Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, May 20, 2013

வேண்டிய வரத்தை வாரிவழங்கிய ஸ்ரீ தன்வந்திரி பகவான்…


வேலூர் மாவட்டம், வெண்பாக்கம் கிராமத்திலிருந்து இளம் தம்பதியர் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வந்திருந்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்தித்துத் தங்களது மனக் கவலையைப் பற்றி கூறலாயினர். தம்பதியர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்வாமிகள் சொன்னார், தன்வந்திரி பகவானை நினைத்து நீ புறப்பட்ட இடத்திலிருந்தே உனக்கு பகவானின் வரம் கிடைத்து விட்டது. கவலைப்படாதே பகவான் பார்த்துக்கொள்வார் என்றார்.

அதன்படி தம்பதியர் பீடத்தின் மூலவரான ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் தங்கள் மனக்குறையைக் கூறி ஏகமனதுடன் ப்ரார்த்தனை செய்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்றுச்சென்றனர்.

அதன் பிறகு அதே தம்பதியர் மீண்டும் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கையில் ஒரு குழந்தையுடன் வந்திருந்து எங்களது குழந்தைக்கு உங்கள் ஆசி வேண்டும் என்று ஸ்வாமிகளிடம் கூறினர்.  ஸ்வாமி கேட்டார் என்ன வேண்டுதலுக்காக என்று, அதற்கு அவர்கள் சொன்னார்கள், நாங்கள் முன்னர் வரும்போது தங்களிடம் எங்களுக்கு ஆண்குழந்தை வேண்டும் என்ற வேண்டுதல் வைத்திருந்தோம். அந்த வேண்டுதலை உங்கள் ஆசியால் எங்களுக்கு அழகான ஆண்குழந்தை கிடைத்திருக்கிறது என்றனர்.

அப்போது தம்பதியர் கூறினர், ஸ்வாமிகள் சொன்னீர்கள் பகவானை நினைத்து நீ புறப்பட்ட இடத்திலேயே பகவானருள் கிடைத்துவிட்டது என்று. அது உன்மைதான். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்குள் வந்த உடனேயே நாங்கள் இன்னும் அதிகமான புத்துணர்வை உணர்ந்தோம். எனவே எங்களுடைய வேண்டுதல் வீண்போகவில்லை ஸ்ரீ தன்வந்திரி பகவான் வேண்டியதை வேண்டியபடியே கொடுத்துவிட்டார் என்று கூறி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று ஆனந்தமாய் சென்றனர்.

No comments:

Post a Comment