Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 3, 2020

365 Days - 365 Homam - 3rd Day Sapthanadhi Homam....

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமத்தின் மூன்றாவது நாளாக சப்தநதி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று 03.01.2020 வெள்ளிக்கிழமை சப்தநதி ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளம் வேண்டியும், நீர் நிலை ஆதாரங்கள் பெருகவும், பல்வேறு நன்மைகள் பெறவும், பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சப்தநதிகளுக்கு உகந்த புஷ்பங்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து நன்காவது  நாளான நாளை 04.01.2020 சனிக்கிழமை உலக க்ஷேமம், ப்ரஹ்ம ஹத்தி தோஷ நிவர்த்தி, ஞானம் மற்றும் பல நன்மைகள் பெற பாலா திரிபுரசுந்தரி ஹோமம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.   இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment