Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 3, 2015

தன்வந்திரி பீடத்தில் 3வது நாளாக பத்துலட்சம் ஏலக்காய் கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் சிறப்பு அன்னதானத்துடன் நடைபெற்றது…








வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பத்து லட்சம் ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறவும், மாணவ, மாணவியர்களுக்குள் நல்ல ஒற்றுமை ஏற்படவும் வேண்டி மேற்கண்ட ஹோமம் நடைபெற்றது.

இதில் இன்று பூர்ணாஹூதியில் விசேஷ திரவியங்களுடன், இரண்டு இலட்சம் ஏலக்காய்கள் சேர்க்கப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
தன்வந்திரி குடும்பத்தை சேர்ந்த திரு. R.பட்டாபிராமன்-சென்னை, இந்த ஹோமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி திரு.மோகன், வேலூர், திரு. செங்கல்வராயன், சென்னை,  திரு. ஸ்ரீநிவாச பிரசாந்த், திருநின்றாவூர், மற்றும் திருமதி. ஷீலா நகநாதன் ஆகிறோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நிறைவாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பெற்றுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நாளை (4.01.2015) ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் 5.1.2015 திங்கட்கிழமை நாள் முழுவதும் நடைபெற உள்ள சிவ பஞ்சாக்ஷரி யாகத்தை முன்னிட்டு 4.1.2015 மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற உள்ளன. இத்தத்தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment