Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, March 6, 2015

தன்வந்திரி பீடத்தில் மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு சதசண்டி யாகம்




வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் 05.03.2015 வியாழக்கிழமை காலை 4.00 மணிமுதல் 9.00 மணிவரை உலக நலன் கருதியும் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் மாசி மகம் பௌர்ணமியை முன்னிட்டும் இந்து சமய அறநிலையத்துறையின் வேண்டுகோளுக்கிணங்கவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவி மண்டபத்தில் பிரம்மாண்ட யாக குண்டம் அமைத்து 10க்கும் மேற்பட்ட வேத விற்பனர்களைக் கொண்டு சத சண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் 100க்கும் மேற்பட்ட மூலிகை திரவியங்கள், பழங்கள் புஷ்பங்கள் நெய் தேன் சௌபாக்ய பொருட்கள் விசேஷ நிவேதினங்கள் மற்றும் பலவிதமான திரவியங்களைக் கொண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான  திரு,முகமது ஜான், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு,G.பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.C.ஏழுமலை அவர்கள் மற்றும் வாலாஜா நகரமன்ற தலைவர் திரு,W.S.வேதகிரி, நகர செயலாளர் திரு,W.G.மோகன் மற்றும் நகர கிராம தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உடன் பிறப்புகள், அமைப்பு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் திரு.ஐயம்பிள்ளை அவர்கள் மற்றும் பலர் செய்தனர்.

மேற்கண்ட யாகத்தில் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா டாக்டர்.ஜெ,ஜெயலலிதா அவர்கள் நோயின்றி நீடுழி வாழவும் தடைகள் நீங்கி மீண்டும் முதலமைச்சராகி மக்களுக்கு மகத்தான உதவிகளை செய்ய வேண்டியும் பங்கேற்ற அனைவரும் ப்ரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment