Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, October 27, 2022

Latcharchanai (27.10.2022 to 5.11.2022) at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்உலக மக்கள் நன்மைக்காக








லட்சார்ச்சனை


வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள்  லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இன்று 27ம்தேதி வியாழக்கிழமை தொடங்கிய இந்த லட்சார்ச்சனை  வருகிற 5ம்தேதி சனிக்கிழமை முடிய  நடைபெறுகிறது. லட்சார்ச்சனை தொடங்குவதை முன்னிட்டு   இன்று  ஆரோக்யலஷ்மி தாயார் சமேத மூலவர் தன்வந்திரி பெருமாள், உற்சவர் தன்வந்திரி  ஆகியோருக்கு குங்குமம், துளசி  ஆகியவை கொண்டு லட்சார்ச்சனை  நடைபெற்றது.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ள இந்த லட்சார்ச்சனையில்  பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பெருமாள், ஆரோக்யலஷ்மி தாயார் மற்றும் 89 பரிவார மூர்த்திகளையும் தரிசித்து   பயன் பெறலாம்.
 
மேலும் கந்தசஷ்டியில் 3 வது நாளான இன்று 27ம்தேதி  சத்ரு சம்ஹார ஹோமமும்,  பீடத்தில் கார்த்திகை பெண்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனான முருக பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த லட்சார்ச்சனை,ஹோமம்,பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளையும், ஸ்ரீ கார்த்திகைகுமரனையும் மனமுருக வழிபட்டனர்.

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment