Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 15, 2013

அக்டோபர் 2 ல் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்பட சிறப்பு ஹோமங்கள்..

வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வளம் பெற சிறப்பு ஹோமங்கள்…
இன்றைய காலக்கட்டத்தில் மனிதனுக்கு மிக முக்கியமாக தேவைப் படுவது தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கையானது மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னும் அதிகம் தேவை.

இந்த வகையில் மத்திய அரசும், மாநில அரசும் இவர்களுக்கு பல வகையில் நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மனிதனாய் பிறந்து விட்ட ஒவ்வொருவரும் பிறருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும்.

எனவே மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் நம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும், பிறரைப்போல அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவும், போதிய கல்வி பெறவும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற வேண்டியும் மற்றும் சிறந்த வாழ்க்கைத் துணை கிடைத்து வாழ்வில் வசந்தத்தைத் தேடிக்கொள்ள இவர்களுக்கு உடலில் ஊனம் இருந்தாலும் மனதில் ஊனம் இல்லாத நிலை வேண்டும் என்ற நற்சிந்தையுடன் இலவசமாக அனைத்து தரப்பினரும் மத வேறுபாடின்றி பங்கேற்கும் வகையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்ற மகானின் புனித நன்னாளில், ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உடல்நலம் மனநலம் வேண்டி சிறப்பு இலவச ஹோமங்கள் நடத்த உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெறும் நித்திய அன்னதானத்திலும் பங்குபெற்று பயன் பெறலாம்.

இந்த சிறப்பு இலவச ஹோமத்தில் சாதனைபடைத்தவர்கள், சாதனை படைக்க இருப்பவர்கள், திருமண வரம் வேண்டி காத்திருப்பவர்கள், நல்ல தொழில் அமைய, சிறந்த பணி கிடைக்கவும், ஆரோக்யம் வேண்டியும் இதுபோன்ற பல தேவைகளை மனதில் சுமந்து ஒரு வித சஞ்சலத்தோடு இருக்கும் அனைவரும் கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின் அருளை பெற்றும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியை பெற்றும் உலகில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

ஹோமத்திலும், பூஜையிலும் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் ஹோம திரவியங்கள், பழங்கள், தேன், நெய், புஷ்பங்கள், வஸ்திரங்கள் அவ்வமயம் நடைபெறும் அன்னதானத்திற்கு மளிகைப் பொருட்கள் கொடுத்து உதவலாம்.

தன்வந்திரி குடும்பத்தினர்

மேலும் தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment