Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 5, 2019

Guru Peyarchi Yagam 2019-2020


தன்வந்திரி பீடத்தில்குருபெயர்ச்சி மஹா யாகமும்குடும்ப க்ஷேம பூஜையும்.

(வருகிற 29.10.2019 - 05.11.2019 செவ்வாய்கிழமை நடைபெறுகிறது)

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 29.10.2019 செவ்வாய்கிழமை வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரு பெயர்ச்சி மஹா யாகமும், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற உள்ளது.லு மேலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 05.11.2019 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை குரு பெயர்ச்சி யாகமும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது. தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்கிய பஞ்சாங்க பிரகாரமும், திருக்கணித பஞ்சாங்க பிரகாரமும் இரண்டு முறை குரு பெயர்ச்சி யாகம் நடைபெற்று வருகிறது என்பது சிறப்பாகும்.

அனுக்கிரக குரு பகவான் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள், 468 சித்தர்கள், ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் மற்றும் 78 விதமான பரிவார மூர்த்திகளுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாவித்து வருகின்ற ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ வல்லலார், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், சீரடி சாயிபாபா சன்னதிகள் அருகே, குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

மனித வாழ்க்கையின் ஏற்றம், இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் என போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராக திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது. குரு பகவானுக்கு நடக்கும் ஹோம பூஜைகளில் பங்கேற்று இவரை வழிபடுவதின் மூலம் பணியில் நிலவும் சுணக்கங்கள் நீங்கி சாதகமான வேலையும், மன அமைதியும், திருப்தியான வேலையும் கிடைக்கும். மேற்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும், பிரச்சினைகள் நீங்கும், சிறந்த ஆரோக்கியம், அதிர்ஷ்டம் கிட்டும். எதிர்மறை ஆற்றல் நீங்கி எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழலாம், குரு தோஷங்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வும், வளங்களும், செல்வங்களும் கிடைக்கும், உங்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தி ஆகும், சிறந்த கல்வியும் செழிப்பும் பெருகும், அறிவு, வெற்றி பெற்று தொல்லைகள் நீங்கி வாழ குரு பகவானின் ஆசிகளைப் பெறலாம்.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான் 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி நாளில் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து, குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் மக்குறைகளும் நீங்கும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி 29.10.2019 செவ்வாய்கிழமையன்றும், திருக்கணித பஞ்சாங்கப்படி 05.11.2019 செவ்வாய்கிழமையன்றும் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபட வேண்டியும், சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம், இராசி நேயர்கள் குருபுத்தி, குருதிசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம்  செய்து கொள்வது  மிகவும் சிறப்பு.

இந்த குரு பெயர்ச்சி யாகத்தில் வைத்திய குருவும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம், டாலர், மற்றும் புகைப்படம் வைத்து ஹோம பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பிரசாதங்கள் வேண்டுபவர்கள் மற்றும் ஹோம சங்கல்பத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நபர் ஒருவருக்கு ரூபாய் 500/- செலுத்தி பிரசாதம் பெற்று கொள்ளலாம். இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் பெற விரும்பும் நபர்கள் கூரியர் கட்டணம் ரூபாய் 100/- கூடுதலாக அனுப்பி பெற்று கொள்ளலாம். வெளிநாட்டில் வாழ்பவர்கள் மேற்கண்ட குரு பெயர்ச்சியில் பங்கேற்க விரும்பினால் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

மேலும் வேண்டி ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம், இராசி நேயர்கள் குருபுத்தி, குருதிசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம்  செய்து கொள்வது  மிகவும் சிறப்பு.

பக்தர்கள் அனைவரும் குருப்பெயர்ச்சி மஹா யாகத்திலும் தொடர்ந்து நடக்கும் அபிஷேகம் ஆராதனைகளிலும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment