Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, November 14, 2022

Bairavar Jeyanthi 1008 Kg Viboothi Abishegam on 16.11.2022 at SriDanvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 16ம்தேதி   கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள்.    இன்று ஹோமத்துடன் பூர்வாங்க பூஜை நடைபெற்றது.







வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில்  ஸ்ரீஅஷ்ட கால  மகா பைரவருடன்  நவ பைரவர்களாக காட்சி தரும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளனர்.


இது தவிர சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என  தன்வந்திரி   பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில்  பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.

அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  வருகிற ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1008 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெற உள்ளது.
எண்ணிலடங்காத பலன்களும், நோய் பயம் மற்றும் எதிரிகள்  தொல்லைகள் நீங்கிடவும் வேண்டி பக்தர்கள் இந்த விபூதி அபிஷேகத்தில்  பங்கேற்று ஸ்ரீ அஷ்டகால மகா பைரவரை வணங்கி  பயன் பெறலாம்.

இதற்கான  பூர்வாங்க பூஜைகள் இன்று 14ம்தேதி திங்கள் கிழமை  ஹோமங்களுடன் தொடங்கி நடைபெற்றது.

மேலும் 16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.

 இன்று நவம்பர் 14ம்தேதி (திங்கள்கிழமை) ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டதின் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு  ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமமும்,  பால், சந்தனம், நெய், மஞ்சள், பன்னீர் , திரவிய பொடி ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெற்றது.

ஹோமங்கள், பூஜைகள், அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமிகளை தரிசனம் செய்தனர்.
 
 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment