Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, January 29, 2017

Free Medical Camp held at " Sri Danvantri Peedam " , Walajapet. Thanks to " KAALAIKATHIR " 28.01.2017.


Thai Amavasi Homam at " Sri Danvantri Peedam " , Walajapet. Thanks to " KAALAIKATHIR " 17.01.2017.


Samathuva Pongal Celebrations held at " Sri Danvantri Peedam " , Walajapet. Thanks to " ANDHRAJYOTHI " 17.01.2017.


Vasthu Santhi Homam at " Sri Danvantri Peedam " , Walajapet. Thanks to " ANDHRAJYOTHI " 26.01.2017.


Thai Amavasi Maha Yagam at " Sri Danvantri Peedam " , Walajapet. Thanks to " ANDHRAJYOTHI " 28.01.2017.


Republic day Celebrations at " Sri Danvantri Peedam " , Walajapet. Thanks to " ANDHRAJYOTHI " 27.01.2017.


தன்வந்திரி பீடத்தில் பெண்கள் திருமணத் தடை நீங்க முனீஸ்வர பூஜையுடன் சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 29/01/17 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த வேத விற்பன்னர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற்றது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம், முனீஸ்வர ஹோமம் ராகு கேது  ஹோமம் நடைபெற்றது.
இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். பெண்களின் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்என்பது நம்பிக்கையாகும்..
மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது.. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்றது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513. 
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203










Friday, January 27, 2017

தன்வந்திரி பீடத்தில் தை அமாவாசை ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 27/01/2017 வெள்ளிக் கிழமை தை அமாவாசையை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  அமாவாசை ஹோமம் நடைபெற்றது.
ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே அமாவாசைஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.


தைஅமாவாசை என்பதாலும் தை வெள்ளிக் கிழமையை முன்னிட்டும் சூலினி துர்கா ஹோமம் மஹா ப்ரத்தியங்கிரா ஹோமம் சகல தேவதா ஹோமம் நடைபெற்றது.இந்த ஹோமத்தில் 1000 கிலோ மிளகாய் வற்றல் பூசணிக்காய் கடுகு, மிளகு, உப்பு, சிவப்பு நிற புஷ்ப;ங்கள்,, சிவப்பு நிற பழங்கள்சிவப்பு வஸ்த்திரங்கள், மற்றும் வேப்பெண்ணை, யாகத்தில் சேர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து மஹா பூர்ணாஹீதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 468 சித்தர்கள், மகிஷாசுரமர்த்தினி, தன்வந்திரி பெருமாள் கால பைரவர், ராகு கேது, மற்றும் மஹா ப்ரத்தியங்கிரா தேவிக்கும் அபிஷேகமும்ஆராதனையும் நடைபெற்றது. இதில்ஆந்திரா, கர்நாடகா,மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் ஓம் சக்தி பக்தர்கள் மற்றும் உள்ளுர் பக்தர்கள் கலந்து கொண்டு ஹோமத்தை சிறப்பித்தனர்.இந்த ஹோமத்தில் பங்கு கொள்பவர்களுடைய, சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழவும் சகல தோஷங்கள் நீங்க ப்ரார்த்தனை நடைபெற்றது.







Thursday, January 26, 2017

தன்வந்திரி பீடத்தில் 68 வது குடியரசுதினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் 68 வது குடியரசு தினவிழா இன்று 26.01.2017 காலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டாக குடியரசுதினத் திருவிழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து.னிப்புகள் வழங்கி
இலவச மருத்துவ உதவிகளும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும்
மருந்துகள் வழங்கப்பட்டது.. இதனை தொடர்ந்து அன்னை ஸ்ரீ பாரத மாதா சிலைக்கு சிறப்பு ஹோமத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது.


பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளை பெறவும் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலனும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த குடியரசுர தினத் திருவிழா நடைபெற்றது.  தேசபக்தியுடன் குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Wednesday, January 25, 2017

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 25.01.2017 இன்று வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை வாஸ்து ஹோமம் நடைபெற்றது

வாஸ்து  சாஸ்திரம் முக்கியமாக ஒரு சரியான திசையில் ஒரு கட்டிடம் வடிவமைத்தல் பயன்படுத்தப்படுகிறது இது ஒரு பண்டைய கட்டிடக்கலை அறிவியல். அது பெரும் நன்மைகளை பெற வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒரு பொருத்தமான ஒன்றாகும். இந்த தொழில் நுட்பம் கூட கட்டிடங்களில் வடிவமைத்தல் மற்றும் மறுவடிவமைப்பதில் அறைகள் வாழ்க்கையில் செழிப்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு அனுமதிக்கிறது. வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் முக்கியமாக ஒரு பயனுள்ள முறையில் எதிர்மறை ஆற்றல் அகற்றுவதன் மூலம் புதிய கட்டிடங்கள் நிலைமைகளை மேம்படுத்த பொருள். உண்மையில், அது ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ பிரச்சினைகள் பல்வேறு வகையான மீள்வதற்கும் முறைகளை வழங்குகிறது. ஒரு கட்டிடத்தில் வாஸ்து குறைபாடுகள் ஒரு நபர் பல குழப்பங்களும் ஏற்படலாம். வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் முக்கிய மாற்றங்கள் சாட்சியாக ஒழுங்காக அவற்றை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான ஒன்றாகும்.

வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் சரியான தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் பிரச்சினைகள், அனைத்து வகையான இருந்து வைத்தியம் பெறுவதற்கான முறைகளைவழங்குகிறதுஅது ஒரு வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவுகிறதுஒன்று, இந்த ஹோமம் ஒரு குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்த முடியும்.மேலும், இது சுகாதார பிரச்சினைகள் குறைக்கவும்வாழ்க்கை தரத்தைமேம்படுத்த முடியும்.வாஸ்து சாந்தி  பரிகார ஹோமத்தின் நன்மைகள் வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் ஒரு கட்டிடத்தில் அச்சுறுத்தல் தவிர்க்க வேண்டும் அந்த ஒரு பொருத்தமான ஒன்றாகும்.கூடுதலாக, இந்தபரிகார ஹோமம் மன அமைதி அனுபவிக்க மன தொந்தரவுகள் இருந்து மீள்வதற்கும் சாத்தியமில்லாத வழிகளில் செய்கிறதுஒரு கட்டிடத்தில் நேர்மறை ஆற்றல் பெற விரும்பும் எவரும் விரும்பிய விளைவுகளை அனுபவிக்கும் இந்த பரிகார ஹோமம் தேர்வு செய்யலாம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வாஸ்து பகவானுக்கு வாஸ்து நாளான இன்று ஸ்ரீ வாஸ்து  தோஷ நிவர்த்தி ஹோமமும் பஞ்ச திரவிய அபிஷேகமும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்றது.இதில் கலந்து கொண்டவர்களுக்கு வாஸ்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது மேலும் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள பாரத மாதா சிலைக்கு விஷேச அபிஷேகமும் கொடியேற்றும் நிகழ்ச்சியும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது...இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Saturday, January 14, 2017

தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கலுடன் 13 ம் ஆண்டு 14/01/2017 சனிக்கிழமை தைப் பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கலுடன் 13 ம் ஆண்டு 14.01.2017 சனிக் கிழமை இன்று புனித நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.
பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் காதை சொல்வது குறைந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வது குறைந்து விட்டது என்றால் அதில் சந்தேகமில்லை,
ஒரு இளைஞனை நிறுத்தி! நீ குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காக எழுதப்பட்ட எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம்மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நுல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் தமிழர் திருநாளில் 14.01.2017 சனிக்கிழமை பகல் 12.00 மணி முதல் 1.00 மணிவரை சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து. மேற்கண்ட புனித நூல்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த அற்புதமான விழாவில்ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்..இந்த தகவலை கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள் தெரிவித்தார்.






Friday, January 13, 2017

Happy Pongal 2017

Happy Pongal to all. We conducting Pongal celebrations on 14th and Sri Seshadri Swamigal Jayanthi Festival on 18th JAN 2017 at Danvantri Peedam, Ct:9443330203