Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 30, 2023

Thai Kiruthigai, Shyamala Navratri special Abishegams at Sri Danvantri Arogya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                               தைமாத கிருத்திகை, சியாமளா நவராத்திரி நிறைவு                                                       ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ அஷ்டபுஜமரகத ராஜமாதங்கி                                       சிறப்பு அபிஷேகங்கள் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  நித்ய ஹோமங்கள், அபிஷேகங்கள்,  பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

இன்று ஜனவரி 30ம்தேதி திங்கள் கிழமை தை மாத  கிருத்திகையை  முன்னிட்டு வேறு எங்கும் காண முடியாத வகையில்  பீடத்திலேயே  கார்த்திகை பெண்களுடன் அமைந்துள்ள ஸ்ரீகார்த்திகை குமரனுக்கு  பால், மஞ்சள்,சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. 

முன்னதாக சியாமளா நவராத்திரியில் நிறைவு நாளான இன்றும் (திங்கள்கிழமை)  ராஜமாதங்கி ஹோமம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீஅஷ்ட புஜ மரகத ராஜமாதங்கிக்கு  பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது. 

ஹோமம் , அபிஷேகம் , பூஜைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து  பீடாதிபதி  டாக்டர்.முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். 

 வருகிற பிப்ரவரி 1ம்தேதி  புதன்கிழமை ஏகாதசியை  முன்னிட்டு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஹோமமும், நெல்லிப்பொடி அபிஷேகமும் நடைபெறுகிறது,.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.









Sunday, January 29, 2023

Laksha Aswarooda jeba Homam at Sri Danvantri Arogya peedam

வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் லட்ச அஸ்வாரூட ஜப ஹோமம் நிறைவு ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு அபிஷேகம்

வாலாஜாப்பேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  தினமும் பல்வேறு  சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று 28ம்தேதி  லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம் , கணபதி  பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது .

இன்று  29ம்தேதி ஞாயிற்றுக்கிழமை  லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம் மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. 

பின்னர் ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு  சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது. 

முன்னதாக சியாமளா நவராத்திரியில் 8ம் நாளான இன்று ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கிக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும்  பூஜைகளுடன் நடைபெற்றது. இது தவிர ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீசுதர்சன, ஸ்ரீ மகாலட்சுமி ஹோமங்களும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.  ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமமும் , சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. 

பூஜை மற்றும்  ஹோமங்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.









இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 

Saturday, January 28, 2023

Radhasapthami day- Aswamedha pooja at Sri Danvantri Arogya Peedam

 வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் ரதசப்தமி  முன்னிட்டு   7 குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை 

 வாலாஜாப்பேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பல்வேறு  சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருவது வழக்கம். 

அந்த வகையில்  27 நட்சத்திரக்காரர்கள்  நலன் கருதியும் , ராஜ யோகங்கள் கிடைக்க,  ஸ்திரி சாபம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, தொழில் வண்டி, வாகனம் கிடைத்திட,  அரசியல், அரசாங்கம், சினிமா, வர்த்தம் போன்றவற்றில் அதிக லாபம் பெற்றிட, எதிரிகள் தொல்லை அகல, போட்டி பந்தயங்களில் வெற்றி  பெற்றிட, காரியத்தடை அகன்று பல்வேறு  நன்மைகள் கிடைத்திட வேண்டி   தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 7குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை  நடைபெற்றது. 

இன்று 28ம்தேதி  சனிக்கிழமை ,  அஸ்வமேத பூஜையை  முன்னிட்டு 7 குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு  தன்வந்திரி பீடம் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்னர்  பீடாதிபதி  டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக  கணபதி  பூஜையுடன்  ஹோமமும்  நடைபெற்றது.

பின்னர் அலங்கரித்து அழைத்து வரப்பட்ட 7 குதிரைகளுக்கும் தனித்தனியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  குதிரைகளுக்கு  உணவு வழங்கப்பட்டது.  பின்னர் தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்களும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில்  குதிரைகளுக்கு மலர்கள் தூவி, பூஜை செய்து வழிபட்டு சென்றனர். 

பின்னர் சிறப்பு பூஜைகளுடன்  லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம்  தொடங்கி நடைபெற்றது. நாளை 29ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு அஸ்வாரூடா ஹோமம் மஹா பூர்ணாஹூதியும் பின்னர் ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.

அஸ்வமேத பூஜை மற்றும்  ஹோமங்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 










Friday, January 27, 2023

21 Feet Vishwaroopa Ashta Naga Kal Garudar Varushabishekam at Sri Danvantri Arogya Peedam

வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் 21 அடி உயர  விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் வருஷாபிஷேக விழா

 வாலாஜாப்பேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, 21 அடி உயர  விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் 

வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கருட பகவானை  தரிசனம் செய்தனர். 

உலகில் வேறு எங்கும் இல்லாத  வகையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில்  21 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் , 30 டன் எடையில் மகாபலிபுரத்தில் உருவாக்கப்பட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக நீண்ட வாகனத்தில் கரிக்கோல பவனி வந்த  விஸ்வரூப  அஷ்ட நாக  கல் கருடர்  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் நுழைவு வாயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கம்பீரமான காட்சியுடன்,  பெரிய திருவடியாக  பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். 

இந்த 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடரை சர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள்,  வாகன தோஷங்கள் அகலவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் மனமுருக வழிபட்டு செல்கின்றனர்.

தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில் 21  அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பிரதிஷ்டை செய்யப்பட்டதின் வருஷாபிஷேக விழா இன்று 27ம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை ஒட்டி  முன்னதாக கருடபகவானுக்கு பல்வேறு ஹோம திரவியங்களை கொண்டு  சிறப்பு ஹோமம்  நடைபெற்றது. பின்னர்  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்,  விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு அபிஷேகமும் , பூஜைகளையும் நடத்தி வைத்தார். 

கருடர் வருஷாபிஷேக விழா ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடபகவானையும்,  மூலவர் தன்வந்திரி பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து , பிரசாதமும்,ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

முன்னதாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த பெண் பக்தர்கள் , கருடர் வருஷாபிஷேக விழாவை  ஒட்டி  கருட பகவான் பாடல்கள் பாடி பஜனை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 












Thursday, January 26, 2023

Republic day -Bharatha matha Homam,Abishegam at sri Danvantri Arogya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                        குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி  வைத்து தேச நலம், தேக நலம் வேண்டி பாரத மாதா ஹோமம்  உள்பட சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் 

வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் அனைவரும் வணங்கி சென்றிடும் வகையில்  பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 

4 அடி உயர பீடத்தில் பின்புறத்தில் பாரத நாட்டின் உருவத்துடன்  , கையில் தேசிய கொடி மற்றும் சிம்ம வாகனத்துடன்  4அரை அடி   உயரத்தில்  பாரதமாதாவிற்கு  சிலை அமைக்கப்பட்டுள்ளது.  தனி சன்னதி  கொண்டுள்ள  இந்த  பாரத மாதாவிற்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின  விழா நாட்களில் தேசிய கொடி ஏற்றி ஹோமம் , அபிஷேகமும், முக்கிய தினங்களில்  சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருவது வழக்கமாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இன்று ஜனவரி 26ம்தேதி  குடியரசு தின விழா வை முன்னிட்டு , தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் தேசிய கொடி ஏற்றி, தேச நலம், தேக நலம் வேண்டி பாரத மாதாவிற்கு  சிறப்பு ஹோமம்  நடத்தப்பட்டது. பின்னர் ஸ்வாமிகள், பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி வைத்தார்.    

இந்த ஹோமம் மற்றும் பூஜை, தேசிய கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இனிப்பு வழங்கி , பாரத மாதாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், பாரத மாதாவை வழிபட வேண்டியதின் அவசியம் குறித்தும்  பேசினார். பின்னர் பக்தர்களுக்கு ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்.

இது தவிர இன்று ஜனவரி 26ம்தேதி சியாமளா நவராத்திரியில் 5ம் நாளான இன்று  ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கி, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி ஹோமங்கள், வாஸ்து நாளை முன்னிட்டு  வாஸ்து  பகவான் ஹோமம்,  பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஹோமம் ஆகிய  ஹோமங்களும் , ஸ்ரீ ராஜ மாதங்கி,ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஆகிய தெய்வங்களுக்கு  பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

பூஜைகள், ஹோமங்கள் , அபிஷேகங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்து , பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 









Wednesday, January 25, 2023

Five days- Five Homams at sri Danvantri Arogya Peedam




வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஐந்து நாட்கள் ஐந்து வைபங்கள்
 நாளை 26ம்தேதி வாஸ்து நாள் ஹோமம், அபிஷேகம்
நடைபெறுகிறது

 வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐந்து நாட்கள் & ஐந்து வைபவங்கள் நடைபெறுகிறது.
 
இதன்படி நாளை ஜனவரி 26ம்தேதி வியாழக்கிழமை சியாமளா நவராத்திரி வசந்த பஞ்சமியில் மாபெரும் ஸ்ரீ வராகி , ஸ்ரீராஜமாதங்கி,ஸ்ரீபாலாதிரிபுர சுந்தரி  ஹோமங்களும், அபிஷேகம், புஷ்பாஞ்சலி சிறப்பு அர்ச்சனை ஆகியவையும், குடியரசு தினத்தை முன்னிட்டு பாரத மாதாவிற்கு  சிறப்பு ஹோமம் பூஜைகளும்  நடைபெறுகிறது. மேலும்  நாளை 26ம்தேதி  வாஸ்து நாளை  முன்னிட்டு  காலை 10 மணி முதல் 1 மணி வரை  வாஸ்து பகவான் ஹோமம் ,அபிஷேகம் மற்றும் அஷ்டதிக் பாலகர் பூஜை ஆகியவையும்  நடைபெறுகிறது

27ம்தேதி வெள்ளிக்கிழமை 21 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பகவானுக்கு முதலாமாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் விஷேச திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும்  பிரம்மாண்டமாக  நடைபெற உள்ளது.

28ம்தேதி சனிக்கிழமை ரதசப்தமியை முன்னிட்டு 7 குதிரைகளைக் கொண்டு அஸ்வமேத பூஜையுடன் லட்ச ஜப அஸ்வாரூடா யாகம் தொடங்குகிறது.  29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை லட்ச ஜப அஸ்வாரூடா யாகம் மஹா பூர்ணாஹுதி நடைபெறுகிறது.

 வருகிற 30ம்தேதி  திங்கள்கிழமை ஷியாமளா நவராத்திரி  நிறைவு பெறுவதை முன்னிட்டு ஸ்ரீ ராஜ மாதங்கி தேவிக்கு சிறப்பு ஹோமம், பூஜை மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறுகிறது.

முன்னதாக  சியாமளா நவராத்திரியில் 4ம் நாளான இன்று 25ம்தேதி புதன்கிழமை,            ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமமும்,சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றது.

ஹோமங்கள், பூஜைகள், அபிஷேகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு , பூஜை பிரசாதங்கள் மற்றும்  அன்ன பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Monday, January 23, 2023

41 feet Sakkarathalvar sthoobi Boomi pooja at Sri Danvantri Arogya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                       41 அடி உயர சக்கரத்தாழ்வார் ஸ்தூபிக்கான பூமி பூஜை விழா 

 வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் நித்ய ஹோமங்கள், பல்வேறு சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள்,  பூஜைகள் நடைபெற்று  தன்வந்திரி ஆரோக்ய பீடம் யக்ஞபூமியாக திகழ்ந்து வருகிறது. 

 தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆரோக்யம் அருளும் கடவுளான மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுடன், 468  சிவலிங்க ரூப சித்தர்கள் உள்பட 89 பரிவார  தெய்வங்களும் அமைய  பெற்று பக்தர்களுக்கு  அருள்பாலித்து  வருகின்றனர்.  மேலும்  தாய் மூகாம்பிகை, அருள்மிகு வீரபத்திரர் சன்னதிகளும் மிக விரைவில் அமைய உள்ளன. 

இந்த  நிலையில் தற்போது  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைய பெற்றுள்ள காலச்சக்கரத்தின் அருகில் 41 அடி உயரத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஸ்தூபி அமைக்கப்பட உள்ளது.  ஒரு புறம் நரசிம்மரும், மற்றொரு புறம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் அமைக்கப்பட உள்ள இந்த ஸ்தூபிக்கான   பூமி பூஜை விழா இன்று 23ம்தேதி திங்கள் கிழமை  காலை 10.17 மணிக்கு  நடைபெற்றது. 

 ஸ்தூபி பூமிபூஜையை முன்னிட்டு ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஹோமம் , ஸ்ரீ சூக்த  ஹோமம் ஆகியவற்றுடன்  சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது.

 மேலும்  சியாமளா நவராத்திரியில் 2 வது நாளாக இன்றும் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம் , கனகதாரா பூஜைகள் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. 

ஸ்தூபி  பூமி பூஜை மற்றும் ராஜமாதங்கி ஹோமம், அபிஷேகம் ஆகியவற்றில்  பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து , பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர். 

ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 

-------------------