Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 3, 2015

அஸ்வாரூடா வாராஹி ஹோமம் அழைப்பிதழ் 23.08.2015

அஸ்வாரூடா வாராஹி ஹோமம் அழைப்பிதழ்
வராஹம் எனும் பன்றி முகத்துடன் காட்சி தரும் அன்னை வாராஹி , பராசக்தியின் படைத்தலைவி ஆவாள். தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் என அனைவராலும் போற்றப்படுபவள். திருவானைக்காவலில் அன்னை அகிலாண்டேஸ்வரியாகவும், தசமஹா வித்யைகளில் அன்னை பகளாமுகியாகவும் அருள்புரியும் அன்னை வாராஹியின் சக்தி அளவிட முடியாதது. பார்ப்பதற்கு மிக உக்ரமாக காட்சி தந்தாலும், மிகவும் அன்பானவள். சப்த மாதர்களில் ஐந்தாவதாக தோன்றியவள். பராசக்தி அன்னை வாராஹியின் துணை கொண்டே 14 உலகங்களையும் வெற்றி கொண்டாள். ராஜராஜ சோழனின் வெற்றி தெய்வம் இவளே..
அன்னை அஸ்வாரூடா வாராஹி ராஜ்யத்தையே அளிக்க வல்லவள். பதவியையும், தைரியத்தையும் தருபவள், நம் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சத்ரு உபாதைகளிலிருந்து காப்பவள். மங்களகரமானவள். சர்வ மங்களங்களையும் அளிப்பவள்.திருமண தடை நீக்கி நல்வாழ்வு தருபவள். குழந்தை பேறு அளித்து மகிழ்ச்சியை பொழிபவள். பிணிகளை போக்கி ஆரோக்யத்தை அளிப்பவள். செல்வ சம்பத்துக்களை கொடுத்து துக்கங்களை துரத்துபவள். தர்மத்தை காப்பவள். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவாள்..
 நிகழும் மன்மத வருடம் ஆவணிமாதம்  06ம் தேதி 23,08,2015 நவமி திதியன்று ஞாயிறு கிழமை காலை  10.00 மணியளவில் அன்னை வாராஹியின் பரிபூரண அருளை வேண்டியும் லோகஷேமத்திற்காகவும் அன்னை வாராஹியின் வடிவங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவளும் அகிலத்தை காத்து ரட்சிக்கும் பராசக்தி அன்னை லலிதா பரமேஸ்வரியின் குதிரை படை தளபதியுமாகிய அஸ்வாரூடா தேவியின் சக்திமிகுந்த ஹோமமும்
காலை 7 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கும் நிகழ்ச்சி கணபதி ஹோமம், அஸ்வாரூடா ஹோமம், தொடர்ந்து தீபாராதனையும் பிரசாத விநியோகமும் நடைபெறும். அன்னை வாராஹியின் கிடைத்தற்கரிய இந்த ஹோமத்தில் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருளை பெற்று வளமுடன் வாழ அழைக்கிறோம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ  தன்வந்திரி ஆரோக்கிய பீடம் கீழ்புதுப்பேட்டை அனந்தலை மதுரா  வாலாஜாபேட்டை. 632513








No comments:

Post a Comment