Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, December 15, 2017

தைலாபிஷேகத்துடன் 108 கலச தீர்த்த அபிஷேகம்...

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் .
தைலாபிஷேகத்துடன் 108 கலச தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 14ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழாவும் 108 கலச தீர்த்த அபிஷேகம் இன்று 15.12.2017 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :


இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு முலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும் எள்ளு ஹோமமும் எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி ப்ரீத்திக்காகவும், பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும் இதர ருண ரோக நிவாரணத்திற்காக. இத்தகைய நல்லெண்ணெயினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும், பித்ரு சாபம் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழறை சனி அஷ்டம சனி அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும். வருடாந்திர தைலாபிஷேகம் பூர்த்தியுடன் இன்று 15.12.2017 வெள்ளிக் கிழமை 108 மூலிகை தீர்த்தத்தினால் தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு நோய் நிவாரண ஹோமமும் விசேஷ வழிபாடுகள் செய்யபட்டு தைலாபிஷேகம் நிறைவடைந்தது. இந்த விஷேசமான வைபவத்தில் எராளமான பக்தர்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment