Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, July 9, 2013

மழைநீர் சேகரிப்புக்குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
மழைநீர் சேகரிப்புக்குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…

ஜூலை 9, 2013 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் மழைநீர் சேகரிப்புக்குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஸ்வாமிகள் கூறியதாவது… இயற்கையை பாதுகாக்கவும், மனவளம், மழைவளம், குறையாமல் இருக்கவும், தண்ணீர் தட்டுபாடுகள் இல்லாமல் இருக்கவும், மின்சாரம் குறைவின்றி கிடைக்கவும், மழைநீர் சேமிப்பு மிகவும் முக்கியம்ன ஒன்றாகும்.
இன்றைய அரசு பலவித நலத்திட்டங்களை செய்துவருகின்றன, அவற்றுள் இந்த மழைநீர் சேகரிப்பு திட்டமும் ஆகும். எனவே நம்முடைய தன்வந்திரி குடும்பத்தினரும் இத்திட்டத்திற்கு உறுதுணையாக திகழ வேண்டும் என்றார் ஸ்வாமிகள்.
முதலில் நம்முடைய வீடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பின்னர் நம்முடைய பீடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகைதரும் நகர, கிராமபுற மக்களுக்கும், பக்தர்களுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும் மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்வந்திரி சேவகர்களுக்கு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் எடுத்துக் கூறினார். இதில் பலர் பங்கேற்றனர் என்று பீடத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment