
அசுரர்களை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வந்து ”தாங்கள் இட்ட வேலை முடிந்து விட்டது, மீண்டும் உத்தரவிடுங்கள்” என்றார். சிவபெருமானும் ”தற்போது உனக்கு வேலையில்லை நீ வருடத்தில் 8 நாட்கள் மட்டும் விழித்திருந்து மீதி நாட்கள் படுத்துறங்கி, விழித்திருக்கும் எட்டு நாட்கள் மட்டும் என்னை பூஜை செய்” என்றார். ஆகவேதான் வாஸ்துபகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் அமைந்திருக்கும்.
வாஸ்து விழிக்கும் நாளில் மக்கள் அவரை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும்.
இதுபோன்ற வீண்விரயங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலே புராணத்தில் சொல்லியுள்ள படி, வாலாஜாப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வாஸ்துபகவானை தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் உள்ளபடியே அமைத்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
முறையான வாஸ்துவின் நன்மைகள்
வாஸ்து முறையான கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் உருவாகும்.
மேலும் புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு, வாஸ்து பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம் போன்றவைகள் மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம், வாஸ்து நாளான 24.11.2014 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வாஸ்து பகவானுக்கு பூஜையும், வாஸ்து ஹோமமும் நடைபெற உள்ளது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment