Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 29, 2018

இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம்..

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில்
இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம்
31.01.2018 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்துல் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி வருகிற 31.01.2018 புதன் கிழமை, தைப் பூசம், பௌர்ணமியை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இராகு கேதுவிற்கு பால், மஞ்சள் அபிஷேகத்துடன் அன்னா[பிஷேகம் நடைபெறுகிறது.

இராகு-கேது அன்னாபிஷேக மஹிமை :
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் மாலை மேற்கண்ட இராகு-கேது அன்னாபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு ஏற்படும் புற்று நோய் போன்ற எண்ணற்ற நோய்கள் அகலவும், உணவு குழாவில் ஏற்படும் நோய்கள் அகலவும், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கவும் போன்ற பல்வேறு விதமான தோஷங்கள் நீங்கவும் நோய் தீர்க்கும் அன்னபிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது
.
இந்த இராகு கேது அன்னாபிஷேகத்தில் பங்கேற்க விரும்பவர்கள் பால், மஞ்சள் போன்ற அபிஷேக பொருட்களும், அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களும், அர்ச்சனைக்கு வேண்டிய புஷ்பங்களும், பழங்களும், தீபத்திற்கு நெய், நல்லெண்ணை கொடுத்து தானம் செய்து சங்கல்பம் செய்துகொண்டால் இராகு கேது தோஷமும் கிரகண தோஷமும் நீங்கும்.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் :
நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் மக்கள் பிணித் தீர்க்கும் மருத்துவ பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம், தேசியக் கோயில், வாஸ்து பகவான் கோயில், தன்வந்திரி கோயில், சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில், லக்ஷ்மி குபேரர் பீடம், குருபீடம், தத்த பீடம், சித்தர்கள் பீடம் என்று பக்தர்கள் பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும்டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீ தன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 75க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகளும் 468 சிவலிங்க ரூபத்தில் சித்தர்களாக உள்ளன.

ராகு கேதுவுக்கு பிரதி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் :
அவற்றுள் ராகுகேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகுகேதுவாக தரிசனம் தரும் இந்த ராகுகேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகுகேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும். ராகு - கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்குத் தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மாவள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.


பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகுகேது பெயர்ச்சியும், ப்ரீத்தி ஹோமங்களும், காலசர்ப்ப யாகம், சர்ப்ப சாந்தி, நாகதோஷ நிவாரண பூஜைகளும் தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் விரும்பும் நாளிலும், விசேஷ தினங்களிலும் நடைபெற்று வருகிறது.  யாகத்தின் மூலம் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இராகு- கேது ப்ரீத்தி ஹோமங்களிலும் பூஜைகளிலும் அன்னாபிஷேகத்திலும் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment