Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, August 7, 2018

Ekadasi Danvantri Homam, Herbal Abishekam (07.08.2018)......


தன்வந்திரி பெருமாளுக்குபஞ்ச மூலிகை திருமஞ்சனம்
நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் நோய் நீங்கி ஆரோக்யம் பெற இன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு, தன்வந்திரி ஹோமத்துடன் ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் தீர்த்தத்துடன், கரும்பு, அருகம்புல், சந்தனாதி தைலம், வில்வம் போன்ற தீர்த்தங்களுடன் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 46 லக்ஷம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி மந்திரங்களை கொண்டு, மந்திரமே யந்திரமாக விளங்கும் ஆரோக்ய பீடத்தில் 7அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பட்டுப் பீதாம்பரம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனியாக, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியுடன் சீந்தல்கொடியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி பக்தர்களுக்கு திருகாட்சி அருள்கிறார்.

பிரதி ஏகாதசி திதியில் நெல்லிப்பொடி அபிஷேகம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியில் மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு மருத்துவ குணம் கொண்ட நெல்லி பொடி அபிஷேகத்துடன் பலவகை மூலிகை தீர்த்தங்களை கொண்டு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும்.

பல்வேறு நோய் தீர பஞ்ச மூலிகை அபிஷேகம் :

டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கவும். கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரக்கவும்,  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும்,  நீரிழிவு நோயை தடுக்கவும், நெல்லிப்பொடி தீர்த்தம் கொண்டு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இரத்தம் சுத்தி அடையவும் கண் பார்வையில் தெளிவு பெறவும், இரத்த மூலம் நீங்கவும், சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகவும் தன்வந்திரி மூலவருக்கு அருகம்புல் சாரில் அபிஷேகம் நடைபெற்றது.

உடல் எடையைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், சுறுசுறுப்பாக இயங்கவும், கரும்பு சாரினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

உடல் சூடு தனியவும், மேக நோய்கள் விலகவும், மலட்டுத் தன்மை நீங்கவும் சந்தனாதி தைலத்தினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

கண் வலி, கண் எரிச்சல் நீங்கவும், காச நோய் மற்றும் தொற்று வியாதிகளை தடுக்கவும், வில்வ தீர்த்தத்தினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த யாகத்திலும் பூஜையிலும் தன்வந்திரி பெருமாளுக்குரிய சீந்தல்கொடி இலை, துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, நக்ஷத்திர விருட்ச இலைகள், தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சிப்பூ, பாரிஜாதம், தாமரை, அரளி, பல்வேறு மூலிகைகள், நெய், தேன், பச்சரிசி, வெள்ளம், சுக்கு, மந்தாரை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










No comments:

Post a Comment