Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 30, 2022

Sri Kaarthaveeryajunar Jeyanthi vizha on 31.10.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீகார்த்தவீர்யார்ஜூனர்ஜெயந்தி விழா  நாளை 31ம்தேதி நடைபெறுகிறது.


வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.

இன்று 30ம்தேதி  ஞாயிற்றுக்கிழமை  பஞ்சமியை முன்னிட்டு  ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.  ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு நடைபெற்ற ஹோமம் மற்றும் அபிஷேக  பூஜைகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு   ஸ்ரீபஞ்சமுக வராஹியை மனமுருக  வழிபட்டு சென்றனர்.  
பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

 ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் ஜெயந்தி விழா
 இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பச்சைக்கல்லில் 4 அடி உயரத்தில் 16 கரங்களுடன்  நின்ற கோலத்தில்  தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்க்கு ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு  நாளை  31ம் தேதி திங்கள்கிழமை ஸ்ரீகார்த்தவீர்யார்ஜூனர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

விழாவை  ஒட்டி மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம் , பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு நவ கலச திருமஞ்சனம் ,புஷ்பாஞ்சலி, தீபசேவை  ஆகிய நிகழ்ச்சிகளும்,  இழந்த பொருளை மீட்டுத்தரும் பெருமாளும், சுதர்சன அம்சம் கொண்டவரும், ராஜாதி ராஜனாகவும், ஆயிரம் கைகள் உடையவர் என அழைக்கப்படுபவருமான ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

 ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் பூஜை மற்றும் ஹோமங்களில்கலந்துகொண்டால் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்கும், இழந்த செல்வநிலையைத் திரும்பப் பெறலாம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், அடகு வைத்தநிலம், நகையை விரைவில் மீட்கலாம், கடன் தீரும், பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
 
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






No comments:

Post a Comment