Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 23, 2013

த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலக நலன் கருதி த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஹோமத்தின் பொழுது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரையாற்றினார். அப்போது அவர் ஹோமத்தைப் பற்றியும், ஹோமத்தில் பங்கேற்பதின் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் உத்தர்கான்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அனைத்து மக்களும் அவரவர் இல்லங்களுக்கு நலமுடன் திரும்ப வேண்டும் எனவும், மேலும் இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருக்கவும் வேண்டி கூட்டுப்பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

பின்னர் பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினிக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு அந்த அபிஷேக தீர்த்தமானது ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வருகிற 25.6.2013 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் தச மகா யாகமும், 30.6.2013, 7.7.2013 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில் த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமமும் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றும், பின்னர் நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.




தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
E-mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment