Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 6, 2014

தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி P.N.பிரகாஷ் பங்கேற்பு…

வாலாஜா, ஜனவரி 5, 2014

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும், ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் விசேஷ ஹோமம் நடைபெற்றது. மேலும் சகல தேவதா காயத்ரி ஹோமமும் காலை 10.00 மணியளவில் துவங்கி 1.00 மணியளவில் கோ பூஜையுடன் நிறைவு பெற்றது. இந்த ஹோமத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.P.N. பிரகாஷ் மற்றும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு பாண்டுரங்கன் அவர்களும் மஹா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தன்வந்திரி பகவானையும், இதர 68 தெய்வங்களையும் தரிசனம் செய்தனர். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் பங்கேற்றனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.


No comments:

Post a Comment