Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 15, 2019

Guru Purnima 2019


தன்வந்திரி பீடத்தில்குரு பூர்ணிமா சிறப்பு பூஜைகள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக நலன் கருதியும், மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களின் மகிமையை அறிந்து கொள்ளும் விதத்திலும், சீடர்கள் தன்னுடைய குருவை போற்றும் விதத்திலும் வியாச பூர்ணிமா என்றழைக்கப்படும் குரு பூர்ணிமா முன்னிட்டு வருகிற 16.07.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள குரு மஹான்களுக்கும், குரு தக்ஷிணாமூர்த்திக்கும் சிறப்பு ஹோமங்களுடன் விசேஷ ஆராதனைகள் நடைபெற உள்ளது.

குரு பூர்ணிமாவின் மகிமை :

பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குரு (ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிகளுக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா". குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள் ஆகும். குருவின் பேராற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனது குருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் துவக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. குருபூர்ணிமா நாளன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம்  கூறுகிறது.

குருபூர்ணிமா அன்று  செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல, பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள், ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.

“மாதா பிதா குரு தெய்வம்” என்பார்கள்,  இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம்.  குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகதத்துவம். சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா. இந்த சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு குருவின் துணையோடு யோகசாதனையை தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா. யோக பண்பாட்டில் இந்த திருநாள் ஆனந்தமான ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான 'ஞானத்தை' நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்?......

குருவால் மட்டும்தான் முடியும். குரு வெளியில் உலகத்தினருக்கு பிசைக்காரனாக தெரியலாம். அதனால் தானோ என்னவோ யோகிராம் போன்ற மகான்கள் தன்னைப் பிச்சைக்காரன் என்றே பிரகடனப்படுத்தி கொண்டார்கள்.  ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத ஞான பொக்கிஷம்.

எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞான செல்வத்தை அள்ளி தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு. தனது அக வாழ்விற்கு வழிகாட்டி தன்னையுணர வழிசெய்த அந்த தியாக தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்த கூடிய திருநாளே குருபூர்ணிமா.
குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞான செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோகரகசியம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வியாச பௌர்ணமி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஹோமங்கள் மற்றும் ஆராதனைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு குரு அருள் பெறும்படி வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment