Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, August 19, 2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீலங்கா புனித யாத்திரை பயணம்


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சென்ற மாதம் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், டில்லி,போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள விஷேச ஸ்தலங்களிலும் சக்தி பீடங்களிலும் வாரணாசி, நைமியசாரண்யம்,அயோத்தி, மற்றும் ஜோதீர்லிங்க ஷேத்திரங்களில் உலக நலனுக்காக யாகங்கள் கூட்டு பிரார்த்தனைகள் செய்து மீண்டும் தமிழகத்தில் முக்கிய புனித ஷேத்திரமான இராமேஸ்வரம், கன்னியாகுமரி, குற்றாலம், திருநெல்வேலி போன்ற ஷேத்திரங்களில் உள்ள தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் செய்து யாத்திரையில் சேகரித்த புனித நீர்மற்றும் விஷேச திரவியங்களை கொண்டு 17.08.2016 அன்று 11 அடி உயரமுள்ள வேப்பமரத்திலான ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசரை தன்வந்திரி பீடத்தில்  பிரதிஷ்டை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ இராமபிரானின் அருள் மக்களுக்கு கிடைத்து இதன் மூலம் ஆரோக்யம் ஆனந்தம் பெற அயோத்தி பயணத்தை தொடர்ந்து வருகிற 26.08.2016 முதல் 04.09.2016 வரை இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் சுந்தர காண்ட பாராயணமும் நடைபெற உள்ளது. இப்பயணத்தில் இலங்கையில் உள்ள  கீழ்கண்ட ஷேத்திரங்களுக்கு ஸ்வாமிகள் பயணம்  பிரார்த்தனை செய்ய உள்ளார்...
முன்னேஸ்வரம், மாணாவரி, திருக்கேதீஸ்வரம்,தலைமன்னார்,( ராம சேது) ஜாஃப்பனா,, நாகதீபம், கிரிமலை,நகுலேஷ்வரம், நல்லூர் கந்தசாமி, கோவில்கன்யா வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரம், கோவில், அமிர்த காளி, மாமங்கேஸ்வரர், கோவில், ஹனுமந் தீர்த்தம், துணுவினா யக்கால யஹான்கலா  குருலூபோதா, சீதா கோட்டூவா அசோகா தீர்த்தம், அசோகா வாஷகாராம்போடா, நுவறேலிய காயத்ரி பீடம், திவுர்ம்புலா (சீதா அக்னி பரீஷா)ராவண நீர்வீழ்ச்சி, கதிர்காமம், உக்னகோடா, போன்ற ருமாசனா காளிஹிக்கலத்துள்ள சீனிகாம கொழும்பு( ஸ்ரீராமபிரான் இலங்கையில் கால் பதித்த ஸ்தலம் முதல் ஸ்ரீ சீதா தேவிஅக்னிபிரவேசம் செய்த புனித இடம் வரையிலான இராமாயண நடந்த ஊர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்தவாறே புனிதயாத்திரை ஸ்ரீசுந்தரகாண்டம் பாராயணம் செய்வது தீராத வாழ்க்கைப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் வல்லமையுடையது என ஸ்ரீமகா பெரியவா சொல்லியிருக்கறார். அப்படிப்பட்ட பவித்தரமான ஸ்ரீசுந்தரகாண்டத்தை அந்த சுந்தரகாண்ட நிகழ்வுகள் நடந்த இடங்களிலேயே பாராயணம் செய்தால்,,,,,,,,,,-?  இப்படிப்பட்ட மகத்தான புனித யாத்திரையை மேற்கொள்கிறார்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை..632513

No comments:

Post a Comment