Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, October 2, 2014

தன்வந்திரி பீடத்தில் கூட்டுப்பிரார்த்தனை ஹோமங்கள்…

இன்று காலை 10.00 மணியளவில் (02.10.2014) தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும், மக்களின் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் விரைவில் ஜாமினில் வெளிவந்து குற்றமற்றவர் என்ற தீர்ப்பு கிடைத்து மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், திரு. ஏழுமலை, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.முகமதுஜான் ஆகியோர் முன்னிலையில், நகரமன்ற தலைவர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 51 சக்தி பீட தீபம் ஏற்றி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், சரப ப்ரத்யங்கிரா யாகம், அஷ்ட பைரவர் யாகம் நடத்தினர். இதில் ஏராளமான மூலிகை திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், பலகார வகைகள், சித்ரா அன்னங்கள், பூசணிக்காய், மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டது.

நிறைவாக பட்டு வஸ்த்திரங்கள் பூர்ணாஹூதியில் சேர்க்கப்பட்டு சர்வமத கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஹோம பிரசாதம் பெற்று அன்னதானத்தில் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment