Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, August 25, 2015

சென்னையில் காளி யாகம், 3.09.2015 (வியாழன் முதல், சனி கிழமை) 5.09.2015 வரை நடைபெறுகிறது.

சென்னையில் காளி யாகம், 3.09.2015   (வியாழன் முதல், சனி கிழமை) 5.09.2015 வரை  நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் சார்பில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமீகள் சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அஞ்சா மார்க்கட்டிங் நிறுவனத்தில் மேற்கண்ட தேதிகளில் காலை மாலை இரு வேளைகளிலும் உலக நன்மைக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் மழை வேண்டியும் குடும்ப நலனுக்காகவும் சென்னை வாழும் மக்களின் நலனுக்காகவும் ஸ்ரீமகா காளி யாகமும் கால பைரவர் யாகமும்  நடைபெற உள்ளது.
 காக்கும் கடவுளான காளிஓம் ஹ்ரீம் மஹா காள்யை நமஹ
இவள் பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும்காளன் என்னும் சிவபெருமானின் துணைவி என்பதால் காளீ என்றழைக்கப்பட்டாள்காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற சொல்லிலிருந்து உருவானதுஉண்மையில் காலீ என்பதே சரியான உச்சரிப்பு ஆகும்காலீ என்பதன் பொருள் காலத்தை வென்றவள் என்பதாகும்மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும்நாமும் காலீ என்றே அழைப்போம்.

காளீ காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள்ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளேஇவற்றை போக்குவதும் இவளேகாலீ நேர்மையின் வடிவம்நாம் நேர்மையாக இருந்தால் காலீயை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாதுமாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்களே அழிவது நிச்சயம்.

காளீ ஞானத்தின் வடிவம்அறியாமை இருளை போக்குபவள்தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்குபவள்எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் பக்தர்களை காப்பவள்கருணையின் வடிவம்ஆனால் நமது பாரத நாட்டில் காலீயைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளனஅதாவது கா என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காளீயை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.

ஆனால் இது உண்மையல்லகா ளீஅன்னையின் வடிவம்தீமைகளை அழிப்பவள்வெற்றிகளை அளிப்பவள்காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள்இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும்கா ளீஞானத்தின் வடிவம்ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள்கல்வியையும் அளிப்பவள்துணிவை தருபவள்பயத்தை போக்குபவள்நோயிலிருந்து விடுவிப்பவள்நோய்களை போக்குபவள்மரணமிலா பெருவாழ்வு தருபவள்.

மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளேசிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே.

இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டுமனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காலீகாலீயின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சிகொல்கத்தா தட்சினேஸ்வரத்தில் காலீயை வழிபட்டு அவளின் அருள் பெற்ற பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே மிகச் சிறந்த உதாரணம்மகாகவி காளிதாஸ், தெனாலிராமன் போன்றோரும் இதில் அடக்கம்.
 
   காலபைரவர்: ஹோமம். சிறப்பு.

  “ஓம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ

காலபைரவர்:

பைரவர் என்ற பெயருக்கு தன்னை அண்டியவர்களின் எதிரிக்ளுக்கு பயத்தை உண்டாக்கி அண்டியவர்களை கண்ணின் இமை போல காப்பவர் என்பது பொருளாகும்முத்தொழில்களையும் செய்வதால் அவருக்கு பைரவர் என்று பெயர் வந்ததுபாவத்தினை நீக்குபவர் மற்றும் அடியார்களின் பயத்தினை போக்குபவர் என்றும் பொருள் உண்டுபைரவர் சிவனின் 64 வடிவங்களில் ஒருவர்அந்தகாசூரனை வதம் செய்ய இறைவன் எடுத்த வடிவமே பைரவர் ஆவார்இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்பவர்.

பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும்அதில் ஒருவர் தான் காலபைரவர்காலபைரவர் காலத்தை வென்றவர்காலச்சக்கரத்தினை இயக்குபவர்இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருக்கின்றனஇவரது மூச்சுக்காற்றிலிருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டாகினஇவற்றிலிருந்து தான் மற்ற காலக்கணித முறைகள் தோன்றின
காலபைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் பயங்கரமானவர்உக்கிரமானவர்ஆனால் தன்னை அண்டியவர்களை கண்ணின் இமை போல் காப்பவர்இவரே கோவில்களின் காவல் தெய்வம்இதனால் இவருக்கு சேத்திரபாலன் என்ற பெயரும் உண்டுஇவரது அதிகார ஆயுதம் திரிசூலம் ஆகும்இது முத்தொழில்களைக் குறிக்கிறதுசிவ வடிவங்களில் பாவத்தை பொடிப்பொடியாக்கும் வடிவம் பைரவரேஇவரது அருளின்றி சிவ வழிபாடு முழுமை பெறாதுசிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண இவரது அருள் மிகவும் முக்கியம்.

 lhகாலபைரவர் காலத்தையே மாற்றக் கூடியவர்அதாவது தன்னை அண்டியவர்களுக்காக அவர்களின் பாவ புண்ணிய கணக்கினை அழிக்கும் வல்லமை உடையவர்பாவம் மற்றும் புண்ணிய கணக்கை அழிப்பதன் மூலம் உயிர்களை பிறவி என்னும் கடலிலிருந்து மீட்பவர்பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு என்பது நிச்சயம்எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகிறதோ அப்போது தான் பிறவியிலா பெருநிலை கிட்டும்.


காலபைரவர் காலத்தின் தெய்வம்காலத்தினை இயக்குபவர்ஞானத்தினை அளிப்பவர்.  பயம் நீக்குபவர்இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றனஇருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார்பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும்சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களேசித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.


காலபைரவரின் வாகனம் நாய் ஆகும்இதற்கு ஞான ஞமலி என்றும் பெயர் உண்டுநாய்களுக்கு உணவளிப்பதும், அவற்றை பேணி பாதுகாப்பதும் ஒரு வகை பைரவ வழிபாடே ஆகும்காலத்தின் காவல் தெய்வம் என்பதாலேயே இவருக்கு காலபைரவர் என்று பெயர் வந்ததுகாலத்தை இயக்கும் பைரவர் காலபைரவர் ஆவார்.


இவ்வுலகில் பாவபுண்ணியங்களை அழித்து பிறவியிலா பெருநிலை அடைய நினைப்பவர்கள் காலபைரவரை தினமும் வழிபடவேண்டும்காலபைரவரை ஒவ்வொரு சிவத்தலத்திலும் காணமுடியும்அவரை வழிபட்டு நமது கர்ம வினைகளை அழித்து பிறவியிலா பெருநிலை பெறுவோம்.


தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அஷ்ட பைரவருடன் கூடிய கால பைரவருக்கு சன்னதியும் ஜஸ்வரிய கலசத்துடன் கூடிய ஜஸ்வரிய ப்ரத்தியங்கிரா தேவிக்கு சன்னதியும் உண்டு. இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ காளி தேவியின் யாகத்திலும் கால பைரவர் யாகத்திலும் கலந்து கொண்டு பயன் பெறும் படி கேட்டுகொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு.
ஸ்ரீ தன்வந்திரி சூரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. -632513

www danvantritemple.org--
www dhanvantripeedam.com
wwwdanvantripeedam@gmail.com
phone No, 04172-230033.230274/





No comments:

Post a Comment