Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 1, 2013

தன்வந்திரி பீடத்தில் தத்த ஜெயந்தி விழா

தத்த ஹோமத்துடன் ஆயிரம் கையுடையானுக்கு ஆயிர நாம அர்ச்சனை…

இறையருளால், மும்மூர்த்தியர் அம்சமாக அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் அவதரித்தவர்தான் ஸ்ரீதத்தாத்ரேயர்.

மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். இடபமும், அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.

உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.
அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும்; விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீதத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

வருகிற 16.12.2013, 17.12.2013 திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன்  (ஆயிரம் கையுடையான்) கார்த்வீர்யார்ஜூனர் ஹோமமும், ஆயிரம் நாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெற்றுள்ளது. கார்த்த வீர்யார்ஜூனா அவதரித்த இடத்தில் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் யந்திரத்தை வைத்து ஹோமமும், விசேஷ பூஜைகளும் செய்து அந்த யந்திரத்தை தன்வந்திரி பீடத்தில் வைத்து பல பூஜைகளும், ஹோமங்களும் நடத்தி வருகிறார் கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தத்த ஜெயந்தி நாளில் அவரின் பிரதான சீடரான கார்த்த வீர்யார்ஜூனருக்கு செய்யும் பூஜையில் கலந்து கொண்டு பால் பிரசாதம் மற்றும் ஹோம பிரசாதம் பெருவது குருவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் மக்களுக்கு தேவையான 16 வகை செல்வங்களை இழந்ததை மீண்டும் பெறலாம்.

இந்த இரண்டு ஹோமங்களிலும் சகஸ்ர நாம அர்ச்சனையிலும், அபிஷேகத்திலும் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ.500 செலுத்தி குடும்பத்துடன் பங்கு பெறலாம்.

ஸ்ரீதத்தாத்ரேய காயத்ரி மந்திரம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தந்நோ தத்த பிரசோதயாத்.'

ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் காயத்ரி மந்திரம்
கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ  ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண
கதம் நஷ்டம்ச லப்யதே..

மேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது உண்மை.

மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை-632513
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172-230033 / 9443330203

No comments:

Post a Comment