Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, October 11, 2022

Highcourt Former Judge Visit at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சஞ்சீவினி புஷ்கரணி தீர்த்தக்குளத்தை முன்னாள் உயர்நீதிமன்ற  நீதிபதி ஜோதிமணி  பார்வையிட்டார்.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, சஞ்சீவினி புஷ்கரணி தீர்த்தக்குள திருப்பணிகள்  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று  அக்டோபர்  11ம்தேதி ( செவ்வாய்க்கிழமை)  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு  வருகை தந்த  சென்னை  உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையருமான டாக்டர்.பி.ஜோதிமணி, சுவாமி தரிசனம் செய்தார். 

பின்னர்  சஞ்சீவினி புஷ்கரணி தீர்த்தக்குள  திருப்பணிகளை  பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆற்காடுவழக்கறிஞர் சங்கர்  உடன் இருந்தார். 

முன்னதாக நீதிபதி அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது






No comments:

Post a Comment