத்தில் பங்கேற்று மனமுருகி சனி பகவானை வழிபட்டால் சோதனையின் அளவு குறையும். மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் அருளால் சுகபோக வாழ்க்கையுண்டாகும், தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகம், பிரயாண லாபம் உண்டாகும்.  மேலும், அஷ்டம சனி, ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் சனி திசை, சனி புத்தியினால் ஏற்படும் தொல்லைகளும், தோஷங்களும் விலகி ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் மற்றும் ஆனந்தம் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.இதனை தொடர்ந்து, கால சக்கரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்துக்கு, நடைபெறும்  விருட்ச பூஜையில் பங்கேற்று இறைவன் அருளை பெற வேண்டுகிறோம்.
10.10.2016, திங்கட் கிழமை  காலை 10.00 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதி ஹோமம்.

இந்த ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு  கல்வி ஆற்றல் பெருகும். கலைத்துறை திறமைகள் அதிகரிக்கும். உங்கள் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பேச்சாற்றல், திறன்பட செயல்பட இந்த சரஸ்வதி ஹோமம் பலன் தரும். மேலும் கல்வி, கலை, விவேகம், கற்றல் திறம், புத்தி, மனம், மனித அருமை இவை அனைத்தும்  ஸ்ரீ சரஸ்வதி அருளாசியும் கிடைக்க பெறுவர்..

ஸ்ரீ சரஸ்வதி ஹோமத்தினால் கிடைக்கும் நன்மைகள் மாணவர்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கும். கல்வியில் வெற்றி பெற உதவும். கலைதுறையில் இருப்பவருக்கும் கண்டிப்பாக முன்னேற்றம் கிடைக்கும். நடிப்பு, பாடல், பேச்சு, எழுத்து இவை அனைத்துக்கும் சரஸ்வதி அருள் கிடைக்கும். ஆன்மீகம், பாசம், அன்பு   இவை அனைத்தும் முழுமையாக கிடைக்க பெற நாம் சரஸ்வதி ஹோமத்தில் பங்கு பெற வேண்டும்.

அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்கள் அனைவர்களுக்கும் சரஸ்வதி ஹோமம் முழுமையான பலனை தருகிறது. நாம் வேத முறைப்படி இந்த ஹோமம் செய்வதால் பல நினைத்த காரியத்தை அடைந்து முழுமையான தீர்வு பெறலாம் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

11.10.2016, செவ்வாய் கிழமை  காலை 10.00 மணிக்கு விஜய தசமியை  முன்னிட்டு ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் மற்றும் அட்சராப்யாசம்
திருவோண நட்சத்திரம், நவராத்திரி மற்றும் விஜய தசமியை  முன்னிட்டும் சிறப்பு விஜயலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருவோண அபிஷேகமும், குழந்தைகளுக்கான அட்சராப்யாசமும்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதம் என்பதன் உண்மையான பயன்

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.


ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணெய் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆயுத பூஜை நாள் அன்று வாழ்வில் மக்கள் அனைவரும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அஷ்டலக்ஷ்மிகளில் ஒருவரான ஸ்ரீ விஜயலக்ஷ்மியின் அருள் வேண்டி ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775