Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, September 28, 2017

அஷ்ட லஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அஷ்ட லஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 30.09.2017 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி அஷ்டலட்சுமி மஹா யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நவராத்ரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மக்கள் ஐஸ்வர்யம் ஆனந்தம் ஆரோக்யம், பெற வேண்டி நடைபெற உள்ளது.
அஷ்ட லஷ்மி  யாகத்தில் கலந்து கொள்வதால்
 ஏற்படும் நன்மைகளும் சிறப்புகளும்
ஆதிலட்சுமி
ஆதி அந்தம் என்பார்கள். ஆதி என்றால் முதல் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த முதல் லட்சுமிதான் ஆதிலட்சுமி என்றழைக்கப்படுவது. இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள்.
தான்யலட்சுமி
ஆறு திருக்கரங்களுடன், கரங்களில் தானிய நெற்கதிர் மற்றும் கரும்பு உடையவளாய் கஜபீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள்இவள் உலகில் பசிப்பிணி தீர்ப்பவள். தானியங்களின் விளைச்சல் தருபவள். வயிறு சம்பந்தமான பிணி தீர்ப்பவள். இவளை வழிபட்டால் பசிப்பிணி போகும்.
தைரியலட்சுமி
மனத்திற்கு தைரியத்தைக் கொடுத்து தன்னம்பிக்கையூட்டுபவள். இந்த தைரியலட்சுமிக்கு வீரியம் அதிகம். செய்யும் காரியங்களில் வெற்றியும், மனோதைரியமும் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தேவி இவள்
சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள்சந்ததி வளர குழந்தைச் செல்வம் தந்து வரமளிப்பதால் சந்தானலட்சுமி என்று பெயர் பெற்றாள்.  சடையுடன் கிரீடத்தைத் தரிசித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம்  ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசியபடியும், விளக்கைக் கையிலேந்தியும்  நின்று கொண்டிருக்கின்றனர்இவளை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும்.
விஜயலட்சுமி
அன்னப் பறவையின் மீது வீற்றிருப்பவள் விஜயலட்சுமி. விஜயம் என்றாலே ஜெயம். வெற்றி என்று பொருள். தன்னை வணங்கி காரியம் தொடங்குபவர்களுக்கு வெற்றி, ஜெயம் அருள்பவள் இவளே.
வித்யாலட்சுமி
கலைவாணியும் லட்சுமியும் இணைந்து நிற்பவள்தான் இந்த வித்யாலட்சுமி. இவள். வித்யை என்பதற்கு ஞானத்தின் மூலம் கற்கும் வித்தைகள் என்று பொருள். இந்தத் திருமகளை வழிபட்டால் கல்வியும் வளரும், செல்வமும் வளரும்.
கஜலட்சுமி
இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற, தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கஜம் என்றால் யானை என்று பொருள். இருபுறமும்  யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்ற பெயர் அமைந்தது. கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என்றும் அழைப்பதுண்டு. கஜலட்சுமியின் உருவத்தை வீடுகளின் வாசல் நிலைப்படியில் பெரும்பாலும் காணலாம். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும் பெற விரும்புபவர்கள் கஜலட்சுமியை வணங்குங்கள்.
தனலட்சுமி
செல்வங்களை அள்ளியள்ளித் தரும் தனலட்சுமி இடது கரத்தில் கெண்டி வைத்துக் கொண்டும், வலது கரத்தில் தாம்பூல வெற்றிலை கொண்டும் காட்சி தருபவள். தன்னை நம்பி வருபவர்களுக்கு தனத்தை அளிக்கும் பாவனையே இந்த பாவனை.
ஆரோக்ய லஷ்மி
அஷ்ட லஷ்மிகளின் அனுக்கிரகம் பெற்றிருந்தாலும் அதனை அனுபவிக்க ஆரோக்ய லஷ்மியின் அருள் வேண்டி உள்ளதால் இவளை வணங்கி ஆரோக்யம் பெற்று ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட லஷ்மிகளின் அருள் பெற தன்வந்திரி பீடத்தில் விஜய தசமியன்று நடைபெறும் அஷ்டலஷ்மி யாகத்தில் கலந்து கொண்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஆரோக்ய லஷ்மியையும் கஜலஷ்மியையும் குபேர லஷ்மியையும் வழிபட்டு வாழ்வில் வளம் பெறப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டைஅனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


No comments:

Post a Comment