Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, February 28, 2015

18.03.2015 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் மாபெரும் சுதர்ஸன யாகம்:-

சுதர்ஸன ஹோமத்தின் சிறப்பு:-
ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்;றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்.

ஸ்ரீசுதர்ஸன ஹோமம் குடும்பத் தலைவரின் ஜன்ம மாத ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை செய்யலாம்.

ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தில் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டிய ப்ரார்த்தனை செய்து கொள்ளலாம்.

சுதர்சன ஹோமம் செய்வதால் நமக்குக் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.
பலன்கள் இரண்டு வகைப்படும்:-

 1. த்ருஷ்ட பலன் 2. அதிர்ஷ்ட பலன்

1. த்ருஷ்ட பலன்: கண்கூடாகத் தெரியக்கூடிய அல்லது அறியக்கூடிய விஷயங்கள்
2. அதிர்ஷ்ட பலன்: நேரடியாகத் தெரியாதது, காலக்ரமத்தில் உணர்ந்து அறியக்கூடியது.
த்ருஷ்ட பலன்கள்:- 1. குறிப்பிட்ட நாளில் உடல் து}ய்மை பெருகிறது.
2. மனம் தூய்மை பெருகிறது.
3. இல்லம் தூய்மை பெருகிறது.
4. பிறரால் கவனிக்கப்படுகிறோம்.
5. பிறரால் மதிக்கப்படுகிறோம்.
6. பிறரரால் வாழ்த்தப்படுகிறோம்.
7. சுற்றமும் நட்பும் பாராட்டப்படுகிறது.
8. இதற்குண்டான செலவில் பணம் சென்றடைபவரின் குடும்பங்கள் பிழைக்கின்றன.
9. மனிதாபிமானம், மனிதநேயம் போன்றவை வெளிப்படுகின்றன.
10. பொருமை, தன்னடக்கம், ச்ரத்தை போன்ற சிறப்பான ஒழுக்கங்களை பேணும் வைராக்யம் வருகிறது.
11. தங்களின் பண்பு நலன்கள் பிறருக்கு அறியக் கிடைக்கிறது.
12. வந்திருந்தோரின் பண்பு நலன்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.
13. புதிய தகவல்களை அறியும் வாய்ப்பினைப் பெருகிறோம்.
14.மிகுதியான அன்னங்களால் சில ஜீவன்கள் பிழைக்க வகை செய்யப்படுகிறது.
15. சில பொருட்களின் நிலை மாற்றத்தால் ஏற்படும் ரசயான விளைவுகள்.
16.வீட்டைச் சுத்தம் செய்யும்போது சில பழைய பொருட்கள் செப்பனிடப்படுகின்றன.
17. காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கின்றன.
18. சில சமயம் அறிதான சிலருடைய நட்பு கிடைக்கின்றது.
19. தீய எண்ணம் உடையவர்கள் நட்பு  களையப்படுகிறது.
20. அறுசுவை உண்டியை விருந்தோடு உண்ணும் வாய்ப்பு கிடைக்கின்றது.
21. தாய் தந்தையர்மீது நாம்கொண்ட அன்பு மரியாதை இவை வெளியிட வாய்ப்பு ஏற்படுகிறது,

அதிர்ஷ்ட பலன்கள்: (இவற்றில் எவற்றிற்கு இந்த ஹோமம் காரணம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது)
1. மனோதிடம் கிடைக்கின்றது.
2. வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.
3. பகவத் ஸேவையின் பேரானந்தம் கிடைக்கிறது.
4. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு ஏற்படுகிறது.
5. பாபங்கள் தொலைந்து புண்ணியங்கள் கிட்டுகிறது.
6. சத்ருக்களின் பலங்கள் குறைகிறது.
7. நண்பர்களின் உதவி பெருகுகிறது.
8. நீண்டநாள் தீராத மனக் கவலை மாறுகிறது.
9. நீண்டநாள் தீராத வியாதி நிவாரணம் பெருகிறது.
10. சுப காரியங்கள் வந்து சேர்கின்றன.
11. மஹான்களின் தரிசனங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன.
12. எதிலும் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் தெரியத் தொடங்குகின்றது.
13. எதிர்பாராத இடங்களில் இருந்து நற்செய்திகள்.
14. சொத்துகள் வாஹன விவகாரங்கள் நல்லமுறையில் தீர்வு பெறுகிறது.
15. திடீர் பணவரவு, பொக்கிஷங்கள் ஆபரணங்கள் கிடைத்தல்.
16. எதிர்பார்த்ததைவிட சுலபமாக விண்ணப்பங்கள் நிறைவேறுதல்
17. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி ஒத்துழைப்பு கிட்டுதல்
18. நற்சான்றுகள் விருதுகள் பட்டயங்கள் கிட்டுதல்.
19. நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாபங்கள் தொலைந்து நற்கதிக்கு வித்தாக அமைகிறது.
20. சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் உண்டாகிறது.

No comments:

Post a Comment