Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 1, 2013

வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும்


ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி
ஸ்ரீ அன்னபூரணி
ஸ்ரீ சரஸ்வதிதேவி
ஸ்ரீ காயத்ரீ தேவி

ஆகஸ்ட் 9, 2013, வெள்ளிக்கிழமை அன்று ஆடி பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள அம்பிகைகளுக்கு முளைப்பயிருடன் வளையல் சாற்றும் விழா..

ஆடிப் பூரம் - அம்பிகை கருவுற்று இருப்பதையொட்டி முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.

முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள்.


நுண்ணோக்கியில்
தெரியும் உயிரணு
முளை கட்டிய
பச்சைப் பயறு


ஆன்றோர்கள்இவற்றை அறிந்திருந்ததால்இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருப்பார்களோ?

நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.

கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது வழக்கமல்லவா?
அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆகும்.

வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் & மனம்) கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக்கொள்வார்கள்.

கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம். ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப் பூரம்.
இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அம்பிகை வளையல் அலங்காரத்தில் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம்.

அம்பிகைக்கு பக்தர்கள் கைகளினால் வளையல்கள் வழங்கி சாற்றுவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை[யும், ஆனந்தத்தையும், வளமான வாழ்க்கையையும், நலமான ஆரோக்யத்தையும் தரவல்லது.

அகிலாண்ட ஈஸ்வரியான பார்வதி தேவி ருதுவான தினம்தான் ஆடி பூரமாக கொண்டாடப்படுவது என்பது மற்றொரு சிறப்பாகும். மேலும் ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் உதித்தாள்.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும் விருக்ஷமாக வளர்ந்தது. ஆடிப் பூர தினத்தில் பெண் தெய்வங்களை தரிசனம் செய்வோம் ! ஆனந்தமான நல்வாழ்வு பெற்றிடுவோம் !!

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள நவகன்னிகைகள்

இதனை முன்னிருத்திதான் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களுக்கு கொண்டுவந்துள்ள சீரிய திட்டமாக ஏழை மக்களுக்கு பயன்படும் விதமாக தமிழக அரசால் நடத்தப்பெறும் சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி எனலாம். சமத்துவ பீடமான ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில் சமயப்பணி மட்டுமல்லாமல் சமுதாய பணிகளும் செய்துவரும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆடி பூரத்தை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள பெண் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்து சாற்றிய வளையல்களையும், சௌபாக்ய பொருட்களையும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகபிரசவம் நடைபெறவும், தம்பதிகள் மகிழ்ச்சி அடையவும் வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் சம்பிரதாயங்களும், பாரம்பரியங்களும் மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்திலும், அதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறும் விதத்திலும், இந்து சமயத்தில் உள்ள அரிய பொக்கிஷங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகையிலும் இந்த ஆடி பூர விழா காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

இம்மாதிரியான பிரார்த்தனைகள் வாழ்வியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கும், அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படும் வகையில் அமையும் என்று ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ பாரத மாதா
ஸ்ரீ மகிசாசுர மர்த்தினி
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி
ஸ்ரீ மரகதாம்பிகை

No comments:

Post a Comment