Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203
Showing posts with label booking. Show all posts
Showing posts with label booking. Show all posts

Monday, September 11, 2017

வாழை பூ பூஜை, தன்வந்திரி பீடத்தில்

தன்வந்திரி பீடத்தில் வருகிற 05.10.2017 பௌர்ணமியில் கால தோஷத்தால் தடுமாறும் தம்பதிகளுக்கு மண வாழ்க்கையை தரும் வாழை பூ பூஜை


அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெற்றோர்கள் மற்றும் உற்றோர்கள் ஆசியுடன்  ஒரு மனைவியோடு வாழவேண்டும். இதுவே நல்ல குடும்பத்திற்கு அழகு என்பர். ஒருசிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை  மறுமணம் முடித்து அவதிகுக்குள்ளாகி வருகிறார்கள். பெண் ணின் உறவினர்கள் நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்து, மகளிர் காவல்  நிலையம் என்று  பல இடங்களில் அலைய நேரிடுகிறது.. கணவர் வேறு  தாரத்தோடு வாழச் சென்றுவிட்டால், முதல் மனைவி யின் வாழ்க்கை சூன்னியமாகி வருமானம், பாதுகாப்பு இல்லாமையால், குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதெல்லாம் சமுதாயத்தில் சகஜம் என்று சிலர் சொல்வார்கள். பெண் கொடுக்கும்போதே மண மகனுக்கு இருதார தோஷம் ஆராய்ந்து பின்னர்  பெண்ணைக் கொடுக்க வேண்டும்.என்பர்,
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7,8 ஆம் வீட்டிற்குரிய கிரகம் பாவியானாலும் அல்லது பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அவர் இருதார  தோஷம் உள்ளவர். அல்லது 12 ஆம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன் கூடினாலும் 2, 7-க்குடைய கிரகம் ஏதேனும் ஒன்று பாப கிரகமாக இருந்தாலும், அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும்  7 ஆம் வீட்டிற்குரியவர் பாவ கிரகத்துடன் கூடி இரண்டால் வீட்டில் இருக்க, அந்த கிரகத்தைச் செவ்வாய் பகவான் பார்த்தாலும்,8ம் இடத்துக்குரியவர் 7ம் இடத்தில் அமர்ந்தால் திருமணம் என்பது ஒரு கேள்விக்குரியில் முடிகிறது. என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு உள்ள  தார தோஷத்தில் பிறந்தவருக்கு ஒரு சிலபெற்றோர்கள் அறியாமையால் திருமணம்  நடந்தால் போதும் என்று திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதுவும் ஒரு வகையில் காலசக்கரத்தின் திருவிளையாடல் என்கின்றனர். இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் ஆண், பெண் திருமணத்திற்கு முன்பே  உரிய ஜோதிடரிடம் இரு தார தோஷம் அறிந்து  ஆலோசனை பெற்று உரிய எளிய  பரிகாரம் செய்து, தோஷங்களிலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கணவனோடு மனைவியும், மனைவியோடு கணவனும் ,சேர்ந்து வாழவும், அல்லது புதிய பாதையில் திருமண பந்தத்தை அமைத்துக் கொள்ளவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  வருகிற 05.10.2017 வியாழக் கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் இரு வேளையும் பக்தர்கள் பங்கேற்று பலனடைய வேண்டி  மேற்கண்ட தார தோஷங்கள் விலகவும் ,ஆண், பெண் திருமணப் பிராப்தி   ஏற்படவும், சாபங்கள் விலகவும், களத்திர தோஷம் நீங்கவும், துர்மரணத்தால் வீட்டில் நிகழும் அசம்பாவிதங்கள், அசௌகர்ய நிகழ்வுகள்  காரிய தடைகள் நிவர்த்தி பெற்றிடவும், கர்ம வினைகளால் தொடரும் தோஷதடைகள் வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் விதண்டா வாதங்கள் நிவர்தி பெற்று ,சகல சௌபாக்யம் பெற்றிட சித்தர்கள் அருளிய வாழைப்பூ  காலசக்கர பூஜையுடன், நவகன்னியருக்கு சிறப்பு அபிஷேகமும் ,அலங்காரத்துடன் கன்யா பூஜை, தம்பதி பூஜை சுமங்கலி பூஜையும் நடைபெற்று பங்குபெரும் நபருக்கு கலசாபிஷேகம் செய்து தடைகள் நீங்கவும் திருஷ்டிகள் விலக  ஏற்ற இறக்க தீப பூஜை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை வாலாஜாபேட்டை.632513
போன். 04172-230033,23274
www danvantripeedam@gmail. Danvantritemple.org


Tuesday, June 27, 2017

Vidhya Ganapathi Homam At Sri Danvantri Arogya Peedam

Walajapet, Sri Danvantri Arogya Peedam Founder and Peedathipathi, Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal conducting “ Sri Vidya Ganapathy Homam “ on Wednesday 28.06.2016 by 10.00 A.M at Sri Danvantri Arogya Peedam. Lord Ganesha is the remover of all obstacles and is worshipped in the beginning of any pooja or commencement of any auspicious work. Lord Ganesh is an embodiment of knowledge and wisdom and bestows his blessings.
He is being worshipped in the form of  Vidya Ganapati for success in examinations, Buddhi Ganapati for knowledge, He is the son of Lord Shiva and Goddess Parvati. The devotee can get rid of all the obstacles and problems that he or she might encounter in their new ventures of life, both professional and personal by worshipping Lord Ganapathy.

Lord Ganesha is also believed to be the governor of the Mooladhara chakra, which signifies material prosperity. Hence performing the Ganapathi Homam grants wealth and solves wealth related issues in a devotee’s life.
Lord Ganesha is also believed to be the gatekeeper of the Sushumna Nadi, located inside the Mooladhara Chakra. Performing the Ganapathi Homam enlightens the spiritual mind and makes one conscious of the higher realms of existence.It is a belief that by worshiping Ganesha once a year by conducting the Homam, one can achieve prosperity, health and a happy domestic life.
The Ganapathi Homam also gives the benefit of good health to the devotees who might suffer from ailments like anxiety, depression and injuries sustained during accidents. Lord Ganapathi is worshiped as the God of Success. Worshiping him is believed to ensure success and win over mortal enemies.

For More Details,

Ph: 04172-230033/230274/09443330203

Tuesday, June 20, 2017

KURMA JAYANTHI 2017

சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி  வழிபாடு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.06.2017  புதன் கிழமை காலை 10.00 மணியளவில்  ஆனி கிருஷ்ண பட்ச த்வாதசி  திதி கூர்மஜெயந்தியை முன்னிட்டும். மகா விஷ்ணுவை வழிபட உகந்த தினத்தன்று மாபெரும் ஸ்ரீ கூர்ம ஹோமமும் கூர்ம பெருமாளுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

கூர்ம அவதார ஜெயந்தி பலன்.

ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி வழிபாடு மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம்.. ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது.
அவதாரத்திருநாள் மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

ஓம் தராதராய வித்மஹே             ஓம் லோகாத்யக்ஷõ வித்மஹே
தாராத்யக்ஷõ தீமஹி               பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்       தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்

ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கூர்மநாதப் பெருமாள்
கூர்மவதார பெருமாளுக்கு ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் தவிர உலகில் வேறெங்கும் கோவில் இல்லை என்ற நிலை மாறி உள்ளது. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூர்ம பெருமாளுடன் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி அமைத்துள்ளார்..

கூர்ம அவதாரத்தின் ஒரு வகையானத் தத்துவம்


நற்குணங்கள் ஒரு புரமும் துற்குணங்கள் ஒருபுரமும் இழுக்க, ஓரு பக்தன் சாதனை (பக்தி, யோகம், தவம்) செய்ய விருப்பம் கொண்டால் அதை இறைவனே பொருப்பேற்று, தொடங்கி, தாங்கி, உறுதுணையாக, தேவைப்படும்போது தானே ஏற்றி நடத்தி, விஷம் போன்றத் தீயவைகளை விலக்கி, பல நன்மைகளைத் தந்து, நல்லவர்களுக்கு அமிர்தமான பேரானந்த பேற்றை அளிப்பான்.என்பதாகும்.   கூர்ம அவதாரத்துடன்-தன்வந்திரி-மோகினி அவதாரங்கள் ஒருசேர நிகழ்ந்து-ராகு-கேது கோள்கள் உருவான நிகழ்வு-திருப்பார்கடல் கடைந்தது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sunday, June 11, 2017

GURU PEYARCHI MAHA YAGAM 2017-2019

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
  02.09.2017, சனிக்கிழமை 3.09.2017, ஞாயிற்றுக்கிழமை
 இரு தினங்கள் சிறப்பு இலட்சார்ச்சனையுடன்
 குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாத கர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், ஒன்று, மூன்று, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி  02.09.2017 சனிக்கிழமையன்று  கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் குரு பகவான் துலா இராசியில் சஞ்சரிக்கவுள்ளதால் மேஷம், மிதுனம், கன்னி. தனுசு, கும்ப ஆகிய ராசிகளுக்கு குரு பலம் ஏற்பட்டு சுபிட்சமான பலன் உண்டாகும். உலகில் அமைதி உண்டாகவும், எல்லோரும் சுபிட்சமாக வாழவும், குரு பெயர்ச்சியால் அசுபப்பலனை எதிர் கொள்ளும் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம் இராசி நேயர்கள் குரு புத்தி குரு திசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.  அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 02.09.2017  சனிக் கிழமை  காலை 10.30 மணிமுதல் 1.00 மணி வரை மாலை 5.30  மணி முதல் இரவு 7.00 மணிவரை 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை  காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணிவரை இலட்சார்ச்சனையுடன்  குருப்பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
 
இந்த யாகத்திலும் இலட்சார்ச்சனையிலும்  கலந்துகொள்வதற்கு ஒரு நபருக்கு/ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  குரு பகவான் யந்திரம் ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் புகைப்படம் ஹோம பிரசாதத்துடன்  வழங்கப்படும்.இலட்ச்சார்னையில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு சங்கல்ப காணிக்கை ரூபாய் 200/- வீதம் செலுத்தி  கலந்து கொள்பவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி பகவான் டாலர் மற்றும் புகைப்படம் மற்றும் ஹோம பிரசாதம் வழங்கப்படும்.

இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் 20.08.2017 க்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
தொலை பேசி. 04172- 230033,230274,9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775

IFC: SBIN0000775