Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, June 6, 2013

தன்வந்திரி பீடத்தில் மஹா அவதார் பாபாஜி

மஹா அவதார் பாபாஜி

அகத்திய முனிவர் மற்றும் ஆஞ்சநேயர்  போல்பாபாஜியும்  ஜீவ சஞ்சீவியாக மகா அவதாரமாக வாழ்கிறார். உலகமெங்கும் சென்று அருள் மழை பொழிந்து கொண்டு இருப்பவர்.பல ஞானிகளை உருவாக்கியவர்.

சித்தர் போகரின் அருமந்த சீடர் ! அஷ்டமா சித்திகளை பெற்றவர். பாபாஜி, போகரிடம் சிஷ்யராக, பல யோக சாதனைகளை, தியான கிரியைகளை பழகினார். பின் முருகப்பெருமானின் தரிசனம் பெற்றார்.

பொதிகை மலையில் அகத்தியரை நினைத்து  கடும்  தவம் இயற்றினார். அவர் காட்சி தரவில்லை. உடல் தளர்ந்த  போதிலும், மனம் தளராமல் அகத்தியரின் பெயரை உச்சரித்தவாறே இருந்தார்.

பின்பு அகத்தியர் காட்சி தந்து, பாபாஜிக்கு கிரியா, குண்டலினி, பிராணயாம தீட்சையை  அளித்து, பாபாவை பத்ரிநாத்துக்கு செல்லுமாறு பணித்தார். உலகம் அதுவரை அறிந்திராத ஒரு மாபெரும் சித்தராக பாபாஜி உருவாவதற்கு அன்று அகத்தியர்தான் அடித்தளம்  அமைத்தார்

இமய மலை தொடரில் உள்ள சஞ்சீவி மலையில், பாபாஜி கடும்தவம் செய்து "சொரூப சமாதி" அடைந்தார். பொன்னிற ஒளிவட்டம் அவரை சூழ்ந்து அமைந்தது. அவரது உடல் முதுமை, பிணி ஆகியவற்றில் இருந்து கடவுளின் அருளால் அறவே விடுபட்டது.

ஜீவாத்மாவின் கருவியாகபாபாஜி ஒரு சித்தராக, அரூபியாக மாறினார். அன்றில் இருந்து மக்களுக்கு இல்லறத்தில் இருந்து கொண்டே கிரியா யோகத்தை கற்று யோகிகளாக வாழ, வழிமுறை செய்தார்

கிரியா யோகத்தின் ஒளி விளக்காக மகா அவதார் பாபாஜி திகழ்கிறார்.
பாபாஜி, மீண்டும் கிரியா யோகத்தை புத்துணர்ச்சி பெறசெய்து , பல தவ புருஷர்களான ஆதி சங்கரர், கபீர் தாஸ், லாகிரி மகாசாயர், யுக்தேஸ்வர், பரமஹம்ச யோகாநந்தர்  மூலமாக இல்லறத்தில் ஈடுபட்ட மக்களும் கிரியா யோகத்தைக் கற்று முக்தி நிலையை அடைய க்ரியா யோகத்தை கற்று தந்தார்.

க்ரியா யோகம் க்ரியா யோக பயிற்சியை தகுந்த குருவின் மூலமாக தீவிரமாக செய்தால், அவர் தனது பிறப்பு, இறப்பு கர்ம வினைகளை கட்டுபடுத்தி தெய்வீக நிலையை சீக்கிரமாக அடைய  முடியும்.


அரை நிமிடம் செய்யும் ஒரு கிரியா, ஒருவருட பிறப்பு - இறப்பு ஜென்மத்திற்கு சமமான கர்மவினைகளை குறைக்கும். எட்டரை மணி நேர கிரியா பயிற்சி, ஆயிரம் வருட  பிறப்பு - இறப்பு ஜென்ம கர்மவினைகளை குறைக்கும்.

தன்வந்திரி பீடத்தில் அவதார் பாபா
இத்தனை சக்தி வாய்ந்த மஹா அவதார் பாபாவின் கிரியா சக்திகள் நம் மக்களும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தமது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவதார் பாபாவின் ஜெயந்தி தினங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் மஹா அவதார் பாபா சந்நிதியில் தன்வந்திரி யோகா பயிற்சி மையம் தொடங்கப்பட்டு யோகா பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment