Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, July 18, 2013

கோடி நாம ஜப வேள்வியில் ஆந்திர மாநில பீடாதிபதி பங்கேற்பு…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் கோடி நாம ஜபத்தில் ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினம், ஸ்ரீ மௌனானந்தா தபோவனம், ஸ்ரீ சௌபாக்ய புவனேஸ்வரி பீட பீடாதிபதி ஸ்ரீ ராமானந்த பாரதி ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். முன்னதாக அவரை பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.



பீடத்தில் அமைந்துள்ள அத்தனை தெய்வங்களையும் தரிசித்து, யோகா மையம் மற்றும் இயற்கை மருத்துவம், மூலிகை வனம், கோசாலா போன்ற அனைத்தையும் பார்வையிட்டு, தன்வந்திரி பீடத்தை பற்றி கூறுகையில் இப்பீடம் வேதாந்த வாழ்வியல் மையம் என்பதற்கு ஏற்ற வகையிலும், ஆரோக்ய பீடம் என்பதற்கு ஏற்றவாரும், மிகவும் தூய்மையாகவும், சிறப்பாகவும், உள்ளது என்றும், இங்குள்ள சேவகர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி சேவை புரிகிறார்கள் என்றும், இங்கு வந்து ஹோமம் செய்பவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார். மேலும் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்ற பீடம் என்ற வகையில் மிகவும் பெருமையடைகிறேன். கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அன்பு அழைப்பை ஏற்று கோடி நாம ஜப வேள்வியில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

No comments:

Post a Comment