Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, July 22, 2017

Sahasra Chandi Yagam ( 1000 Chandi Homam)

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நாளை 

முதல்

சகஸ்ரசண்டி மகாயாகம்.

 23.07.2017 முதல்  30.07.2017 வரை எட்டு நாட்கள் 

நடைபெறுகிறது.


சர்வதேச தரச்சான்றிதழுடன் வேலூர் மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46  லட்சம் பக்தர்கள்  கைப்பட எழுதிய  54 கோடி  தன்வந்திரி லிகித ஜப  மந்திரங்களை  கொண்டு 9 அடி மூலவர்  தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி  தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன்  ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற  73 தெய்வங்களுடன் மகான்களும்  468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும் இரம்மியமாக  இயற்கை சூழலுடன்  மூலிகை வாசத் ஸ்தலமாக  அமைந்து  உள்ளது.
ஷண்மத  பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம்மருத்துவ சேவை கோ பராமரிப்பு  நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும்  பல்வேறு வகையான  பிரம்மாண்ட  யாகங்கள் நடைபெற்று  வருகிறது.  குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான  யாகங்கள், சதசண்டீ யாகம், 365  நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா  ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம்லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம்,நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம், 55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான  மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது. ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம்,  சத்ரு சம்ஹார ஹோமம்,  சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி  ஹோமங்களும் மாதம் தோறும்  கயிலை ஞானகுரு  டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி நடைபெற்று  வருகிறது.. 
இத்தகைய  சிறப்புகளுடன் யக்ஞபூமியாக திகழும்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மனநோய்உடல் நோய் ,தீர்க்கும் வகையில்  அம்மனுக்குரிய  ஆடி மாதத்தை  முன்னிட்டும் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும்  உலக மக்கள் அனைவரும்  ஆனந்தமாக  வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும்  நல்ல மழை பெய்து  விவசாயம் செழிக்க வேண்டியும்  என்ற  வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம்  என அழைக்கப்படும்  சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடத்தில் நாளை 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் )ஸ்ரீ ஜகன்மாதாவின் அருளால் உலக நன்மைக்காக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நிகழும் ஆடி மாத அமாவாசையில் இருந்து வளர்பிறை அஷ்டமி வரை எட்டு நாட்கள் அஷ்ட ஐஸ்வர்யம் பெறுவதற்கு சஹஸ்ர சண்டி யாகம் முப்பத்து முக்கோடி தேவதா ஆஹ்வான பூஜை ஹோமங்கள் அனைத்து ஜீவராசிகளின் ‌க்ஷேமத்தை குறிக்கோளாக கொண்டு 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை காலை மற்றும் மாலை இரண்டு வேளயும் (தேவி வாக்கின்படி _சுருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) சொல்படி எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நடைபெறும் இந்த யாகத்தில் எல்லோரும் கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி கேட்டுகொள்கிறோம்.இந்த யாகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், குரு மஹான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

23.07.2017 ஞாயிறு காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்‌ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

23.07.2017 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், 7.00 மணிக்கு பஞ்ச சூக்த பாராயணம், மங்களார்த்தி,சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்த்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம்.
24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
25.07.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் மற்றும் அர்ச்சனை, பூர்ணாஹுதி, இடும்பன் பூஜை, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.
25.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு துர்காஷ்டகம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்) மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
26.07.2017 புதன் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக் வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர்பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
26.07.2017 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவி மஹாத்மியம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
27.07.2017 வியாழக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர விசேஷ ஹோமம், ராகு கேது பெயர்ச்சி ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி,  மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
27.07.2017 வியாழக் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவிமஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம் பிரசாத விநியோகம்.
28.07.2017 வெள்ளி கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை கன்னியா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
28.07.2017 வெள்ளி கிழமை மாலை 6.00 மணிக்கு, தேவி மஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் குபேர ல‌க்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
29.07.2017 சனிக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், நவ துர்கா ஹோமம், சந்தான பரமேஸ்வரி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, வடுகபைரவர் பூஜை,  கன்னியாபூஜை, வசுவத்தார ஹோமம், மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
29.07.2017 சனிக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.
30.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், தசமஹாவித்யா ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக பைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
30.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சண்டி ஹோமம் பாவன உபநிஷத் உபசாரம், மஹா பூர்ணாஹுதி, வசோத்த்வாரா ஹோமம், மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், கலச புறப்பாடு, மஹா அபிஷேகம், விசேஷ ஆராதனை, ரித்விக் சம்பாவணை, அக்‌ஷத ஆசீர்வாதம், மஹா பிரசாதம் வழங்குதல்.
தன்வந்திரி பீடம்  ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி  பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும்
இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன் சகலஐஸ்வரியம்  பெற்று  இறையருளுடன்  ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எட்டு  நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது  என்றார்.

தொடர்புக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203



No comments:

Post a Comment