Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 7, 2023

Sri Lakshmi Kuberar Yagam at Sri Danvantri Arokya Peedam








 தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் 1 லட்சம் காசுகள் கொண்டு 12  நாட்கள் நடைபெறும் ஸ்ரீலஷ்மி  குபேரர் யாகம் இன்று தொடங்கியது.                                        வருகிற 11ம்தேதி கூடாரவல்லியை  முன்னிட்டு மாங்கல்ய பூஜை 

 வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி, நித்யஹோமங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில்  மகிழ்ச்சியுடன் மன நிம்மதி பெருக, கடன் தொல்லை  நீங்கி, உடல் பிணி,மனப்பிணி  நீங்கிட, லஷ்மி கடாட்சம் ஏற்பட்டு  தொழில், வியாபாரம், விவசாயம் வளம் பெற, திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு உண்டாகவும், செய்யும் செயல்களில் வெற்றிகள், பலவிதமான நன்மைகள் பெற்றிடவேண்டி  ஒரு லட்சம் காசுகள் கொண்டு  ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம் , பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது. 

இன்று ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், பூஜை ஆகியவை இன்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. 

 முன்னதாக இன்று 7ம்தேதி ஸ்ரீதன்வந்திரி, மஹா சுதர்சன,ஸ்ரீ மகாலஷ்மி, மிருத்யுஞ்சய ஹோமங்களும் நடைபெற்றன.

 மேலும்  இன்று  பகவான் ரமண மகரிஷியின் ஜெயந்தியை முன்னிட்டு  பகவான் ரமண மகரிஷிக்கு  சிறப்பு   அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

கூடாரவல்லி 

திருப்பாவையில் ‘ கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ’ என்ற 27வது பாசுரத்தை ஆண்டாள் நாச்சியார்  பாடிய நாள் கூடாரவல்லி எனப்படுகிறது.  இந்த பாசுரத்தை பாடியதும் கோதை நாச்சியாரான ஆண்டாளுக்கு , பெருமாள் திருமண  பாக்கியம் அருளியதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆண்டாள் நாச்சியார் 30 பாசுரங்களையும் பாடி முடித்தார். 

ஆண்டாள்,  பெருமாளை  கணவராக பெற்ற நாள் இந்த கூடாரவல்லி என்பதால்  வருகிற  மார்கழி 27ம்தேதியான ஜனவரி 11ம்தேதி ( புதன்கிழமை) தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  மாங்கல்ய பூஜை  நடைபெறுகிறது.

மாங்கல்ய பூஜையில் , திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல மணமகனை பெறுவதற்கும், திருமணமான பெண்கள் கணவருடன் நல்ல அன்போடு, பிரிவு ஏற்படாமல்  வாழவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும்  மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.   மாங்கல்ய பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட  மாங்கல்ய சரடு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக  பீடாதிபதி.டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment