Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 13, 2016

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 13 ம் தேதி ஸம்வத்ஸர அபிஷேக விசேஷம் ஹோம சப்தாஹம் இனிதே ஆரம்பமானது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், 28ம் தேதி (13.11.2016) முதல்  கார்த்திகை மாதம் 4ம் தேதி (19.11.2016) வரையிலும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஸமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ள இதர 73 விதமான பரிவார தேவதைகளுக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி ஸம்வத்ஸராபிஷேகம் சப்தாஹமாக நடைபெற உள்ளது.

இதில் முதல் நாளான இன்று 13.11.2016 கோ பூஜைவேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கப்பட்டு யாகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியின் போது ‘Danvantri Arogya Peedam – A National Temple’ எனும் ஆங்கில நூலானது வெளியிடப்பட்டது. மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் அவர்கள் வெளியிட உயர்திரு. K.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர். டாக்டர். சதீஷ், சென்னை, திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை. டாக்டர். கோதண்டராமன், பஞ்சவடி, திரு.P.V.V.மூர்த்தி, முன்னாள் ஹிந்து நிருபர், வேலூர், டாக்டர். கோபால்-கனகலட்சுமி, பெங்களூர், டாக்டர் விஸ்வஜா, சென்னை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மாலை 5.00 மணியளவில் திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை. மற்றும் 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தன்வந்திரி பீடத்தில் உள்ள தன்வந்திரி தேரினை வடம்பிடித்து இழுத்தனர் என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








No comments:

Post a Comment