![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgtmvyngEzZBZwbUBrHr2LRP3v5ymYm7U1qxmvc8VKXoOyZQJKXN0z3LyYQVBu6l2XfuAmw4PC_NmbOVn4ZHX9HJScWMVWWHWiok3UNGna8Knlezwb5eCjDFN21THH8hplqdcyA2nYr90/s320/haya+Creevar+copy.jpg)
தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சுமார் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார். மேலும் பீடத்தில் விசேஷமான முறையில் தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை பிரதிஷ்டை செய்து, கரிகோலம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளார். இவருடன் தேசிகரையும் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.
பிரதி மாதமும், விசேஷ தினங்களிலும் இங்கு ஹயக்ரீவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், வித்யா ஹோமம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும் காட்சி கொடுத்தவர், இவர் புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாக வும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள். குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்வி ஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹயக்ரீவர் ஹோமம் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற பிரார்த்திக்கிறோம்.
வருகை புரியும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுப்பொருட்கள், தேன், ஹோம ரட்சை, மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment