Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, September 6, 2013

தானம் செய்து தழைத்து வாழ்வீர்...

பக்தர்களின் கஷ்டங்கள் அகலவும், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவும், தோஷங்கள் நீங்கி ஆரோக்யத்துடன் வாழ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடத்தும் சிறப்பு ஹோமங்களின் பொழுது கீழ்கண்ட பொருள்களை அவ்வப்பொழுது ஏழை எளிய மக்களுக்குதானமாக அளித்து ஆசீர்வதித்து வருகிறார்.



தானங்களின் பெயர்களும் அதன் பலன்களும்…
தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்?
  1. கோதானம் - மறுபிறப்பிலும் புண்ணியம் மற்றும் குழந்தை பேறு
  2. நெய், எண்ணெய் தானம் - பிணி நீங்கும்
  3. அரிசி தானம் - பாவம் அகல
  4. ஆடை தானம் - ஆயுள் விருத்தி பெற
  5. அன்னதானம்தரித்திரமும், கடனும் நீங்க.
  6. பூமி தானம் - பிரமலோகம், ஈஸ்வர தரிசனம் கிடைக்க.
  7. கோதுமை தானம் - ரிஷி, தேவன் மற்றும் பிதுர்கடன்  தீர
  8. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாக.
  9. தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்க.
  10. வெள்ளி தானம் - மனக்கவலை நீங்க.
  11. தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாக.
  12. நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாக.
  13. பால் தானம் - துக்கம் நீங்க.
  14. தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்பட.
  15. தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேற.
  16. பழங்கள் தானம்புத்தியும், சித்தியும் கிடைக்க.
  17. தண்ணீர் தானம் - சந்ததோஷம் மிக
  18. நவதான்ய தானம் – நட்சத்திரம் மற்றும் நவகிரஹ தோஷம் நீங்க.
இவை தவிர குடை, பாதரட்சை, தலையனை, போர்வை, புத்தகம், மணி, பஞ்ச பாத்திரம் போன்ற தசதானங்குளும் சாந்தி ஹோமங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட எந்த பொருள்கள் தானம் செய்தாலும் அதற்கான பலன்கள் நமக்கும், அடுத்துவரும் சந்ததிகளுக்கு போய் சேரும் என்பதில் ஐயமில்லை. எதிர் காலம் என்பது நமது ராசி,  நட்சத்திரம் மற்றும் பூர்வ புண்ணியத்தை பொறுத்தே உள்ளது, கிரகங்களின் மாறுபாடுகளால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்க பரிகாரங்களாக மேற்கண்ட தானங்கள் கொடுத்து சரி செய்யலாம்.

தாங்கள் தங்கள் நோய் தீரவும், கஷ்டங்கள் அகலவும், தொழில், உத்தியோகம், வியாபாரம், குழந்தைபேறு, பித்ரு தோஷம், முக்தி வேண்டுவோர், வழக்கு வியாக்ஞங்களில் வெற்றிபெற போன்ற மேற்கண்ட பலன்களுக்காக  மேற்கண்ட தானங்களை கொடுக்க விரும்புவோர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். 

குறிப்பு : தானத்தில் சிறந்தது கண்தானம், உடல் உறுப்பு தானம், இரத்த தானம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை - 632513. வேலூர் மாவட்டம்,
தொலைபேசி : 04172-230033. செல் : 9443330203
email : danvantripeedam@gmail.com
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment