Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, November 24, 2017

தன்வந்திரி பீடத்தில் பதினோரு ஹோமங்கள்.

தன்வந்திரி பீடத்தில்
பதினோரு ஹோமங்கள்.

உலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி இன்று 24.11.2017 வெள்ளிக்கிழமை, திருவோண நட்சத்திரம், சஷ்டி திதி, வாஸ்து நாள் முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ குபேர லக்ஷ்மி யாகம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம், ஸ்ரீ தன்வந்திரி யாகம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர் யாகம், வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார யாகம், திருஷ்டி துர்கா ஹோமம், பிரத்யங்கிரா ஹோமம், சூலினி ஹோமம் போன்ற பதினோரு யாகங்கள் நடைபெற்று அதுக்குறிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அராதனயும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் ஆரோக்யம், கல்வி, செல்வம், ஆனந்தம், குடும்ப க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


இதில் ஏராளமான நபர்கள் பங்கேற்று ஹோம, அபிஷேக பிரசாதங்கள் பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Thursday, November 23, 2017

தைலாபிஷேகம்..........

வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்
 நவம்பர் 28 முதல் டிசம்பர் 14 வரை
மூலவர் தன்வந்திரிக்கு  தைலாபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி மற்றும் உள்ளத்துப் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 13ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழா காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை  இந்த வைபவம் நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை முதல் டிசம்பர் 14ம் தேதி வியாழக் கிழமை வரை நடைபெறுகிறது.

தன்வந்திரி பகவான் யார் :

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர். இவரை வழிபடுவதால் அனைத்து விதமான உடல் நோய்களும் மற்றும் மன நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :

இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபத்துடன் அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமமும், எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம். இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத் தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும்.
14.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை

தம்பதிகள் நலன் கருதி மேற்கண்ட தினத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்க்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது..

இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன்  நடைபெற உள்ளது.

இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர். இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு 108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203
Web: www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

தத்த ஜெயந்தி 2017

தன்வந்திரி பீடத்தில் 03.12.2017ல்
தத்த ஜெயந்தி விழா
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞை படி வருகிற 03.12.2017 ஞாயிற்று கிழமை அன்று காலை 10.00 மணி முதல் தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா தத்தாத்ரேயர் ஹோமத்துடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

தத்தாத்ரேயர் வரலாறு :

இறையருளால், மும்மூர்த்தியர் அம்சமாக அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் அவதரித்தவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். இடபமும், அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.

உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும், விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

வருகிற 03.12.2017 ஞாயிற்றுகிழமை அன்று தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன் மகா அபிஷேகமும், நாம அர்ச்சனையும், குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு விசேஷ பால் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெற்றுள்ளது என்று கூறுகிறார் கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் :

‘ ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தந்நோ தத்த பிரசோதயாத் '

மேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது உண்மை.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203


சுமங்கலிபூஜை...

14.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை

தம்பதிகள் நலன் கருதி மேற்கண்ட தினத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்க்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது.

இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன்  நடைபெற உள்ளது.

இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர். இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு 108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203


Sunday, November 19, 2017

Santhana Gopala Yagam - Purohitar Sangam.

Thanks to " DINAMANI, SAKSHI, TAMIZH MAKKAL BOOMI " Daily News Papers....



கந்தர்வராஜ யாகம்

தன்வந்திரி பீடத்தில்
கந்தர்வராஜ யாகம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ யாகம் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற்றது.

கந்தர்வராஜ யாகத்தின் மூலம்  எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.


இன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம்  நடைபெற்றது. பங்கேற்ற நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Saturday, November 18, 2017

கந்தர்வராஜ யாகம்

நாளை
தன்வந்திரி பீடத்தில்
கந்தர்வராஜ யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

நாளை 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம்  நடைபெற உள்ளது. பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு;
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172230033, செல்9443330203

Friday, November 17, 2017

Purohitar Sangam and Pradosha Puja......

Thanks to " DINAMANI, DINAMALAR, THINABOOMI, SAKSHI, MAALAI MALAR, ANDHRA JYOTHI " Daily News Papers....






சந்தான கோபால யாகம்.....

நாளை
தன்வந்திரி பீடத்தில்
சந்தான கோபால யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 18.11.2017 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற இருக்கிறது. குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

அந்த வகையில் நாளை 18.11.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சந்தான கோபால யாகம்  நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க்கும் தம்பதியருக்கு வெண்ணெய் பிரசாதமும் வழங்கப்படும்.

ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த யாகத்தில் தம்பதிகள்  கலந்து கொண்டு தன்வந்திரி அருள்பெற வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203


Thursday, November 16, 2017

சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் தரிசனம்

இன்று 16.11.2017 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர், திரு என். ராஜன் அவர்கள் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து சிறப்பு பூஜை செய்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றார்.


Special Homams and Poojas at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks to " KALAIKATHIR, ANDHRA JYOTHY, SAKSHI " Daily News Papers.......