Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 29, 2013

மஹா குருபெயர்ச்சி யாகம் இனிதே நடைபெற்றது…


உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
மஹா குருபெயர்ச்சி யாகம் இனிதே நடைபெற்றது…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் நடைபெற்ற குருபெயர்ச்சி மஹா யாகத்தில் பாலஜோதிடம் ஆசிரியர் உலகப்புகழ் அதிர்ஷ்டம் ஜோதிட பானு சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்று பக்தர்களுக்கு குருபெயர்ச்சி பற்றி விரிவாக உரையாற்றினார். பாலஜோதிடம் பொறுப்பாசிரியர் மலரோன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

குருபெயர்ச்சி யாகத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
குருபெயர்ச்சி ஹோமத்தில்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளுரை வழங்கிய காட்சி.
குருபெயர்ச்சி ஹோமத்தில்
உலகப் புகழ் அதிர்ஷ்டம் ஜோதிட பானு
சி.சுப்பிரமணியம், பால ஜோதிடம், ஆசிரியர்
அவர்கள் குருபெயர்ச்சி பற்றி பக்தர்களிடம்
எடுத்துரைத்த காட்சி. அருகில்
பொறுப்பாசிரியர் மலரோன் அவர்கள்.
குருபெயர்ச்சி ஹோமத்தில்
கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதி.
குருபெயர்ச்சி ஹோமத்தில்
கலந்து கொண்ட பக்தர்கள்.
குருபெயர்ச்சி ஹோமத்தின் பொழுது
சங்கல்பம்.
குருபெயர்ச்சி ஹோமத்தில் குரு பகவான் திருக்காட்சி.
குருபெயர்ச்சி ஹோமத்தில்
தன்வந்திரி எழுந்தருளிய காட்சி.
பக்தர்களுக்கு ஸ்வாமிகள் ஆசீர்வாதம்.
குருபெயர்ச்சி ஹோமத்தில்
கலந்து கொண்ட பக்தர்களுக்கு
குரு யந்திரம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தன்வந்திரி குடும்பத்தினர் பக்தர்களுக்கு
பிரசாதங்கள் வழங்கிய காட்சி.
குருபெயர்ச்சியை முன்னிட்டு காலச்சக்கரத்தில் 
உள்ள அரசு விருட்சத்திற்கு பூஜை.
குருபெயர்ச்சியை முன்னிட்டு காலச்சக்கர ஆரத்தி.
குருபெயர்ச்சியை முன்னிட்டு பீடத்தில் உள்ள
தஷிணாமூர்த்திக்கு சிறப்பு  அபிஷேகம்.
குருபெயர்ச்சியை முன்னிட்டு பீடத்தில் உள்ள
தஷிணாமூர்த்திக்கு சிறப்பு  ஆரத்தியில் விசேஷ தரிசனம்.
குருபெயர்ச்சியை முன்னிட்டு 
அலங்கார தக்ஷிணாமூர்த்தி.



குருபெயர்ச்சியை முன்னிட்டு பீடத்தில் நடைபெற்ற
அன்னதானத்தில் கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளுடன் பக்தர்களும்
அமர்ந்து உணவருந்தும் காட்சி.
மேலும் குருபெயர்ச்சி நாளை முன்னிட்டு பீடத்தில் உள்ள மேதா தக்ஷிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குரு யந்திரம், குருபெயர்ச்சி பிரசாதம் மற்றும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment