Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 17, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், செப்டம்பர் 22ல், மங்களங்கள் நல்கும் மஹாசண்டி யாகம்

 
உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் மஹாசண்டி ஹோமம் செப்டம்பர் 22, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பலதரப்பட்ட ஹோம திரவியங்களும், மலர்களுடம, பழவகைகளும், பட்சணங்களும், பட்டு வஸ்திரங்களும், மாங்கல்யத்துடன் சௌபாக்ய பொருட்களும், சேர்க்கப்பட உள்ளது.

ஒருவர் மஹா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு அன்னை சண்டிகா தேவியை வழிபடும்போது அவருள்ளிருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை அழியும். சண்டியை உபாசிப்பவரின் அகம் குளிர்ந்திருக்கும். எக்காரியங்களிலும் வெற்றியே பெறுவர். மேலும் பித்ரு தோஷம், சாபங்கள் நீங்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட, தொழில் வளம்பெறும், எதிரிகள், சத்ருக்கள் தொல்யிலிருந்து விடுபடலாம், பல வகையான திருஷ்டிகள் நீங்குவதற்கும் மற்றும் எண்ணற்ற நல்ல பலன்கள் கிடைக்க வேண்டி இந்த மஹா சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தின் முடிவில் நடைபெற இருக்கும் சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை போன்ற பூஜைகளிலும் கலந்துகொண்டு, பித்ருக்கள் மற்றும் மூதாதைகள் ஆசி பெற்று அதன் பின் நடைபெறும் விசேஷ அபிஷேகத்திலும், சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மகிசாசுரமர்த்தினியின் அருளுடன் ஸ்வாமிகளின் ஆசிபெற்று பயன் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

இந்த ஹோமத்திற்கும், அன்னதானத்திற்கும் தேவையான வேண்டிய அனைத்து பொருட்களும் கொடுத்து உதவலாம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல்9443330203

www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

E-mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment