Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 12, 2015

தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டபைரவர் யாகங்கள்…

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டபைரவர் யாகங்கள் 13.01.2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.

நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளை வேண்டி, காலை 10 மணி முதல் 01 மணி வரை சொர்ண பைரவர் ஹோமமும் மாலை 6மணி முதல் 7 மணி வரை அஷ்டபைரவர் சகித, காலபைரவர் ஹோமம் நடைபபெற உள்ளது. செல்வத்துக்கு அதிபதியான மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுத்தவர் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார் என்பது நாம் அறிந்ததே.

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்; அதனால், நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் மேலும் வழக்குகளில் வெற்றி பெறவும் தம்பதிகள் ஒற்றுமைக்கும் வெளிநாடு செல்வதற்கும் வியபாரம் தொழில் உத்தியோகம் மேம்படவும், செய்வினை, திருஷ்டி, மனதடைகள் நீங்கவும் ஐஸ்வர்யங்கள் பெறுக, மேற்கண்ட ஹோமங்கள்  நடைபெற உள்ளது.

இந்த ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து தோஷங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ ப்ரார்த்திக்கின்றோம்.

இதனைத் தொடர்ந்து மாலையில் பொங்கல் தினங்களை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை : 04172-230033 / 230274
வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment