Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, March 20, 2017

தன்வந்திரி பீடத்தில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ சூலினிதுர்கா,ஸ்ரீசொர்ணகாலபைரவர், ஆயுள்ஹோமம், மிருத்ஞ்ய ஹோமம் நடைபெற்றது..

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி பல்வேறு வகையான ஹோமஙகள் நடைபெற்றது.


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு  நடைபெற்ற இந்த ஹோமத்தில் பங்கேற்றவர்கள் சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும்சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் வெண்கடுகு, வால் மிளகு, வேப்பெண்ணையை கொண்டு சூலினி துர்கா ஹோமம், ஆயுள் ஹோம்ம் மிருத்திஞ்சய ஹோமம்  நடைபெற்றது. இதனை முதல் இரவு 7.00 மணி வரை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகம் மற்றும் சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் நடைபெற்றது.

பக்தர்கள் சொர்ண கால பைரவர் ஹோமத்தில் . தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன், போன்ற பல இன்னல்கள் நீங்கவும் பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரவும் உயர் பதவி கிடைக்கவும்பிரார்த்தனை செய்தனர்.இந்த யாகத்தில் பல்வேறு வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டு பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து  உளுந்து வடைமாலை சார்த்தப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். இநத யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ராஜேந்திரன். I.A.S  அவர்கள், ஆற்காடு தொழிலதிபர் திரு.J.L. லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்









No comments:

Post a Comment