Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 30, 2018

Sudarsana Homam .....


தன்வந்திரி பீடத்தில்சோதனைகள் விலகசுதர்சன ஹோமம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி உபாதைகள், சத்ரு உபாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற்றது.

ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட்து. மேலும் யாகத்தில் வைத்து பூஜித்த வெண்ணையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.

மேற்கண்ட யாகத்தில் தொழில், வியாபாரம், உத்யோகத்தில்  உயர்வு, சத்ருபாதை  விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள் தனியவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த யாகத்தில் சென்னை மெட் இந்தியா மருத்துவமனை பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் T.S. சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று, ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Thursday, September 27, 2018

Guru Peyarchi Yagam 2018 ……


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்இரண்டு முறை குருப் பெயர்ச்சி மகா யாகம்.

 வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 நடைபெறுகிறது.

தற்போது குருபகவான் மேஷ ராசிக்கு ஏழாமிடமான துலாம் ராசியிலிருந்து எட்டாமிடமான விருச்சிக ராசிக்கு 11.10.2018 தேதி வியாழக்கிழமை பிறகு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆக போகிறார். வாக்கியப்படி பிரகாரம் 04.10.2018 வியாழக்கிழமை பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 04.10.2018, வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை, மற்றும் 11.10.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இரண்டு நாட்கள் பக்தர்களின் வேண்டு கோளுக்கிணங்க குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள், தன்வந்திரி பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
 
அனுக்கிரக குரு பகவான் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் என்ற பெயர்களுடன் 468 சித்தர்கள் மற்றும் 75 விதமான பரிவார மூர்த்திகளுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ வல்லலார், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், சீரடி சாயிபாபா சன்னதிகள் அருகே, குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி நாளில் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் மநக்குறைகளும் நீங்கும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி 04.10.2018 வியாழக்கிழமையன்றும் 11.10.2018 வியாழக்கிழமையன்றும் திருக்கணித பஞ்சாங்கப்படியும் குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் இராசி நேயர்கள் குருபுத்தி, குருதிசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம்  செய்து கொள்வது  மிகவும் சிறப்பு.  
 
இந்த குரு பெயர்ச்சி யாகத்தில் வைத்திய குருவும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம், டாலர், மற்றும் புகைப்படம் வைத்து  ஹோம பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பிரசாதங்கள் வேண்டுபவர்கள் மற்றும் ஹோம சங்கல்பத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நபர் ஒருவருக்கு ரூபாய் 500/- செலுத்தி பிரசாதம் பெற்று கொள்ளலாம். இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் பெற விரும்பும் நபர்கள் கூரியர் கட்டணம் ரூபாய் 100/- கூடுதலாக அனுப்பி பெற்று கொள்ளலாம். வெளிநாட்டில் வாழ்பவர்கள் மேற்கண்ட குரு பெயர்ச்சியில் பங்கேற்க விரும்பினால் கீழ்கண்ட முகவ்ரியில் தொடர்புகொள்ளவும்.

குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Vallalar's 196th Jayanti ......


வருகிற 05.10.2018 வெள்ளிக்கிழமைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்இராமலிங்க அடிகளார் எனும் வள்ளலாரின்196 ஆவது ஜெயந்தி விழா


மக்களுக்காக வாழ்ந்த வள்ளல் பெருமான் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் வள்ளலார் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் பிரார்த்தனைகளும், அன்னதானங்களும் நடைபெற்று வருகிறது.

வருகிற 05.10.2018 வெள்ளிக்கிழமை 196 ஆவது வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு கூட்டு பிரார்த்தனை, கோ பூஜை, யாகம், மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

இவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார். பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் பிறந்தனர். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

வள்ளலாரின் போதனைகள் :

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும். பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் :

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்ற அறியுறைகள் வழங்கியவர்.

வள்ளலார் கூறும் 42 விதமான பாவங்கள் :

* நல்லவர் மனதை நடுங்க வைப்பது.
* வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
* தானம் கொடுப்போரைத் தடுப்பது.
* சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
* மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
* குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
* ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
* தருமம் பாராது தண்டிப்பது.
* ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
* உயிர்க் கொலை செய்பவருக்கு உபகாரம் செய்வது.
* களவு செய்பவருக்கு உளவுகள் சொல்வது.
* பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
* ஆசை காட்டி மோசம் செய்வது.
* போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
* வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.
* பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
* இரப்பவருக்குப் பிச்சை இல்லை என்பது.
* கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
* நம்பியவரை நட்டாற்றில் கை நழுவுவது.
* பயந்து ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
* கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
* காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
* கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
* கருவைக் கலைப்பது.
* குருவை வணங்கக் கூசி நிற்பது.
* குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
* கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
* பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
* கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
* மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.
* கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
* அன்புடையவருக்குத் துன்பம் செய்வது.
* குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
* வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
* பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
* பொது மண்டபத்தை இடிப்பது.
* ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
* சிவனடியாரிடம் சீற்றம் கொள்வது.
* தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
* சுத்த ஞானிகள் மீது அவதூறு சொல்வது.
* தந்தை-தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
* தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள். இத்தகைய மாண்புகள்  பொருந்திய வள்ளல் பெருமானுக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஜெயந்தி விழாவில் அனைவரும் கலந்து கொண்டு குரு அருள் பெற வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203