Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, July 26, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கருட ஜெயந்தி வைபவம் 26.07.2023

 


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கருட ஜெயந்தி விழா

ஈரேழு லோகத்தை ஆளும் எம்பெருமான் ஸ்ரீ மஹா விஷ்ணு தன்வந்திரி பெருமாளாகவும் காக்கும் கடவுளாகவும் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் ஆரோக்யலக்ஷ்மி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணபத்யம் எனும் ஆறு மதங்களுக்குரிய தெய்வங்களையும் ரமணர், மகாவீரர், புத்தர், குழந்தையானந்த ஸ்வாமிகள், ராகவேந்திரர் போன்ற 16க்கும் மேற்பட்ட மகான்களையும், குருமார்களையும், ரிஷிகளையும், 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாகவும் பிரதிஷ்டை செய்து அன்றாடம் யாகங்களும், ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் பிரதி மாத அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, சஷ்டி, திருவோணம், ஏகாதசி போன்ற விஷேச தினங்களில் உலக நலன் கருதி பல்வேறு சிறப்பு யாகங்களும் நடைபெற்று வருகிறது. சஞ்சீவி கருட கங்கா எனும் தீர்த்தகுளம், அன்னதான கூடம், கோசாலை போன்றவைகள் அமைத்து பல்வேறு சமயப்பணி, சமுதாயப்பணி செய்து வரும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 26.07.2023 புதன்கிழமை காலை, ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 21 அடி உயரத்தில் எழுந்தருளிய அஷ்டநாக விஸ்வரூப கல் கருட பகவானுக்கு கருட ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அனுமந்த ஹோமம், ஸ்ரீ மகாலக்ஷ்மி ஹோமம் பல்வேறு சஞ்சீவிகளைக் கொண்டு சிறப்பு யாகங்களுடன் நவ கலச திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும், அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும் ஸ்வாமிகளின் ஆசியுரையும் நடைபெற்றது. நாளை 27.07.2023 வியாழக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 7.00 மணிமுதல் 9.00 மணிக்குள்ளாக அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமத்துடன் திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. மேலும் உங்கள் இல்லத்தில் தன்வந்திரி பகவான் என்ற வைபவத்திற்காக தன்வந்திரி உற்சவர் விஜய யாத்திரை பெங்களூரில் துவங்கவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.    







 

Thursday, July 13, 2023

உங்கள் இல்லத்தில் எழுந்தருளும் அருள்மிகு தன்வந்திரி பகவான்!

  


Makkalai Thedi Maruthuva Kadavul

Remember the joy and religious fervour that marked the ‘house visits’ of the Utsavar Danvantri Bhagwan before his installation at the Danvantri Arogya Peedam? That joy and fervour is back.

Owing to requests by a large number of devotees, the Danvantri utsava murthy of the Danvantri Arogya Peedam temple in Walajapet will be travelling to the five southern States of Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana and Puducherry to give darshan to people in their place of choice.

Devotees had reached out to Muralidhara Swamigal, the founder of the Peedam, if they could have darshan of Danvantri Bhagwan in their houses or from where they are as they are unable to make it to Walajapet for various reasons. The devotees include many senior citizens as well.

So, Swamigal has decided to take the Utsava Danvantri Bhagwan deity to various States in the coming days. Those who wish to make use of this opportunity may contact this number.

The Danvantri Arogya Peedam, the place where the God of Medicine is celebrated, now has 93 deities and is the go-to place for people with health issues or any other problem. Make use of this opportunity to worship the Utsava Danvantri Bhagwan at your house / flat / office / public place. Call this number to make appointments for this ‘Makkalai Thedi Maruthuva Kadavul’ initiative.

 

உங்கள் இல்லத்தில் எழுந்தருளும்
அருள்மிகு தன்வந்திரி பகவான்!

பக்தகோடிகளுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை மதுராவில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு தன்வந்திரி பகவானை அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. உலகத்தோரின் பிணிகளை விரட்ட வேண்டும் என்பதற்காக இங்கே குடி கொண்டுள்ளார்.

இங்கே பிரதிஷ்டை ஆவதற்கு முன் பாரத தேசத்தின் பல புண்ணிய தலங்களுக்கு கரிக்கோல யாத்திரையாகச் சென்று திரும்பியவர் இந்த தன்வந்திரி பகவான். எண்ணற்ற புனித நதிகளில் நீராடி, புண்ணிய க்ஷேத்திரங்களில் பூஜைகள் கண்டவர். அத்தனை தலங்களின் தெய்வ சாந்நித்தியத்தைத் தன்னிடம் கொண்டவர் இந்த தன்வந்திரி பகவான்.

தவிர 93 உப சந்நிதிகளுடன் திகழும் ஆரோக்கிய பீடத்தில் அருள் பாலிப்பதால் இந்த தன்வந்திரி பகவானின் அருளாற்றல் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஒன்று. படைகள் கூடினால்தானே ராஜாவுக்கு வலிமை!

முன்பு பல பக்தர்களின் இல்லங்களுக்கும் எழுந்தருளியது போல் இப்போதும் எங்கள் இல்லங்களுக்கு தன்வந்திரி பகவான் உத்ஸவர் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்ய முடியுமா?’ என்ற கேள்வியைத் தற்போது பலரும் கேட்கிறார்கள்.

இப்படிக் கேட்பவர்களில் பலர் 70 வயதைக் கடந்தவர்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பயணித்து அனந்தலைமதுராவுக்கு வர முடியாதவர்கள். மருத்துவர்களின் அறிவுரைப்படி இல்லத்தை விட்டு நகர முடியாதவர்கள். ஆசைகள் இருந்து அழைத்துச் செல்ல போதிய துணைகள் இல்லாதவர்கள்.

இத்தகைய பக்தர்களின் ஆசையை நிறைவேற்ற வைக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் இதற்கு இசைவு தெரிவித்துள்ளார்கள்.

எனவே முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வசிக்கும் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அருள்மிகு தன்வந்திரி பகவானின் யாத்திரை வைபவம் அமையும்!

தங்கள் இல்லத்திலோ, தாங்கள் தீர்மானிக்கும் இடத்திலோ, தங்கள் குடியிருப்பிலோ, தங்கள் அலுவலகத்திலோ வாலாஜா அனந்தலைமதுரா அருள்மிகு தன்வந்திரி பகவான் எழுந்தருள வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் இல்லத்தில் அருள்மிகு தன்வந்திரி பகவான் எழுந்தருளி, ஹோமங்களும் வழிபாடுகளும் நடக்க ஏற்பாடு செய்கிறோம்

குரு பூர்ணிமா - பௌர்ணமி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது 03.06.2023

  குரு பூர்ணிமா - பௌர்ணமி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  சிறப்பு யாகங்கள் நடைபெற்றது

குரு பூர்ணிமா நாளில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி பீடத்திலுள்ள அனைத்து குருமார்களையும் வேண்டி இன்று 03.07.2023 திங்கள்கிழமை பௌர்ணமி தினத்தில் ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம், ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் 468 சிவலிங்க ரூப சித்தர்களுக்கு விஷேச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனருக்கு 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் மற்றும் 27 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் விஷேச பூஜைகளில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விஷேச அன்னதானத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஹோம பிரசாதங்கள் அளித்து ஆசிகள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் 27 நாட்கள் 27 கலசங்கள் 27 விதமான விஷேச மூலிகைகள் கொண்டு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் இன்று 28.06.2023 காலை துவங்கியது

                                                  லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம்

27 நாட்கள் 27 கலசங்கள் 27 விதமான விஷேச மூலிகைகள் கொண்டு

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் இன்று 28.06.2023 காலை துவங்கியது

 

நாள்  28.06.2023 புதன்கிழமை - 24.07.2023 திங்கள் கிழமை வரை

நேரம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக நலன் கருதி ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி முதல் 27 நாட்கள் 28.06.2023 ஆனி 13, புதன்கிழமை தசமி திதி சித்திரை நட்சத்திரம் முதல் துவங்கி 24.07.2023 ஆடி 8, திங்கட்கிழமை சப்தமி திதி அஸ்தம் நட்சத்திரம் வரை 27 கலசங்கள் கொண்டு 27 விஷேச திரவியங்களுடன் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் விஷேச திருமஞ்சனம் நடைபெறுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் சிரித்த முகத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் என்று அழைக்கப்படும் சுகம் பல தரும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வாருக்கு நடைபெறும் இந்த யாகத்தில் மூலம் மனதில் ஏற்படும் பயம், குழப்பம் நீங்கி எதிரிகள் சத்ருக்கள் தொல்லைகள் அகலும், பசுக்களின் ஆரோக்யம் பெருகும், பதவி உயர்வு கிடைக்கவும், பணி மாற்றம் கிடைக்கும், பேராபத்து நீங்கும், ஆயுள் பயம் நீங்கி ஆரோக்யம் அதிகரிக்க செய்யும். நட்சத்திர ரீதியான கிரக ரீதியான தோஷங்கள் குறையும். மேலும் பல்வேறு நன்மைகள் பெற தன்வந்திரி பீடத்தில் 27 நாட்களுக்கு 27 கலசங்களுடன் நாயுருவி, வெண்கடுகு, விளாமிச்சை வேர், மஞ்சள் கிழங்கு, பசும் சாணம், பசு நெய், பர்படாகம்,  சீந்தில் கொடி,  வலம்புரி, இடம்புரி, கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், வெள்ளெருக்கம், பட்டு நூல், பலாசு, நவசமித்துக்கள், தேன், தாமரை விதைகள், தாமரை மலர்கள் போன்ற 27 விதமான மூலிகைகளைக் கொண்டு லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமமும் கலச திருமஞ்சனமும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி தினசரி கோ பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு 9443330203  








வாராகி நவராத்திரி பூர்த்தியும் சுதர்சன ஜெயந்தியும் 27.06.2023

                                   வாராகி நவராத்திரி பூர்த்தியும் சுதர்சன ஜெயந்தியும் 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

ஆஷாட நவராத்திரி எனும் வராகி நவராத்திரி

வைபவம் நிறைவடைந்தது.


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் சென்ற ஆனி அமாவாசைக்கு அடுத்த நாள் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை பிரதமை திதி முதல் துவங்கி 26.06.2023 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 9 நாட்களாக நடைபெற்று வந்த ஆஷாட நவராத்திரி எனும் வாராகி நவராத்திரி வைபவம் இன்று 27.06.2023 செவ்வாய்க்கிழமை நவமி திதியில் சிறப்பாக நிறைவுற்றது.

ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி எனும் வாராகி நவராத்திரி வைபவம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஒன்பது நாட்களும் தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் பஞ்சமுகவாராகி யாக (சூலினி, காளி, பகுளாமுகி, திரிபுரபைரவி, வாராகி) ஐந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பஞ்ச முக வாராகி அம்மனுக்கு பல்வேறு வகையான கிழங்கு வகைகள், தாமரை மலர்கள், நவ தானியங்கள், விஷேச மூலிகைகளைக் கொண்டு நவ துர்கா ஹோமம், நவலக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், சூலினி துர்கா ஹோமம், காளி ஹோமம், சண்டி ஹோமம் போன்ற விஷேச ஹோமங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற விஷேச திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பல வண்ண மலர்களால் அர்ச்சனை நடைபெற்று வாராகி தீபம் வைத்து உளுந்து வடை, மிளகு கலந்த தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வாராகி நவராத்திரியின் ஒன்பது நாளும் வழங்கப்பட்டு வந்தது.ஸ்ரீ பஞ்சமுக வாராகி ஒவ்வொரு நாளும் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாள். இதனைத் தொடர்ந்து நாளை ஆனி மாதம் தசமி திதி சித்திரை நட்சத்திரம் 28.06.2023 புதன்கிழமை ஸ்ரீ சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பிடத்தில் 4அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு மஹா சுதர்சன ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.