Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 31, 2019

Nava Chandi Yagam with 1600 KG Turmeric Seeds


தன்வந்திரி பீடத்தில்1600 கிலோ மஞ்சள் கிழங்குடன்மாபெரும் நவசண்டி யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 30.08.2019 வெள்ளிக்கிழமை ஆவணி அமாவாசையை முன்னிட்டு 1600 கிலோ மஞ்சள் கிழங்குகள் கொண்டு நவ சண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகமானது சென்ற 28.08.2019 புதன்கிழமை அஷ்ட பைரவர் யாகத்துடன் துவங்கியது. தொடர்ந்து 29.08.2019 வியாழக்கிழமை நவ துர்கா யாகம் நடைபெற்று நேற்று நவ சண்டி யாக, மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.
இந்த யாகத்தில் பட்டு வஸ்திரங்கள், சௌபாக்ய பொருட்கள், விசேஷ மூலிகைகள், நவ சமித்துகள், பட்சணங்கள், பழங்கள், தாமரை மலர்கள், புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், நிவேதன பொருட்கள், மேலும் ஏராளமானவை சமர்ப்பிக்கப்பட்டு யக்ஞஸ்ரீ முர்ளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் காலபைரவருக்கு குருதி பூஜையுடன் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சென்னை திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினர்களின் ஸ்ரீ தேவி மாஹாத்மியம், ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ சௌந்தர்யலஹரி, ஸ்ரீமன் நாராயணீயம், ஸ்ரீ விஷ்னு சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடைபெற்றது.
இவ்வைபவங்களில் திருக்கழுகுன்றம் சிவஸ்ரீ அன்புசெழியன் அவர்கள், ஆற்காடு தொழிலதிபர் திரு. J.லக்ஷ்மணன் அவர்கள், சக்தி ஆன்லைன் ஸ்தாபகர் திரு. பார்திபன் அவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இதில் உலக மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் ஏராளமான பல நன்மைகளுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து மஞ்சள் கிழங்கு சண்டி ஹோம பிரசாதமாக வழங்கினார். இதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




















  

Thursday, August 29, 2019

Nava Durga Yagam


தன்வந்திரி பீடத்தில்நவதுர்கா யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 29.08.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 1.00 மணி வரை நவதுர்கா யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை ஆவணி அமாவாசையை முன்னிட்டு நவ சண்டி யாகம் நடைபெற உள்ளது.

இந்த யாகம் கோபூஜை, புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள வாதியம், நவாவரண பூஜை, நவ துர்கா பூஜையுடன் நடைபெற்றது. இந்த யாகத்தில் விசேஷ மூலிகைகள், பழங்கள், பட்டி வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், நவசமித்துகள், நிவேதன பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் சென்னை திருமதி. சித்ரா தேவராஜ் குழுவினர்களின் ஸ்ரீ துர்கா கவசம், ஸ்ரீ துர்காஸூக்தம், ஸ்ரீ தேவிமஹாத்மியம், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் பாராயணங்கள் நடைபெற்றது.

மேலும் இதில் சென்னை திரு. பாஸ்கர் குடும்பத்தினர்கள், சென்னை திரு. பிரகாஷ் குடும்பத்தினர்கள், ஊட்டி திரு. ராஜசேகர், சென்னை டாக்டர். ரங்கராஜன், ஹைதெராபாத் திருமதி. ராதா, சென்னை திருமதி. இன்பவல்லி, சென்னை திருமதி. சுபத்ரா மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Sri Maha Sudarsana - Danvantri - Drishti Durga Koti Japa Homam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் கோடி ஜப யாகம் துவங்கியதுஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டுஇன்று 28.08.2019 முதல் 03.11.2019 வரைமஹா சுதர்சன – தன்வந்திரி – திருஷ்டி துர்கா ஹோமம்தொடர் யாகம் துவங்கியது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழா, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா, குரு பெயர்ச்சி விழா என முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று 28.03.2019 காலை 8.00 மணியளவில் கோபூஜை, புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள வாதியத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சனதன்வந்திரிதிருஷ்டி துர்கா கோடி ஜப ஹோமம் துவங்கியது. இந்த யாகம் வருகிற 03.11.2019 வரை நடைபெற உள்ளது.

இந்த யாகத்தில் தொழிலதிபர் திரு. W.R.மஹேந்திரவர்மன், வாலாஜா காவல்துறை ஆய்வாளர் திரு. பாலு, இராணிபேட்டை சரக தீ அணைப்பு துறை அலுவளர் திரு. மஹேந்திரன், மலேஷிய பக்தர்கள் திரு. சரவணன், திரு. பாஸ்கரன், வாலாஜா தொலை தொடர்பு துறை அதிகாரி திருமதி. கஜலக்ஷ்மி, வாலாஜா M.S. ஸ்க்ரீன்ஸ் திரு. சேதுராமன், கீழ்புதுபேட்டை திரு. தேவராஜ சாமியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த யாகத்தில் ஸ்ரீ தன்வந்திரிக்குரிய விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட்டன. வருகை புரிந்த பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகல் அருளாசிகளை வழங்கி மஞ்சள் பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Monday, August 26, 2019

Ekadasi Homam - Amla Powder Abhishekam


தன்வந்திரி பீடத்தில்ஏகாதசியை முன்னிட்டு நெல்லிப்பொடி திருமஞ்சனம்நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஏகாதசியை முன்னிட்டு இன்று 26.08.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

பெருமாளை வழிபடுவதில் மிகவும் முக்கியமான நாள் ஏகாதசி. இந்நாளில் பெருமாளை வேண்டி நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று வழிபட்டால் சகல சௌபாக்யங்களும், ஆரோக்யமும், ஆயுள் விருத்தியும், நல்வாழ்வும் கிடைக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஏகாதசி திதியில் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற ஏகாதசி ஹோமத்தில் விசேஷ மூலிகைகள், நவசமித்துகள், நெய், தேன், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தையிர், பன்னீர் போன்ற பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு நெல்லிப்பொடி தீர்த்தத்துடன் பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Sunday, August 25, 2019

Sarabeswara Homam - Sathru Samhara Homam - Bhakthi Parayanam


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்சரபேஸ்வரர் யாகம் - சத்ரு சம்ஹார ஹோமம் பாராயணங்களுடன் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சரபேஸ்வரர் யாகம், சத்ரு சம்ஹார பூஜை,  பக்தி பாரயணங்களும் நடைபெற்றது.

இதில் சென்னை அரும்பாக்கம் திரு. பக்தவத்ஸலம் குடும்பத்தினர், சென்னை ராகவர்ஷிணி குழுவினர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். இந்த யாகங்களில் நெய், தேன், நவசமித்துகள், விசேஷ மூலிகைகள், மஞ்சள், பூசனிக்காய், பழங்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மற்றும் ஏராளமான விசேஷ திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. மேலும் ஸ்ரீ விநாயக தன்வந்திரி, ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறைபிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.